வெறிநாய்க்கடி நோய் ஒரு வைரல் தொற்றாகும். இது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. இது விலங்கில் இருந்து விலங்குக்குப் பரவும் நோய். நாயில் இருந்து மனிதனுக்கு பரவுவது போல் பொதுவாகத் தொற்றுள்ள ஒரு விலங்கு கடிக்கும்போது உண்டாகிறது. மனிதர்களுக்குத் தொற்றேறி கடுமையான அறிகுறிகள் தோன்று முன்னர் தடுப்பு மருந்து கொடுக்க வில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக முடியும். வெறிநாய்க்கடி நோய் வைரஸ் நடுநரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. முடிவில் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுகிறது. புற நரம்புகள் வழியாக வைரஸ் மூளையை அடைகிறது. நடு நரம்பு மண்டலத்தை வைரஸ் அடைய வேண்டிய தூரத்தைப் பொறுத்து மனிதர்களில் நோயரும்பு காலம் பொதுவாக சில மாதங்களாக இருக்கும்.
தொற்று ஏற்படுவதற்கும், முதன்முதலில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கும் இடையில் பொதுவாக 2-ல் இருந்து 12 வாரங்கள் பிடிக்கும். வழக்கமான அறிகுறிகளில் அடங்குவன:
வெறிநாய்க்கடி நோய் வைரஸ் லிசாவைரஸ் வகையைச் சார்ந்தது. இது பாலூட்டிகளைத் தாக்கும். தொற்றுள்ள விலங்கில் இருந்து இவ்வைரஸ் மனிதனுக்குக் கடி, கீறல் அல்லது தோல் வெடிப்புள்ள இடத்தில் அல்லது கண்ணில் நோயுள்ள விலங்கு நக்குவது மூலமாக பரவும்.
வெறிநாய்க்கடி நோய் எவ்வாறு பரவுகிறது?
உடலுக்குள் புகும் ஒரு வைரஸ் நரம்பு முடிச்சை அடைவதற்குள் பெருகுகிறது. பின் அது தண்டு வடத்திற்கும் மூளைக்கும் (நடு நரம்பு மண்டலம்) செல்லுகிறது. நடு நரம்பு மண்டலத்தை அடைந்ததும் அது உமிழ்நீர் சுரப்பிகள், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளுக்குப் பரவும். மனிதர்களுக்கு இடையில் வெறிநாய்க்கடி நோய் பரவ முடியும் என்பது கொள்கை அளவில் இருந்தாலும் தொற்றேறிய உறுப்பு தானத்தின் மூலமே இதுவரை நடந்துள்ளது.
வெறிநோய்க்கடி நோயை அதன் வளர்ச்சி அடைந்த கட்டத்தில் கண்டறியும் சோதனைகளில் அடங்குவன:
நோயாளிக்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைப் பொறுத்தே மருத்துவம் அமைகிறது.
தொற்று ஏற்பட்டு 10 நாட்களுக்குள் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டால் நோய் வெற்றிகரமாகத் தடுக்கப்படுகிறது. சிகிச்சையில் அடங்குவன:
அபாயத்தில் இருப்போர்க்கு பாதுகாப்பளிக்கும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் தடுப்பு மருந்து, மனித இருதொகுதி உயிரணு தடுப்பு மருந்து (Human diploid cell vaccine (HDCV), சுத்திகரிக்கப்பட்ட கோழிக்கரு உயிரணு தடுப்புமருந்து (Purified chick embryo cell vaccine (PCECV) ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு மருந்து அளிப்பதற்கான அட்டவணை வருமாறு:
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
சாகாஸ் நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்...
அமீபியாசிஸ் நோயின் காரணங்கள் மற்றும் நோய் மேலாண்மை...
ஆந்த்ராக்ஸ் நோயின் காரணங்கள் மற்றும் மேலாண்மை முறை...
கயசனூர்க் காட்டு நோயின் (KFD) அறிகுறிகள், நோய்கண்ட...