மனவிறுக்கம் (Autism spectrum disorder (ASD) என்பது சிக்கலான நரம்புவளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாகும். சமூகப் புரிதலில் தடங்கல்கள், தொடர்பு சிக்கல்கள், கட்டுப்படுத்தப்பட்ட, திரும்பத் திரும்ப செய்யும் ஒரே மாதிரியான நடத்தை ஆகியவை இதன் கூறுகள். இது ஒரு மூளைக்கோளாறு. இது ஒருவரின் பிறரோடு தொடர்பு கொள்ளும் திறனைப் பாதிக்கிறது. இக்கோளாறுகள் பொதுவாக குழந்தைப் பருவத்தில் தொடங்கி வளர்ந்த பின்னும் தொடர்கிறது.
மனவிறுக்கத்தின் வகைகள்:
மனவிறுக்கக் கோளாறு பொதுவாக மூன்று வயதுக்கு முன் தோன்றி ஒருவருடைய வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். நாட்பட நாட்பட சற்று குணம் தெரியலாம். பிறந்து சில மாதங்களிலேயே இந்நோயுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உண்டாகப்போகும் பிரச்சினைகளின் கூறுகள் புலப்படும். சிலருக்கு 24 மாதம் வரை அல்லது அதற்கு மேலும் அறிகுறிகள் தென்படும். நோயுள்ள சில குழந்தைகள் 18-20 மாதங்கள் வரை இயல்பாக வளரும். பின் புதிய திறன்களைப் பெறுவது நின்று போகும் அல்லது இருக்கும் திறன்களையும் இழந்து போவர்.
மனவிறுக்கக் கோளாறுள்ள ஒரு குழந்தை:
மனவிறுக்கத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் அது மரபியல் மற்றும் சூழல் காரணிகளோடு தொடர்புடையதாக இருக்கலாம். இக்கோளாறுடன் தொடர்புடைய பல மரபணுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
மனவிறுக்க நோயாளிகளுக்கு மூளையின் பல பகுதிகளில் குறைபாடுகள் இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளன.
இநோயாளிகளுக்கு மூளையில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் செரோட்டோனின் அல்லது வேறு நரம்புக்கடத்திகள் இருப்பதாகப் பிற ஆய்வுகள் கூறுகின்றன.
மூளை வளர்ச்சியையும் மூளை உயிரணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் உள்ள குறைபாடுகளால் கருவளர்ச்சியின் போது இயல்பான மூளைவளர்ச்சியில் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாகவே மனவிறுக்கக் கோளாறுகள் தோன்றுகின்றன என்பதையே இவ்வசாதாரண நிலைகள் எல்லாம் உணர்த்துகின்றன. இதற்குக் காரணம் மரபணு செயல்பாடுகளின் மீது சூழல் காரணிகளின் தாக்கமாக இருக்கக் கூடும்.
இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ சோதனைகள் எதுவும் இல்லாத காரணத்தால் மனவிறுக்கத்தைக் கண்டறிவது கடினம். மருத்துவர் குழந்தையின் நடத்தை மற்றும் வளர்ச்சியைக் கொண்டே நோயைக் கண்டறிய முடியும்.
ஆயினும், சிறு குழந்தைகளில் மனவிறுக்கம் இருப்பதைக் காணும் சரிபார்க்கும் பட்டியல் போன்று, கேட்டறிந்து, தர்க்கமுறையில் மதிப்பீடு செய்தும், பொதுப் பரிசோதனை மூலமும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. ஆனால் மருந்துகள் மற்றும் சிறப்பு பயிற்சி மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.
ஆரம்ப கட்டத்திலேயே கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தை முன்னேற்றம் அடையலாம். குழந்தை பேசவும், நடக்கவும், பிறரோடு பழகவும் உதவி செய்யப்படும்.
ஆகவே, விரைவில் குழந்தைநல மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது முக்கியம்.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/26/2020
அலைக்கழிக்கும் மனக்கோளாறு பற்றிய குறிப்புகள் இங்கு...
டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்ற நோய்...
பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம் ...
அலைக்கழிக்கும் மனக்கோளாறு தொடர்பான தகவல்கள் இங்கு ...