யோகா என்பது ஒருவரது உள்மன பலத்தினை அதிகப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தும் முறையாகும். இம்முறையில் ஒருவர் தான் யார் என உணர வைத்துவிடும். யோகாவின் சமஸ்கிரத அர்த்தமாக இருப்பது “நுகம்”ஆகும். ஆகவே யோகா என்பது ஒருவரது தனி ஆன்மாவை கடவுளின் ஆன்மாவோடு இணைப்பதாகும். மகரிஷி பதஞ்சலி கூற்றின் படி யோகா என்பது ஒருவரது மனதினை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதாகும்.
அனைவரும் பயன்படுத்ததும் சிறப்பு இயல்பு கொண்டது யோகா மதம், பழக்கவழக்கம், சாதி, இனம், தேசம், பாலினம், வயது மற்றும் உடல்நிலைக்கு அப்பாற்பட்டது.
ஒருவர் புத்தகங்களை படித்தோ அல்லது குறிப்பிட்ட ஆடையை அணிவதினாலோ யோகி போல் தோற்றமலிக்கலாம் ஆனால் யோகி ஆகிவிட முடியாது. ஒருவர் முழுமையாக பயிற்சியெடுக்காமல் யோகியின் திறமைகளை பெற்று விடமுடியாது. எனவே தொடர் பயிற்சியில் (சாதனா) உடம்பிலும் மற்றும் மனதிலும் ஒரு முறையை ஏற்படுத்தி வாழ்க்கையை உயர்த்தும். இந்நிலையை அடைய பயிற்ச்சி எடுப்பவருக்கு கூர்ந்த விருப்பம் அவசியம் இப்பயிற்ச்சியை உயர்நிலை பயிற்ச்சியாளர் மூலம் மனநிலையை ஒருமுகப்படுத்தி எடுக்க வேண்டும்.
மனிதனில் விழிப்புணர்வு நிலையினை உண்டாக்க யோகா பயன்படுத்தப்படுகிறது. முழு விழிப்புணர்வு நிலையை அவன் விருப்பப்படாமல் அடைய முடியாது.
சிற்றின்பங்களான குடிபோதை, பொருள் ஈட்ட அதிகமாக வேலைசெயவது, உடலுறவில் அதிகமாக ஈடுபடுவது மற்றும் பிற பழக்கங்களால் உலக பிரச்சனைகளை மறக்க முயற்சிக்கின்றனர். இதனால் சுயநினைவற்ற நிலைக்கு தள்ளப்படுகினறனர். இந்த நிலைக்கு உட்பட்டவர்கள் யோகாவின் பயன்களை அடைய முடியாது. மேற்கத்திய மனோத்தத்துவ முறையில் நோய்களுக்கான காரணத்திற்கு மருத்துவம் செய்யாமல் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்வர்.ஆனால் இந்திய யோகிகள் நோயின் அடிமுதல் காரணங்களை அறிந்து நோயை முழுமையாக குணமாக்குவர்.. ஏமாற்றுக்காரர்களின் மருத்துவ முறையானது நோயை வைத்து முடிவுசெய்தது.மாஸ்லோவின் உளவியலானது மனித நலனை மையப்படுத்தியதாக இருந்தது.ஆனால் இந்திய உளவியலானது மனோத்தத்துவத்தினை மேம்படுத்தியது. யோகா மனிதனின் உளவியல் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உயரிய விழிப்புநிலையினை தரக்கூடியதாகும்.மேலும் இது உடல்நலத்துடன் ஆன்மீக வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
யோகாவின் முறையானது (ஜபம், கர்மா, பக்தி முதலியன) ஒருவரது வலியினை போக்ககூடியது. இதனை அறிந்து கொள்ள ஒருவர் யோகாவினை பற்றி நன்கு தெரிந்த அறிஞரிடம் கற்று கொள்ளவேண்டும். அவரும் அம்மாதிரியான முறைகளை கற்று தேர்ந்தவராக இருக்க வேண்டும். இம்மாதிரியான முயற்சிகளை மிக கவனமாக எடுக்கவேண்டும். இதற்கு தகுதியான ஆலோசகர் அல்லது முற்றும் அறிந்த யோகியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜப யோகா
இந்த முறையில் ஒருவர் தனது மனதை ஒருமித்து ஒர் புனித பெயரை அல்லது புனித ஓசை, மந்திரங்களான ஓம், ராமா, அல்லா, கடவுள் முதலியனவற்றில் ஏதாவது ஒன்றை திரும்ப திரும்ப கூறியும் அல்லது ஞாபகத்திற்கு கொண்டு வருவதாகும்.
கர்ம யோகாஇம்முறையில் நாம் செயல்படுத்தும் எந்த செயலுக்கும் அதன் பயன் கருதாமல் செயல்புரிவதாகும். இந்த சாதானாவில் யோகியானவர் எல்லா ஆசாபாசங்களையும் விட்டு முழுமனதுடன் அர்ப்பணிப்போடு ஆசைகளை தவிர்க்க வேண்டும்.
ஞான யோகாஇதன் மூலம் ஒருவர் தன்நிலை க்கும் பிற நிலைக்கும் உள்ள வித்யாசத்தை ஓலைச்சுவடிகள் மற்றும் வேதங்களை கற்றும், ஞானிகளுடன் பழகியும்,வாழ்ந்தும்,தியான பயிற்சியின் மூலமும் உணருகின்றனர்.
பக்தி யோகாஇம்முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தங்களை கடவுளின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்கள். உண்மையாக இதனை பயிற்றுவிப்பர்கள் நெறிமுறைகளை மனதில் வைத்துக்கொண்டு உலகின் தீய நோக்கங்களை அகற்றி வழிநடத்துதல் வேண்டும்.தனது,தான் என்ற எண்ணத்தை முற்றிலும் துறந்து எப்பொழுதும் அமைதியாக இருப்பர் இவர்கள் உலகத்தின் ஆசாபாசங்களை துறந்து பற்றற்ற வாழ்வு வாழ்வர்.
ராஜ யோகாராஜ யோகாவை “ஆஸ்தான யோகா” என அழைப்பர் இது அனைத்து மனித வளர்ச்சிக்கும் தேவைப்படும். அவை யாமம், நியாமா, ஆசனா, பிராணயாமம், பிரத்தியாகாரம், தரானா, தியானம் மற்றும் சமாதி ஆகும்.
குண்டலினிகுண்டலினி யோகா என்பது தந்திர சாத்திர கோட்பாடாகும். எல்லா உயிரினங்கள் தோன்றிய பொழுதே தந்திர சாத்திர கோட்பாடுகள் மற்றும் யோகிகள் மனித உடம்பில் அதிக அளவிலான சக்தி மூலாதார சக்கரத்தில் தேங்கியிருப்பதாக உணர்ந்தனர். இது ஏழு சக்கரங்களில் முதல் சக்கரமாகும். குண்டலினி சக்கரம் ஓர் சிறிய சுரப்பியான இது தண்டெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆண்களில் இவை சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் மலம் கழிக்கும் இடத்திற்கும் இடையில் உள்ளது. பெண்களில் இது கர்ப்பப்பையின் அடியில் உள்ளது. இதன் அதிக படியான சக்தியை யார் பெறுகிறார்களோ அவர்களை ரிஷி, திர்கதரிஷி, யோகி, சித்தர்கள் என பல பெயரிட்டு அழைக்கின்றனர். இது காலத்திற்கும், சமயத்திற்கும்கலாச்சாரத்திற்கும் ஏற்ப பலபெயர்களில் அழைக்கின்றனர்.
குண்டலினியை துவங்க வேண்டுமானால் யோகிகள் பயன்படுத்திய முறையினை கற்றுக் கொள்ள வேண்டும். அவை சக்திரியா, ஆசனா, பிராணயாமா, பந்தா, முத்திரா மற்றும் தியானம். ஆகும்.இவ்வாறு குண்டலினி முதலில் வெளிப்படும் பொழுது ஓர் வெடிப்பு போன்று மூளையில் தோன்றும். இதனால் இதுவரை மூளையின் செயல்படாத ,தூங்கிக்கொண்டு இருந்த பகுதிகள் செயல்பட துவங்கும். இதனால் பூ பூப்பது போன்ற (முறையில்) உணர்வு ஏற்படும்.
நாடியோகிகள் தங்கள் குறிப்புகளில் கூறுகையில் நாடிகள் என்பது சக்தி கடத்தப்படுவதாகும். இதனை மனரீதியாக மட்டுமே உணர முடியும். இவ் சக்தி பல முனைகளில் செயல்படும். ஒளி, வண்ணம், ஒலி, மற்றும் பிற காரணிகள். நாடிகளின் செயல்பாடுகள் ஆகியவை மிக பெரிய வலை பின்னல் ஆகும். ஏனெனில் யோகிகளாலேயே அதனை அறிந்து கொள்ள முடியவில்லை. அதனை அளக்கவும் முடியவில்லை. கோரக்க சித்தர் அல்லது கொரக்கா சமிட்டா மற்றும் அம்தா யோகா பிரப்திகா அவர்கள் 72,000 நாடிகள் உள்ளது என கூறுகின்றனர். இவை தொப்புளினை சுற்றி உள்ளது எனவும் அது மணிப்புரா சக்ரா என அழைப்பர். இவ்வாறு கூறப்படும் நாடிகளில் சுசும்மா மிக முக்கியமானதாகும். சிவசுவாந்தியா பத்து முக்கிய நாடிகளை வாசற்படிகளாக கூறுகின்றனர். அவற்றில் இடகலை,பிங்கலை, சுழுமுனை முக்கியமானதாகும். இவை அதிக ஆற்றல் வாய்ந்த மின் சக்தியை கடத்துகின்றது. இவ் சக்திகள் தண்டுவடத்தின் கீழ் உள்ள சக்கிராவை சென்று அடைகிறது.
கடைசியாக மாற்றப்பட்டது : 6/14/2020
யோகா மற்றும் யோகா சிகிச்சை பற்றிய தகவல்கள் இங்கு க...
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு அரசு மருத்துவக் கல...
யோகா செய்முறைகள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.
யோகா மூலம் நோய்த்தடுப்பு, நோய்க்கான சிகிச்சை மற்று...