Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு

Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு
india_flag

Government of India



MeitY LogoVikaspedia
ta
ta

காயம் ஏற்படுவதைத் தடுத்தல் (காயத்தடுப்பு)

Review in Process

Contributor  : Vikaspedia user29/04/2022

Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.

காயத்தடுப்பு

காயம் ஏற்படுவதை தடுத்தலைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?

ஒவ்வொரு வருடமும் 7,50,000 குழந்தைகள் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர். மேலும், 40 கோடி குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். பல காயங்கள் நிரந்தர இயலாமை மற்றும் மூளைச்சிதைவினை ஏற்படுத்துகின்றன. காயங்களே சிறு பிள்ளைகளில் மரணம் மற்றும் இயலாமையை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய காரணமாகும்

கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவை பொதுவான காயங்கள் ஆகும். பெரும்பாலான இவ்வகை காயங்கள், வீட்டிலோ அல்லது வீட்டிற்கு அருகாமையிலோ நடக்கின்றன. காயம் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதனை பெற்றோர்கள் அறிந்திருத்தால், பல காயங்களால் உண்டாகும் ஆபத்துகளை குறைக்க முடியும்.

முக்கிய குறிப்புகள்

ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமுதாயமும் காயம் பற்றி அறிந்திருக்க வேண்டியவை என்ன?

  1. பெற்றோர் மற்றும் பிள்ளைகளை கவனிப்பவர்கள், இளம் சிறுவர்களை கவனமாக கண்காணித்து, சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், பல மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.
  2. பிள்ளைகளை அவசியம் நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம் போன்றவற்றிலிருந்து தூரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  3. சிறு பிள்ளைகள் உயர ஏற விரும்புவர். மாடி படிகள், கட்டிட பால்கனி, கூரைகள், ஜன்னல்கள் மற்றும் விளையாடும் பகுதிகளை, பிள்ளைகள் கீழே விழா வண்ணம் அமைக்க வேண்டும்.
  4. கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகள் போன்றவை மிக மோசமான காயங்களை ஏற்படுத்தலாம். இவற்றை அவசியம் குழந்தைகளுக்கு கிட்டா வண்ணம் வைக்க வேண்டும்.
  5. சிறு பிள்ளைகள் பொருட்களை தங்கள் வாயில் வைக்க விரும்புவர். மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம், சிறிய பொருட்களை சிறு பிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம் உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க வேண்டும்.
  6. விஷம், மருந்து, அமிலம் மற்றும் மண்ணெண்ணை போன்றவைகளை குடிக்கப் பயன்படும் பாட்டில்களில் வைத்தல் கூடாது. இதற்கு என்று குறிக்கப்பட்ட பாட்டில்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அவைகளை சிறு பிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம், உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க வேண்டும்.
  7. சிறு பிள்ளைகள் மிக குறைந்த அளவு தண்ணீரிலும் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக மூழ்கிவிடுவர். சிறு பிள்ளைகளை ஒருபோதும் தண்ணீரிலோ அல்லது தண்ணீருக்கு அருகாமையிலோ தனியாக விட்டுவிடக்கூடாது.
  8. ஐந்து வயதிற்குட்பட்ட சிறு பிள்ளைகளுக்கு குறிப்பாக சாலைகளில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் செல்லும்போது, அவர்களுடன் அவசியம் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அவர்கள் நடக்க பயின்றவுடன், சாலைகளில் எப்படி பாதுகாப்பாக நடந்து செல்வது என்பதனைப்பற்றி அவசியம் கற்பிக்க வேண்டும்.

காயத்தடுப்பு குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

பெற்றோர் மற்றும் பிள்ளைகளை கவனிப்பவர்கள், இளம் சிறுவர்களை கவனமாக கண்காணித்து, சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், பல மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.

18 மாதங்கள் முதல் 4 வருடங்கள் வரை வயதுள்ள சிறுவர்களுக்கு மரணம் மற்றும் மோசமான காயங்கள் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது. பெரும்பாலான காயங்கள் வீட்டிற்குள்ளேயே நடக்கிறது. கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த முடியும்.

வீட்டில் ஏற்படும் காயங்களுக்கான முக்கிய காரணங்கள்

• நெருப்பு, அடுப்புகள், மின்சார அடுப்புகள், சமைக்கும் பானைகள், சூடான உணவுகள், கொதிக்கும் நீர், நீராவி, சூடான சதைப்பற்றுள்ள மாமிச உணவுகள், மண்ணெண்ணை விலக்குகள், இரும்புகள் மற்றும் மின்சாதனங்கள் போன்றவற்றால் ஏற்படும் தீக்காயங்கள்.

• உடைத்த கண்ணாடிகள், கத்திகள், கத்தரிக்கோல்கள் மற்றும் கோடறி போன்றவற்றால் ஏற்படும் வெட்டுக்காயங்கள்.

• கட்டில்கள், ஜன்னல்கள், மேசைகள் மற்றும் மாடிப்படிகளிலிருந்து வீழ்தல்.

• நாணயங்கள், பட்டன்கள் அல்லது திருகுமறைகள் போன்றவற்றால் ஏற்படும் மூச்சுத்திணறல்.

• மண்ணெண்ணை, பூச்சிக்கொல்லி, வெளுப்பான் மற்றும் சவுக்கார கட்டிகள் போன்றவற்றிலிருந்து வரும் நச்சுகள்.

• உடைந்த மின்சாதனங்களைத் தொடுதல், குச்சிகள் அல்லது கத்தியை மின் இணைப்புகளுக்குள் செலுத்துதல் போன்ற செயலகளால் ஏற்படும் மின்சார பாதிப்பு சுறுசுறுப்பான சிறு பிள்ளைகளுக்கு ஆபத்தான எந்த பொருளும் பாதுகாப்பாக, தூரமாக வைக்க வேண்டும்.

சிறு பிள்ளைகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கு செல்வதற்கு தடையாய் உள்ள வேலைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. சிறு பிள்ளைகளை கடினமான வேலை, ஆபத்தான கருவிகள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களுக்கு உட்படுத்துவது போன்ற செயல்களிலிருந்து அவசியம் பாதுகாக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 2

பிள்ளைகளை அவசியம் நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம் போன்றவற்றிலிருந்து தூரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்

தீக்காயம் மற்றும் ஆவியால் ஏற்படும் வெந்த புண்கள், பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்தான காயங்களுக்கு பொதுவான காரணங்களாகும். சிறு பிள்ளைகளை சமைக்கும் அடுப்புகள், கொதிக்கும் தண்ணீர், சூடான உணவு மற்றும் சூடான இரும்பு போன்றவற்றை தொடுவதிலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும். தீக்காயங்கள் பெரும்பாலும் மோசமான காயத்தையும் மற்றும் நிரந்தரமான தீக்காயத்தழும்புகளையும் ஏற்படுத்தும். சில, மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. பெரும்பான்மையான இந்நிகழ்வுகள் தடுத்து நிறுத்தக்கூடியவை.

கீழ்க்காண்பவைகளால் தீக்காயங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும

• சிறு பிள்ளைகளை நெருப்பு, தீப்பெட்டிகள் மற்றும் சிகரெட்டுகள் போன்றவற்றிலிருந்து தூரமாக வைத்துக் கொள்ளல்.

• அடுப்புகளை சமமான மற்றும் உயரமான இடத்தில் சிறு பிள்ளைகளுக்கு எட்டாதவண்ணம் வைத்துக் கொள்ளுதல். திறந்தவெளியில் சமைக்கும்போது, அடுப்புகளை தரையில் அமைக்காமல் மண்ணால் சிறிது மேடாக்கி அதின்மேல் அடுப்பை வைக்க வேண்டும்.

• சமைக்கும் பாத்திரத்தில் உள்ள கைபிடிகளை குழந்தைகளுக்கு எட்டாதபடி திருப்பி வைக்க வேண்டும்.

• பெட்ரோல், விலங்குகள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், அடுப்பு, பற்ற வைக்க பயன்படும் லைட்டர்கள், சூடான இரும்புகள் மற்றும் மின்கம்பிகளை பிள்ளைகளுக்கு எட்டாத தூரத்தில் வைத்தல். சிறு பிள்ளைகள் தங்கள் விரல்கள் மற்றும் மற்ற உடல் பாகங்களை மின் சாக்கட்டுகளில் வைத்தல் ஆபத்தானவை. மின்சக்தி சாக்கட்டுகளை அவசியம் பிள்ளைகள் தொடாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

• மின் கம்பிகளை அவசியம் சிறு பிள்ளைகள் கண்டறியக்கூடாத இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக இன்சுலேசன் இல்லாத வெறுமையான மின் கம்பிகள் மிகவும் ஆபத்தானவை.

தகவல் குறிப்பு 3

சிறு பிள்ளைகள் உயர ஏற விரும்புவர். மாடி படிகள், கட்டிட பால்கனி, கூரைகள், ஜன்னல்கள் மற்றும் விளையாடும் பகுதிகளை, பிள்ளைகள் கீழே விழா வண்ணம் அமைக்க வேண்டும்.

காயங்கள், எலும்புமுறிவுகள் மற்றும் தலையில் ஏற்படும் ஆபத்தான காயங்கள் போன்றவற்றிற்கு கீழே விழுதலே பொதுவான காரணமாகும். ஆபத்தான அளவில், கீழே விழுவதை கீழ்க்காண்பவைகளால் தடுத்து நிறுத்த முடியும்

• சிறு பிள்ளைகள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு ஏறுவதை தடுக்க வேண்டும்.

• படிக்கட்டுகள், ஜன்னல்கள் அல்லது முன்மாடங்களை வேலியிட்டு பாதுகாத்தல்.

• வீட்டை சுத்தமாகவும் மற்றும் வெளிச்சமாகவும் வைத்துக் கொள்ளுதல்.

தகவல் குறிப்பு 4

கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகள் போன்றவை மிக மோசமான காயங்களை ஏற்படுத்தலாம். இவற்றை அவசியம் குழந்தைகளுக்கு கிட்டா வண்ணம் வைக்க வேண்டும்.

உடைந்த கண்ணாடிகள், மோசமான வெட்டுக்காயங்கள், இரத்த இழப்பு மற்றும் நோய்தொற்று ஏற்படுத்தலாம். கண்ணாடி பாட்டில்களை அவசியம் சிறு பிள்ளைகளுக்கு கிட்டா இடத்தில் வைக்க வேண்டும். வீடு மற்றும் விளையாடும் பகுதிகளில் அவசியம் உடைந்த கண்ணாடிகள் இல்லாதபடி வைத்துக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு உடைந்த கண்ணாடிகளை தொடக்கூடாது என்பதனை அவசியம் கற்பிக்க வேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு உடைந்த கண்ணாடிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பற்றி அவசியம் கற்பிக்க வேண்டும்.

கத்திகள், ரேசர்கள் மற்றும் கத்தரிக்கோல்களை குழந்தைகளுக்கு கிட்டா நிலையில் வைக்க வேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு இவற்றை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதனை அவசியம் பயிற்றுவிக்க வேண்டும்.

கூர்மையான கம்பி, ஜல்லி போன்ற பொருட்கள், இயந்திர சாதனங்கள் மற்றும் துருப்பிடித்த பொருட்கள் மோசமான நோய்தொற்று கொண்ட இரணங்களை ஏற்படுத்தலாம். சிறு பிள்ளைகள் விளையாடும் இடத்தில், இதுபோன்ற பொருட்கள் இன்றி அவசியம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடைந்த பாட்டில்கள் மற்றும் பழைய டப்பாக்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக கழிவுகளை அவசியம் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

கற்கள் அல்லது பிற கூர்மையான பொருட்களை வீசியெறிவது, கத்திகள் மற்றும் கத்தரிக்கோல்களுடன் விளையாடுவது போன்றவற்றின் ஆபத்துக்களை பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறுவதின் மூலம் வீட்டைச் சுற்றி ஏற்படக்கூடிய பிற காயங்களை தடுத்து நிறுத்தலாம்.

தகவல் குறிப்பு 5

சிறு பிள்ளைகள் பொருட்களை தங்கள் வாயில் வைக்க விரும்புவர். மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம், சிறிய பொருட்களை சிறு பிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம் உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க வேண்டும்.

சிறு பிள்ளைகள் விளையாடும் மற்றும் தூங்கும் இடங்களை அவசியம் பட்டன்கள், மணிகள், நாணயங்கள், விதைகள் மற்றும் திருகுமானிகள் போன்ற சிறிய பொருட்கள் இல்லாத வண்ணம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வேர்கடலை, சிறிய எலும்புகள் அல்லது விதைகள் கொண்ட கடினமான உணவு மற்றும் இனிப்புகளை அவசியம் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாது.

சிறு பிள்ளைகளை உணவு வேளைகளில் அவசியம் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உணவினை சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது கிழித்தோ கொடுக்க வேண்டும்.

இருமுதல், வாயடைத்தல், உறத்த சத்தத்துடன் சுவாசித்தல், சத்தம் எழுப்ப இயலாத நிலை போன்றவை சுவாசித்தலில் பிரச்சனை மற்றும் மூச்சுத்திணரலை சுட்டிக் காட்டுகிறது. மூச்சுத் திணறல், வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கும் காரியமாகும். சிறு பிள்ளைகளில் இவ்வாரான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்களை பராமரிப்பவர்கள், உடனடியாக தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 6

விஷம், மருந்து, அமிலம் மற்றும் மண்ணெண்ணை போன்றவைகளை குடிக்கப் பயன்படும் பாட்டில்களில் வைத்தல் கூடாது. இதற்கு என்று குறிக்கப்பட்ட பாட்டில்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அவைகளை சிறு பிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம், உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க வேண்டும்.

நச்சுப் பொருட்கள் குழந்தைகளுக்கு மிகவும் மோசமான ஆபத்தாகும். வெளுப்பான் (அ) சலவைப்பொடி, பூச்சி மற்றும் எலி பாஷனம், மண்ணெண்ணை மற்றும் சோப்புகள் போன்றவை குழந்தையை கொல்லலாம் அல்லது நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பல நச்சுப் பொருட்கள், அவற்றை விழுங்காமலே ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவை. இத்தகைய நச்சுப் பொருட்களை நுகர்ந்தாலோ, குழந்தைகளில் தோலின் மேல் அல்லது கண்களுக்குள் சென்றாலோ அல்லது குழந்தையின் ஆடையினுள் சென்றாலோ அவை மரணம், மூளை சிதைவு, பார்வை இழப்பு அல்லது ஏதேனும் நிரந்தரமான காயங்களை ஏற்படுத்தலாம்.

நச்சுப்பொருட்களை குளிர்பானங்கள் அல்லது பீர் பாட்டில்கள், சாடிகள் அல்லது கிண்ணங்கள் போன்றவற்றில் போட்டிருக்கும்போது, சிறு பிள்ளைகள் அவற்றை தவறுதலாக குடித்துவிடலாம். அனைத்து மருந்துகள், வேதிப் பொருட்கள் மற்றும் நச்சுக்கள் போன்றவை அவசியம் அவற்றிற்கே உரியதான கண்டைனர்களில் நன்கு இறுக்கமாக முத்திரையிட்ட மூடியுடன் சேமிக்க வேண்டும்

அழுக்குநீக்கும் சோப்புகள், வெளுப்பான்கள் அல்லது சலவைப் பொடிகள், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டும் இடங்களில் அவசியம் வைத்து வைக்கக் கூடாது. அவற்றை நன்கு இறுக்கமான முத்திரையிட்ட மூடியிட்டு மற்றும் பெயர் எழுதி வைக்க வேண்டும். மேலும் அவற்றை அவசியம் சிறு பிள்ளைகள் பார்வைக்குப் படாதவண்ணம் மற்றும் கிட்டாதவண்ணம், கப்போர்ட் அல்லது பெட்டிகளில் வைத்து பூட்டி வைக்க வேண்டும்.

வளர்ந்தவர்களுக்கான மருந்துப் பொருட்கள் சிறு பிள்ளைகளை கொல்லலாம். மருந்துகள் அவசியம் சிறு பிள்ளைக்குப் பரிந்துரைக்கப்பட்டால் மாத்திரம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு போதும் பெரியவர்கள் மற்றும் பிற குழதைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை கொடுக்கக் கூடாது.

ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் உயர் எதிர்பொருட்களை அதிகளவிலோ அல்லது தவறாக பயன்படுத்துவது சிறு குழந்தைகளில் செவிட்டுத்தன்மையினை ஏற்படுத்தக்கூடும். மருந்துகளை அவசியம் சகாதாரப் பணியாளரின் பரிந்துரைகளின்படி மாத்திரம் உட்கொள்ள வேண்டும்.

தற்செயலான நச்சூட்டலுக்கு ஆஸ்பிரின் எனப்படும் மாத்திரை பொதுவான காரணமாகும். இதை அவசியம் குழந்தைகளுக்கு எட்டாத இடத்திலும் மற்றும் அவர்கள் பார்வைக்கு படாதபடியும் வைத்து வைக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 7

சிறு பிள்ளைகள் மிக குறைந்த அளவு தண்ணீரிலும் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக மூழ்கிவிடுவர். சிறு பிள்ளைகளை ஒருபோதும் தண்ணீரிலோ அல்லது தண்ணீருக்கு அருகாமையிலோ தனியாக விட்டுவிடக்கூடாது.

கிணறுகள், தொட்டிகள் மற்றும் வாளிகளில் உள்ள தண்ணீர் போன்றவற்றை அவசியம் மூடிவைக்க வேண்டும்.

பிள்ளைகள் சிறுவயதினராக இருக்கும்போதே நீந்த கற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வண்ணம் செய்வதினால் அவர்கள் நீரில் மூழ்குவது குறையும்.

குழந்தைகள் தனியாகவும் மற்றும் வேகமாக பாய்ந்தோடும் தண்ணீரில் நீந்தக்கூடாது என கற்பிக்கப்பட வேண்டும்.

தகவல் குறிப்பு 8

ஐந்து வயதிற்குட்பட்ட சிறு பிள்ளைகளுக்கு குறிப்பாக சாலைகளில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் செல்லும்போது, அவர்களுடன் அவசியம் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அவர்கள் நடக்க பயின்றவுடன், சாலைகளில் எப்படி பாதுகாப்பாக நடந்து செல்வது என்பதனைப்பற்றி அவசியம் கற்பிக்க வேண்டும்.

சிறு பிள்ளைகள் சாலைகளில் ஓடுவதற்கு முன் சிந்திப்பது இல்லை. குடும்பங்களில் உள்ளவர்கள் அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

சிறு பிள்ளைகள் அவசியம் சாலைகளுக்கு அருகாமையில் விளையாடக்கூடாது. குறிப்பாக, பந்தினை வைத்து சாலை அருகாமையில் விளையாடக் கூடாது.

சிறு பிள்ளைகளுக்கு அவசியம் சாலை ஓரங்களில் நடக்கவும் மற்றும் போக்குவரத்தினை கவனித்துச் செல்லவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சாலைகளை கடக்கும் போது, சிறு பிள்ளைகளுக்கு கீழ்க் காண்பவைகள் கற்றுத் தரப்பட வேண்டும

• சாலையின் ஓரத்தில் நில்.

• சாலையின் இரண்டுபக்கங்களையும் (திசைகளிலும்) பார்.

• சாலையை கடக்கும் முன் கார்களோ அல்லது மற்ற வாகனங்களோ வருகிறதா என கவனி.

• மற்றவரின் கைகளைப் பிடித்துக் கொள்.

• நடந்து செல், ஓடக்கூடாது.

சிறு பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும்படியாகவும் மற்றும் அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும் படி, வளர்ந்த பிள்ளைகளை அவசியம் ஊக்கப்படுத்த வேண்டும்.

சைக்கிள்களினால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களே வளர்ந்த பிள்ளைகளில் மரணம் மற்றும் காயங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது. குடும்பங்களில் உள்ளவர்கள் சைக்கிள் வைத்துள்ள சிறு பிள்ளைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி பயிற்றுவிப்பதினால் சைக்கிள்களினால் ஏற்படும விபத்துக்களை தவிர்க்க முடியம். இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது சிறுவர்கள் அவசியம் தலைக்கவசம் அல்லது பிற காதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும்.

காரில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும்போதும், மற்றும் கண்காணிப்பற்று திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் பயணம் செய்யும் போதும், சிறுவர்களுக்கு மோசமான காயங்கள் ஏற்படும் ஆபத்துள்ளது.

முதலுதவி ஆலோசனை

மருத்துவ உதவி உடனடியாக கிடைக்காத போது நிலைமை மோசமாவதை தடுத்து நிறுத்த அவசியம் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீக்காயங்களுக்கான முதலுதவி

• ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.

• தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்

• தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.

• தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.

• குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்

மின்சார பாதிப்புக்கான முதலுதவி

• ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.

• குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

கீழே விழுதல் மற்றும் சாலை காயங்களுக்கான முதலுதவி

• தலை மற்றும் தண்டுவடம், குறிப்பாக கழுத்துப் பகுதியில் ஏற்படும் காயங்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், அவை வாழ்நாள் முழுவதும் பக்கவாதம் அல்லது உயிரிழக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம். மேலும் காயம் ஏற்படுவதை தடுக்க, கழுத்து மற்றும் தண்டுவடத்தை அசைப்பது மற்றும் தலை மற்றும் பின்புற அசைவுகளைக் குறைக்க வேண்டும்.

• ஒரு குழந்தைக்கு அசைய முடியாமலிருந்தாலோ அல்லது அதிக வலி இருந்தாலோ, அக்குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். காயம்பட்ட இடத்தை அசைக்கக்கூடாது. இதை சமநிலைப்படுத்தி, தாங்கி நிறுத்தி, உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

• குழந்தை சுயநினைவை இழந்தால், அவள் அல்லது அவனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைக்கவும் மற்றும் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.

• மோசமான காயங்கள், சுளுக்குகள் (தசை பிடிப்புகள்) போன்றவற்றிற்கு, காயம்பட்ட இடத்தை குளிர்ந்த தண்ணீரில் மூழ்க்க வேண்டும். அல்லது, காயம்பட்ட இடத்தில் 15 நிமிடங்களுக்கு ஐஸ் வைக்க வேண்டும். தோலின் மேல் நேரடியாக ஐஸ் துண்டுகளை வைக்கக்கூடாது, பதிலாக, ஐஸ் துண்டுகளுக்கும் தோலுக்கும் இடையில் ஒரு அடுக்கு துணியை வைக்க வேண்டும். பின்னர், ஐஸ் துண்டுகளை அல்லது குளிர்ந்த நீரை நீக்கி, 15 நிமிடங்கள் கழித்து, பின்னர் அடிபட்ட இடத்தை குளிர்ந்த நீரில் மூழ்க்குவதோ அல்லது ஐஸ் துண்டுகளை வைப்பதையோ செய்ய வேண்டும். குளிர்ச்சி காயம், வீங்குதல் மற்றும் வலியினைக் குறைக்க உதவுகிறது

வெட்டுக்காயங்கள் மற்றும் இரணக்காயங்களுக்கான முதலுதவி

சிறிய வெட்டு மற்றும் இரணக்காயங்களுக்கு

• சுத்தமான அல்லது கொதிக்க வைத்து குளிர்விக்கப்பட்ட தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு காயத்தை கழுவ வேண்டும்.

• காயத்தை சுற்றியுள்ள தோல்பகுதியை வறட்சியடையச் செய்ய வேண்டும

• காயத்தை சுத்தமான துணியைக் கொண்டு மூடி, அதன் மேல் கட்டு போட வேண்டும்.

மோசமான வெட்டு மற்றும் இரணக்காயங்களுக்கு

• ஒரு சிறிய கண்ணாடித்துண்டடோ அல்லது மற்ற பிற பொருட்களோ காயத்தில் ஒட்டிக்கொண்டிருந்தால், அவற்றை எடுத்துவிட வேண்டாம். ஒரு வேளை அது இரத்தம் வடிதலை மேலும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தலாம். அத்துடன் அதை எடுத்துவிடுவதால் காயத்தை மிகவும் மோசமடைய செய்யலாம்.

• குழந்தைக்கு இரத்தம் வெளியேறுதல் மிக அதிகமாக இருந்தால், காயம்பட்ட இடத்தை மார்பு அளவிற்கு மேலாக தூக்கி, சுத்தமான துணியை மடித்து, காயப்பகுதியை (அல்லது காயத்தில் ஏதேனும் குத்திக்கொண்டிருந்தால் அதைச் சுற்று அருகாமையில்) அழுத்தவும். இரத்தம் வடிதல் நிற்கும் வரை அழுத்தியவண்ணம் வைத்திருக்க வேண்டும்

• தாவர மற்றும் மிருக வஸ்துக்களை காயத்தின்மேல் போடக்கூடாது. அவை நோய்தொற்றுவினை ஏற்படுத்தக்கூடும்.

• காயத்திற்கு கட்டுப்போட வேண்டும். காயத்தை இறுக்க கட்டுதல் கூடாது.

• குழந்தையை மருத்துவ மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும். குழந்தைக்கு டெட்டானஸ் ஊசி அவசியம் போட வேண்டும்.

மூச்சுத்திணறலுக்கான முதலுதவி

• பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.

• அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,

பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு

தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் உள்ள சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.

பெரிய குழந்தைகளுக்கு

உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.

தண்ணீரில் மூழ்குதல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கான முதலுதவி

• தலை அல்லது கழுத்தில் ஏதேனும் காயம் ஏற்பட நேரிட்டால், குழந்தையின் தலையை அசைக்க வேண்டாம். தலையை நகர்த்தாமல் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றவும்

• குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமட்டமாக படுக்க வைத்து, அவள் அல்லது அவன் தலையை பின்புறமாக இலேசாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு வாயின் வழியாக சுவாசக்காற்றை ஊத வேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு ஊதவேண்டும். மூன்று வினாடிகள் எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்கத் தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்

• குழந்தை சுவாசித்து, ஆனால் சுயநினைவு இல்லை எனில், அவள் அல்லது அவனை ஒருபக்கமாக சாய்த்து, படுக்கும் வண்ணம் உருட்ட வேண்டும். அப்படி செய்வதால் நாவு சுவாசத்தை தடை செய்யாது.

நச்சூட்டலுக்கான முதலுதவி

• குழந்தை நச்சுப் பொருளை விழுங்கிவிட்டால், குழந்தை வாந்திபண்ணும் படி செய்ய முயற்சிக்க வேண்டாம் அப்படிச் செய்வது குழந்தை மிகவும் நலிவடையச் செய்யலாம்.

• நச்சுப் பொருள் குழந்தையின் தோல் அல்லது உடைகளில் இருந்தால், உடையை களைந்து மற்றும் அதிகமான அளவு தண்ணீரை தோலின் மேல் ஊற்ற வேண்டும். தோலை பலமுறை முற்றிலுமாக சோப்பைக் கொண்டு கழுவ வேண்டும்.

• குழந்தையின் கண்களுக்குள் நச்சுப் பொருள் பட்டால், குறைந்தது 10 நிமிடங்களுக்கு சுத்தமான தண்ணீரை கண்களுக்குள் கவனத்துடன் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

• குழந்தையை உடனடியாக சுகாதார மையம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். முடிந்தால், நச்சு அல்லது நச்சுள்ள குப்பியை உடன் கொண்டு வர வேண்டும். குழந்தையை கூடுமானவரை அசையாமல் மற்றும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles
Current Language
মণিপুরি
मैथिली
ஆரோக்கியம்
மெனோபாஸ் காலம்

பெண்களின் உடலில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
முதியோர் பராமரிப்பு

முதியோர் பராமரிப்பு குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
காது… மூக்கு… தொண்டை… பிரச்சனைகள்

காது… மூக்கு… தொண்டை… பிரச்சனைகள் பற்றிய குறிப்புகள்

ஆரோக்கியம்
கண்ணிமைத் துருத்தல்

கண்ணிமைத் துருத்தல் நோய்களைப் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
கண் வேதியற் காயம்

கண் வேதியற் காயம் ஏற்படும் காரணம் மற்றும் நோய் மேலாண்மை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
இருதய நோயைத் தடுத்தல்

இருதய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Related Articles
Current Language
মণিপুরি
मैथिली
ஆரோக்கியம்
மெனோபாஸ் காலம்

பெண்களின் உடலில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
முதியோர் பராமரிப்பு

முதியோர் பராமரிப்பு குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
காது… மூக்கு… தொண்டை… பிரச்சனைகள்

காது… மூக்கு… தொண்டை… பிரச்சனைகள் பற்றிய குறிப்புகள்

ஆரோக்கியம்
கண்ணிமைத் துருத்தல்

கண்ணிமைத் துருத்தல் நோய்களைப் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
கண் வேதியற் காயம்

கண் வேதியற் காயம் ஏற்படும் காரணம் மற்றும் நோய் மேலாண்மை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
இருதய நோயைத் தடுத்தல்

இருதய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Lets Connect
Facebook
Instagram
LinkedIn
Twitter
WhatsApp
YouTube
Download
AppStore
PlayStore

MeitY
C-DAC
Digital India

Phone Icon

+91-7382053730

Email Icon

vikaspedia[at]cdac[dot]in

Copyright © C-DAC
vikasAi