மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம். கருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளி யேற்றப்படும்.
இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும் போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில்வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவது முண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. அமெரிக்காவி ல் 31.8% உம், கனடாவில் 22.5% உம் குழந்தை பிறப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறியப்படுகிறது. தற்போது இந்த குழந்தை பிறப்பானது மருத்துவ மனைகளிலேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது.
சாதாரண குழந்தை பிறப்பின்போது, பெண்களுக்கு ஆரம்ப நிலையில் மெதுவாகவும், அதிகரித்த இடைவெளியிலும் வயிற்றில் வலியெடுக்க ஆரம்பிக்கும். நேரம் செல்லச் செல்ல வலியின் அளவு அதிகரிப்பதுடன், வலிகளுக்கிடையிலான இடைவெளியும் குறைந்து செல்லும். இந்த வலியின் தன்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் வேறுபடும். இந்தத் தன்மை குறிப்பாக பிரசவம்பற்றிய பயம், மற்றும் ஆர்வத்தில் தங்கியிருக்கும். ஏற்கனவே குழந்தை பெற்றிக் கொண்ட அனு பவம், வயது, அவர்களின் சமூக அமைப்பு, அவர்கள் செய்யும் தொழில், இயற்பியல் சூழல், தயார்ப்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளும், இந்த வலியின் தன்மையை மாற்ற வல்லன.
குழந்தை பிறப்பின்போது சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வலியின் தன்மையைக் குறைக்க முடியும் என நம்பப்ப டுகிறது. மூக்கினால் மூச்சை எடுத்து, வேயினால் வெளியேற்றும் பயிற்சி யானது வலியைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. குழந்தை பிறப்பின் போது, எவ்வாறு ஒரு பெண் இருப்பது என்பதும் பெண்ணுக்கு பெண் வேறுபடும். சிலர் படுத்திருக்கையில் வலி குறைவாக இருப்பதாகவும், சிலர் எழுந்து நிற்கையில் குறைவதாகவும், வேறு சிலர் நீரினுள் அமர்ந்திருக் கையில் வலி குறைவதாகவும் உணர்கின்றனர்.
பெண்களில் குழந்தை பிறப்பானது மிகவும் தீவிரமான நேர்மறையானதும், எதிர்மறையானதுமான உணர்வுகளை வெளிப்படையாக காட்டக் கூடிய நிலமையை ஏற்படுத்த வல்லது. பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணரக்கூடிய அதே வேளையில், சில பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பின்னான, மன அழுத்த ஒழுங்கின்மை ஏற்படும். அமெரிக்காவில், 70-80 %மான பெண்கள் குழந்தை பிறப்பிற்குப் பின்னர், ஏதொ ஒரு வகை கவலையை உணர்கின்றனர். 10% மான பெண்களுக்கு, மன அழுத்தம் ஏற்படுகின்றது. சிலரில் அசாதாரண, தொடர்ந்திருக்கும் மன அழுத்தம் காணப்படும். இந்நிலையைத் தவிர்க்க குழுவாக அமர்ந்து பெற்றுக்கொள்ளும் சிகிச்சை முறை மிகுந்த பல னளிக்கிறது. குழந்தை பிறப்பின்போது, பிறக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான உள்சூழலை விட்டு வெளியேறுவதும், வேறு பல காரணிகளும் மன அழுத்தத்தை கொடுக்கக்கூடும்.
யோனியூடான பிறப்பு
கருத்தரிப்பின் இறுதி நிலை
குழந்தை பிறப்பின்போது கருப்பை வாய் விரியும் ஒழுங்கு
குழந்தை பிறப்பு இயல்பாக, பிரச்சனைகளின்றி இரண்டாவது நிலைக்கு செல்லுமா என்பதை மருத்துவர்கள், உதவி யாளர்கள் பல காரணிகளை வைத்து ஆய்ந்து அறிவார்க ள். பொதுவாக இந்நிலையில் கருப்பை வாயானது 3 cm விரிந்திருக்கும். இந்நிலையில் சில பெண்களுக்கு கருப்பை சுருக்கம் சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடும். வேறு சிலரில் இந்த சுருக்கமே ஆரம்பிக்காமலும் இருக்கும். கருப்பை வாயில் விரிதல் தொடர்ந்து நிகழ்ந்தால் அது ஒரு இயல்பான பிறப்பு நடப்பத ற்கான சாத்தியத்தைக் காட்டும். கருப்பைவாய்ப் பகுதியில் இருக்கும் மென்சவ்வில் கிழிவு ஏற்படல், குருதிக் கறைபடுதல் என்பன இந்நிலையில் ஏற்படவோ அல்லது ஏற்படாமல் இருக்கவோகூடும். கருப்பையில் ஏற்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சுருக்கம் பிறப்பை இலகுவாக்க முயலும். கருப்பையின் மேல்பகுதி தசைகளில் ஆரம்பிக்கும் சுருக்கமானது கருப்பையின் கீழ்ப்பகுதியை மெல் நோக்கி இழுக்கும். அப்போது கருப்பை வாயும் மேல் நோக்கி இழுடும், இதனால் வாய்ப்பகுதி குழந்தையின் தலையை வெளி யேற அனுமதிக்கும் அளவுக்கு மேலும் விரிவடையும். முழு விரிதல் ஏற்பட்டிருப்பின் துவாரமானது 10 cm அளவில் விரிவடைந்திருக்கும்.
குழந்தை பிறப்பின் இரண்டாம் நிலை: குழந்தையை வெளி யேற்றல்
1. திருவெலும்பு
2. Ilium
3. Ischium
4. Pubic bone
5. Pubic symphysis
6. Acetabulum
7. Foramen obturator
8. Coccyx
Red line: Terminal line/pelvic brim
இந்த இரண்டாம் நிலையானது கருப்பை வாய்ப் பகுதியானது முற்றாக விரிவடைந்த நிலையில் ஆரம்பித்து, குழந்தை பிறந்ததும் முடிவடைகிறது. குழந்தை வெளியேறுவதற்கு ஆயத்தமாக கீழ்நோக்கி நகர்ந்திருப்பதால், கருப்பை வாய்ப் பகுதியில் அமுக்கம் அதிகமாகும். இவ்வமுக்கம் அதிகரிக்க அதிகரிக்க, கருப்பையில் ஏற்படும் சுருக்கமும் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொருமுறை வரும் வலிகளுக்கு இடையிலான இடைவெளி குறைவதுடன், வலி தொடரும் நேரமும் அதிகரித்துச் செல்லும்.
குழந்தையின் தலைப் பகுதி முற்றாக தாயின் இடுப்பு பகுதியிலுள்ள எலும்புகள். 1. திருவெலும்பு 2. Ilium 3. Ischium 4. Pubic bone 5. Pubic symphysis 6. Acetabulum 7. Foramen obturator 8. Coccyx Red line: Terminal line/pelvic brim
ம்பின் கீழ்ப் பகுதியிலுள்ள இடை வெளிக்கு வந்திருக்கும். குழந்தையின் தலையின் அகன்ற பகுதி, இடுப்பின் விளிம்பைத் (Pelvic brim) கடந்து வந்து, பின்னர் அங்கிருக்கும் ஒடுங்கிய பகுதியையும் கடந்து இடுப்பு வளைவைக் கடப்பதற்கு ஆயத்தமாகும். இந்நி லையில் குழந்தை வெளி உலகிற்கு வெளித்தள்ளப்படுவதற்கு தாயின் உதவியும் தேவைப்படும். தாய் தனது முயற்சியால் மூச் சையடக்கி குழந்தையை வெளித்தள்ள உதவ வேண்டும். அப்போது எரிவு அல்லது குத்துவது போன்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடும். குழந்தையின் தலை வெளியே வந்துவிட்டால், அது 4ஆம், 5ஆம், 6 ஆம் நிலைகள் சரியாக நிக்ழந்து விட்டதை உணர்த்தும்.
இந்த இரண்டாம் நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் முயற்சிக்கு ஏற்ப சிறிய வேறுபாடு காணப்படலாம்.
குழந்தை பிறப்பின் மூன்றாம் நிலை: நஞ்சுக்கொடி வெளி யேற்றல் பிறந்திருக்கும் குழந்தை (தொப்புட்கொடி இறுக்கப்படுவதற்குத் தயாரான நிலையில்)
இந்நிலையில், குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய பின்னர் நஞ்சுக்கொடியானது வெளியேற்றப்படும். பொதுவாக இது குழந்தை வெளியேறிய பின்னர் 15-30 நிமிடங்களில் நிகழும். நஞ்சுக்கொடி வெளியேறிய பின்னர் கருப்பைச் சுருக்கம் நிறுத்தப்படுவ தால், குருதி வெளியேறலும் நிறுத்தப்படும். பொதுவாக குழந்தை பிறப்பின்போது குருதியிழப்பானது 600 மில்லி லீட்டரை விடக் குறைவாகவே இருக்கும்.
இந்த நஞ்சுக்கொடி வெளியேற்றமானது, மருத்துவ உதவியின்றி, சாதாரணமான உடற் தொழிற்பாட்டினால் நிகழலாம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதாலும், கருப்பைதாய்ப்பாலூட்டல் (நஞ்சுக்கொடியை வலது பக்கமுள்ள பாத்திரத்தினுள் காணக்கூடியதாக இருக்கிறது)யின் மேற்பகுதியை பிடித்து விடுவதாலும், நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை ஏற்படுத்தலாம். அல்லது சில மருத்துவ உதவியுடனும் இது நிகழலாம். சில oxytocic பொருட்கள் பாவனையால் கருப்பை சுருக்கத்தை அதிகரிப்பதாலும், கொடியை இழுத்து விடுவதால் நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை துரிதப்படுத்தலாம். இவ்வகையாக தூண்டப்படும் நஞ்சுக் கொடி வெளியேற்றத்தால் குழந்தை பிறப்பின் பின்னரான குருதி இழப்பு குறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனாலும், இவ்வகையான தூண்டலின்போது, குமட்டல், வாந்தி, மன அழுத்த அதிகரிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இவ்வாறான தூண்டலின்போது உடனடியாக தொப்புட்கொடியை கருவிப் பாவனை மூலம் இறுக்கி வைத்தல் அவசியமாகின்றது.
ஆதாரம் : விதை விருட்சம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020