குறைபிரசவ விழித்திரை நோய், முன்னர் விழிவில்லை திசுமிகைப்பு என அழைக்கப்பட்டது. இது ஒரு குழல்மிகைப்பு விழித்திரை நோயாகும். அதிக அளவில் உயிர்வளிக்கு உட்படுத்தப்படும் குறைப்பிரசவக் குழந்தைகளை இது பாதிக்கிறது. இந்நோய் தானாகவே குறையும். ஆனால் பார்வைக் கோளாறுகளையும் பார்வையிழப்பையும் உண்டாக்கும் திறன் கொண்டது ஆகும். விழித்திரை இரத்தக் குழல்கள் இந்நோயால் ஒழுங்கின்றி வளர்ந்து விழித்திரை வடுக்களுக்கும் விழித்திரை விடுபடலுக்கும் காரணம் ஆகிறது.
கருவளர்ச்சியின் நான்காம் மாதம் வரை விழித்திரையில் இரத்தக் குழல்கள் உருவாகுவதில்லை. அதன்பின், பார்வைத்தகட்டின் ஹையலாய்ட் குழல்களில் இருந்து இரத்த நாளங்கள் வெளிப்பட்டு ஓரங்களை நோக்கி வளர்கின்றன. கருவளர்ச்சியின் எட்டாவது மாதத்தில் அவை மூக்கு ஓரங்களை அடைகின்றன. ஆனால் பொட்டு ஓரங்களைப் பிறந்து 1 மாதம் கழித்தே அடைகின்றன. விழித்திரையின் மேற்பகுதியில் இரத்தக் குழல்கள் அரைகுறை வளர்ச்சியை அடைந்திருப்பதால் உயிர்வளி அளிப்பதால் சேதம் அடையக் கூடும் - குறிப்பாகக் குறைப்பிரசவக் குழந்தைகளில். இயல்பாக விழித்திரையில் இரத்தக் குழல்கள் உருவாவதைக் குறைப்பிரசவம் பாதிக்கிறது. உயிர்வளி படவைத்தலால் விழித்திரை இரத்தக்குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணி (VEGF) கீழ்முக முறைப்படுத்தலுக்கு உள்ளாகி இரத்தக்குழல்கள் ஒடுக்கம்/சிதைவு அடைந்து இயல்பான விழித்திரை குழல்வளர்ச்சியை தேக்கம் அடையச் செய்கிறது.
குறிப்பிடத்தக்க நிலையில் உள்ள ROP, குறிப்பாக, பிறந்த குழந்தை ஆழ்கவனப் பிரிவில் தப்பிப்பிழைக்கும் சிறிய அளவிலான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் உடல்குறைபாட்டுடன் வாழ வழிவகுக்கிறது.
விழித்திரை இரத்தக் குழல்கள் இயல்பாக வளர்ச்சி அடைவதற்கு முன் பிறக்கும் குறைப்பேற்றுக் குழந்தைகளுக்கு ROP உண்டாகிறது. பிற விழித்திரை நோய்களைப் போலவே குறைப்பிரசவ விழித்திரை நோயிலும் பகுதி சார் குருதியூட்டக் குறை ஒரு பங்கு வகிக்கிறது.
முதிர்ச்சி அடையாத விழித்திரையில் உள்ள இரத்தக் குழல்கள் அழிவதற்கு அதிக அளவிலான உயிர்வளி படுதல் காரணமாகிறது. பிறப்பில் இருந்தே உயிர்வளி மிகைப்பைக் கட்டுப்படுத்தினால் ROP வளர்ச்சி அடையாது.
ROP-க்கான ஆபத்துக் காரணிகள்
பிறப்புக்குப் பின் இருக்கும் நிலையை விட கருப்பையில் இருக்கும் கரு மிகை உயிர்வளி பெற்று இருக்கும். குறைப்பிரசவக் குழந்தைகளில் விழித்திரைக் குழல்வளர்ச்சி குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணியால் (VEGF) தூண்டப்படும். எனினும், வளர்ச்சி அடையாத விழித்திரையில் உயிர்வளி ஊட்டப்படும்போது இரத்தக் குழல்கள் ஒடுங்குகின்றன. மேலும் அழிவுற்று இயல்பான விழித்திரை வளர்ச்சியும் தேக்கம் அடைகிறது. இதுவே மிகை உயிர்வளி குழல் வளரா நிலை.
ஆரம்பத்தில், விழித்திரை கருவிழிப்படல அடுக்கின் அடியில் இருக்கும் தந்துகிப் படுகையில் இருந்து பரவல் முறையில் உயிர்வளியைப் பெறுகிறது. விழித்திரை தொடர்ந்து அடர்த்தியாக வளர்ந்து வரப் போதுமான இரத்தக் குழல்கள் அதற்கு இணையாக வளர்வதில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இரத்தக்குழலற்ற விழித்திரை குருதியூட்டக் குறை அடைந்து இரத்தக்குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணியைத் தூண்டுகிறது. இதனால் மிகைஉயிர்வளி குழல்பெருக்க நிலை உருவாகி தமனி-சிரை தடமாற்றமும் புதுக்குழல் வளர்ச்சியும் ஏற்படுகிறது.
ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பொருத்தமான காலத்தில் சோதனையும் தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்
முனைப்புடைய ROP
ROP பரிசோதனை
36 மாதங்களுக்குள் பிறந்த அல்லது 1500 கிராமுக்கு குறைவான உயிர்வளி ஊட்டல் சிகிச்சை பெற்ற அனைத்துக் குழந்தைகளூம் பரிசோதிக்கப்பட வேண்டும். பின் – கருத்துரு வயதுகளான (post-conceptual age) 32-36 வாரங்களே பரிசோதனைக்கு மிகவும் பயனுள்ள காலம். ஏனென்றால், அதற்கு முன் விழித்திரை விடுபடல் அரிதாகவே நடைபெறும். மேலும் 36 வாரங்களுக்குப் பின் ROP முதன்முறையாக அரிதாகவே தோன்றும். பின் – கருத்துரு வயதான 31 வாரங்களுக்கு முன் பரிசோதனை குறைவான மதிப்புடையதே. ஏனெனில், கண்பார்வைகளை விரிவாக்க முடியாது. மேலும் விழியாடி குருதிநாளப் பெருக்கத்தின் காரணமாக விழிநீர்ம மூட்டமும் இருக்கும்.
வடுவுறும் ROP
மருத்துவ மேற்பார்வையின் கீழ் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அகற்றல் அறுவை சிகிச்சையே முக்கியமான மருத்துவம் ஆகும். இது பின்வருவனவற்றிற்காகப் பரிந்துரைக்கப் படுகிறது:
குருதிநாளமற்ற முதிரா விழித்திரை அகற்றல்
குளிர்மருத்துவம்: தொடக்கநிலை நோயின் பாதக விளைவுகளைக் குளிர்மருத்துவம் குறைக்கிறது. கூடுதல் விழித்திரை புதுக்குழல் உருவாதலின் ஐந்து அடுத்தடுத்த கடிகார மணிநேரம் அல்லது அடுத்தடுத்த அல்லாத எட்டு கடிகார மணிநேரம் என வரயறுக்கப்படுகிறது. அதாவது, ’கூடுதல்’ நோயுடன் தொடர்புடையதாக மண்டலம் 1-ல் நிலை 3 அல்லது மண்டலம் 2. இது சில நோயாளிகளில் விழித்திரை விடுபடல் நிகழ்வுகளைக் குறைக்கிறது; ஆனால் சில நோயாளிகளில் மருத்துவத்துக்குப் பின்னும் விழித்திரை விடுபடலுக்கு முன்னேறிச் செல்லுகிறது.
லேசர் ஒளியுறைதல்: சிக்கலான நிகழ்வுகளைக் குறைக்க விழித்திரையின் குருதிக்குழல்கள் அற்றப் பகுதியில் ஒளியுறைவு செய்ய ஆர்கான் அல்லது டயோட் லேசரைப் பயன்படுத்தலாம். சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சில நோயாளிகளுக்கு பின் முனை விழிப்புள்ளி மடிப்பு அல்லது விழித்திரை விடுபடலாக நோய் முன்னேறலாம்.
விழிப்பின்னறை திரை அறுவை
குளிர்மருத்துவம் அல்லது லேசர் ஒளியுறைதல் சிகிச்சைகளால் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு விழித்திரை விடுபடல் போன்ற சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்க விழிப்பின்னறை திரை அறுவை தேவைப்படலாம்.
விழிவெண்படல நெருக்கல்
இழுவை விழித்திரை விடுபடல் இருக்கும் போது பார்ஸ் பிளான விட்ரெக்டோமியுடனோ அல்லது இல்லாமலோ விழிவெண்படல நெருக்கல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பார்வையைப் பொறுத்த வரையில் நல்ல பலன் கிடைப்பதில்லை.
ஆன்டியாக்சிடெண்ட்டாக E உயிர்ச்சத்தின் பங்கு விவாதத்துக்கு உரியது. தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தொடர்நடவடிக்கை
ஆண்டு தோறும் கண் பரிசோதனை தேவை. கடுமையான நேர்வுகளுக்கு அடிக்கடி சோதனை தேவைப்படும்.
நோய்முன்கணிப்பு
விழித்திரை விடுபடல் உருவாகிவரும் குழந்தைகளுக்கு பார்வை முன்கணித்தல் சிறப்பாக இருப்பதில்லை. மருத்துவம் பெற்றுக்கொள்ளாத நோயாளிகளில் பின்மாதவிடாய் வயதான 38-42 வாரங்களில் விழித்திரை விடுபடல் பொதுவாக நிகழ்கிறது.
ROP மருத்துவம் ஆபத்தையும் பாதகாமான விளைவுகளையும் குறைக்கிறது.
சிக்கல்கள்
குறைப்பிரசவ விழித்திரை நோய் பின்வரும் சிக்கல்களை ஏற்படுத்தும்:
தடுப்பு முறைகள் வருமாறு
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/8/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...