অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தாய் சேய் நலம்

தாய் சேய் நலம்

முன்னுரை

பெண்கள் இந்நாட்டின் கண்கள் அதனால் அவர்களில் இளம்பெண்கள் முதல் வயது மூப்பு பெண்கள் வரை பாதுகாப்பான உடல் நலம் பேணுதல் அவசியம் ஆகும். இளம் பெண்களுக்கு தனிப்பட்ட வயதிற்கு ஏற்ப உடல் நலத்திற்குத் தேவையான வளர்ச்சி அடையக்கூடிய ஒரு நிகழ்வுதான் மாதவிடாய் சுழற்சி. இது குமரப்பருவத்திலும் பள்ளி செல்லும் வயதிலும் ஏற்படக்கூடிய ஒரு வித மாற்றமாகும். இவ்வித உடல் மாற்றங்களை குமரப்பருவத்தில் கற்பித்தல் தலையாய கடமை ஆகும். இதன் மூலம் முக்கியமான பாலின நிலைகள், குழந்தை பிறப்பு, குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஒத்த வயதுடைய உணர்ச்சி மிகுந்த பாலின் செயல்களான ஆல்கஹால் மற்றும் போதை மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றை இளம் வயதினருக்கும் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், உடல் உபாதைகளை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள், தனிப்பட்ட முறையில் உடல் நலத்தில் முக்கிய கவனம் ஆகியவற்றை குறிப்பாக நீரிழிவு நோய், இருதய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ள வயது மூப்பு பெண்களுக்கு உடல் நல போதனைகள் மூலம் நல்கல்வி அளிக்க வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி (அ) கருப்பை சுழற்சி

மாத விடாய் சுழற்சி என்பது மாதத்திற்கு ஒருமுறை ஏற்படக்கூடிய சிசு தசையிலிருந்து இரத்தம் கலந்த ஒழுகல், பருவமடைந்த காலம் தொடங்கி மாதவிடாய் நிற்கும் காலம் வரை கர்ப்ப காலமாகும். இந்த காலங்களில் கருப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் ஒரு சுழற்சியான மாற்றங்களை அடைகிறது. இது இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. 21 - 40 நாட்களுக்குள் நடக்கிறது. மாதவிடாய் சுழற்சி மாதத்திற்கு ஒருமுறை தொடர்ச்சியாக வர கூடியதாகும் இருப்பினும் கர்ப்பகாலங்களில் இது ஏற்படாது.

மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோனின் பங்கு

மாதவிடாய் சுழற்சி ஹைப்போதலாமஸ் என்னும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. இச்சுரப்பியில் கொனோட் ரோட்ராபின் ஹார்மோன் சுரக்கப்பட்டு பிட்யூட்டரி சுரப்பியை தூண்டி, பாலிக்குலர் தூண்டப்படக்கூடிய ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் உற்பத்தி பண்ணுகிறது. பாலிக்குலர் தூண்டப்படக்கூடிய ஹார்மோனும் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோனும் சினை முட்டைகளை வளர்ச்சியடைய செய்து ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கருப்பை சுவர் வளர உதவுகிறது. புரோஜஸ்ட்ரான் என்ற ஹார்மோன் கருமுட்டையை கருப்பையில் பதிவு செய்ய உதவுகிறது. கரு வளராமல் இருந்தால், புரோஜஸ்டிரான் உற்பத்தி நின்று விடுகின்றது. மாதவிடாய் சுழற்சி ஆரம்பமாகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரான் அளவு குறைவதால் கோனட்டோரா பின் சுரக்கும் ஹார்மோன் தூண்டப்பட்டு பாலிக்குலர், தூண்டப்படக்கூடிய ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் சுரக்கப்பட்டு கரு முட்டை வளர உதவுகிறது.

மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்

அ) ஹார்மோனல் மாற்றங்கள்

ஆ) அண்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்

இ கருப்பையின் மாற்றங்கள்.

அ) ஹார்மோன் மாற்றங்கள்:

அண்டம் ஹார்மோன்கள், பாலிக்குலர் தூண்டப்படக்கூடிய ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் ஆகும். அண்டம் ஹார்மோன்ஸ் பிட்யூட்டரியில் உருவாகி சில மாறுதல்களை அண்டம் மற்றும் எண்டோமெட்ரியத்திலும் ஏற்படுகிறது. மாதவிடாய் அல்லது கர்பப்பை சுழற்சி என்பது ஹார்மோன்களின் பாதிப்பினால் சினைமுட்டை உருவாகி கருப்பையின் உட்சுவரில் (எண்டோமெட்ரியம்) மாறுதல் ஏற்படுத்தி, கர்ப்பம் உண்டாகவில்லை எனில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 28வது நாளிலும் ஏற்படுகிறது.

ஆ) அண்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்:

1. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள்

2. லூட்டியலில் ஏற்படும் மாற்றங்கள்

ஹைப்போதலாமஸில் கொனடோடிரோபின் உற்பத்தி செய்யப்பட்டு ரத்த நாளம் வழியாக பிட்யூட்டரி சுரப்பியை அடைந்து, பாலிக்குல் தூண்டப்படக்கூடிய ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோனை சுரக்க செய்கிறது. இந்த ஹார்மோன்கள் அண்டத்தில் உள்ள பாலிக்கும் செல்களை முதிர்ச்சி அடைய செய்து சினைமுட்டை வெளிவர உதவுகிறது.

சினைமுட்டை பாலிக்குல் செல்களில் இருந்து வெளிவரும் காலங்களில் உடல் வெப்ப நிலை 0.5°F முதல் 1°F வரை உயரும். பாலிக்குள் செல்கள் சினைமுட்டையை வெளியேறிய உடன் கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோனை உற்பத்தி செய்து சினைமுட்டை, கருவுற்றபின் கருப்பையில் பதிவு செய்ய உதவுகிறது.

இ) கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள்

1. மாதவிலக்கு காலம்

2. புரோலிபரேஷன் காலம்

3. சுரப்பு காலம்

4. மறையும் காலம்

மாதவிலக்கு காலம்

கர்ப்பப்பைக்கு சினைமுட்டை வந்து சேரவில்லையெனில் எண்டோமெட்ரியம் உடைந்து சிதைகிறது. அதன் விளைவாக மாதவிலக்கு ஏற்படுகிறது. 4 முதல் 7 நாட்கள் வரை எண்டோமெட்ரியம் சிதைக்கப்பட்டு வெளிவருகிறது. இரத்தத்தில் எபிதீலிய செல்களும் சளி போன்ற திரவமும் வெளியேறுகிறது.

புரோலிபரேஷன் காலம்:

இது மாதவிலக்கு காலத்திற்கு பிறகு முதல் சில நாட்களில் எண்டோமெட்ரியம் மறுபடியும் உருவாகும் இதற்கு ரீஜெனரேடிவ் நிலை எனப்படும். இதை முந்தைய புரோலிபரேடிவ் காலம் எனவும் கூறலாம். 9 நாட்கள் இது நீடிக்கும். புரோலிபரேசனை ஈஸ்ட்ரோஜன் ஊக்குவிக்கும் அத்துடன் எண்டோமெட்ரியம் வளர்ச்சி அடையவும் உதவுகிறது. எண்டோமெட்ரியத்தில் பருமன் குறைந்தபட்சம் 20 செ.மீ பருமனாக இருக்கும். இதில் சுரப்பிகள் குறுகலாகவும், மற்றும் நேராகவும் இருக்கும். இரத்தக் குழாய்கள் புடைத்துக் கொண்டு இருக்கும். ஈஸ்ட்ரோஜனை எண்டோமெட்ரியம் வளர்ச்சி அடைய உதவுகிறது.

பிந்திய புரோலிஃபரேசன் காலம் ஈஸ்ட்ரோஜின் இரத்தகுழாயின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கிறது. இந்த இரத்த குழாய்கள் தான் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை கருப்பைக்கு அளிக்கிறது. இதனால் (glandular Hyperplasia செல்கள் அதிகரித்து கருப்பை தடிமனாகிறது. இது எண்டோமெட்ரியத்தை பழுதுபார்த்து தயார்படுத்துகிறது. இரத்த ஒழுக்கு காலத்திலிருந்து, கருமுட்டை வெளியிடல் காலம் வரை இப்பழுது பார்த்தல் நீடிக்கும் கருமுட்டையானது 12 மற்றும் 16 நாட்கள் இருக்கும்.

சுரப்பு காலம்:

கடைசி 12 நாட்களில் இது ஏற்படும். ஓய்வு காலத்தில் எண்டோமெட்ரியம் மெதுவாக வளர ஆரம்பிக்கிறது. இது பருமனாகவும் 3.5 மி.மீ., மென்மையாகவும் ஆகி அதிக இரத்த ஓட்டமும் பெறுகின்றது. இதே காலத்தில் சினைமுட்டை வெளியேறுவதால் நடைபெறுகிறது. இது இரு மாதவிலக்குக் காலங்களுக்கு நடுவில் உள்ள காலத்தில் நடைபெறும். இந்த நேரம்தான் பெண் சினை அடையும் தன்மையில் உள்ள நேரமாகும்.

மறையும் காலம் :

மறையும் சினைமுட்டை 27 மற்றும் 28 நாட்களில் வெளியேறிய பின் கார்பஸ் லூட்டியம் உற்பத்தி செய்யும் ஈஸ்டிரோஜன், மற்றும் புரோஜெஸ்டீரான் நிலையும் குறைய ஆரம்பிக்கும் இந்த ஹார்மோன்கள் இல்லையெனில் கருப்பை சுவர் இஸ்கிமிகக்காக மாறிவிடும். இந்த நிலைக்கு இஸ்கிமிக் காலம் எனப்பெயர். இந்த நான்கு காலங்களும் முடிந்தபின், மறுபடியும் மாதவிலக்கின் முதல் நாள் ஆரம்பமாகும்.

இரண்டு அல்லது 3 நாட்களுக்கு மேலாக விந்தணுவோ அல்லது சினைமுட்டையோ உயிரோடு இருக்காது. உடலுறவுக்குப்பின் 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திற்கு பிறகு அதிக இனப்பெருக்கம் ஏற்படும். இந்த 14 நாட்கள் கருத்தரிக்கும் காலமாகும்.

மாதவிடாய் சுழற்சி காலம்

* 28 நாட்களுக்கு ஒரு முறை

* சுழற்சி காலம் 22 - 35 நாட்கள் வரை

* மாதவிடாய் காலம் 4 - 6 நாட்கள் வரை

* ரத்த ஒழுகல் தன்மை திரவமாகவும், சீராகவும்

* ரத்த ஒழுகல் 28 மிலி. முதல் 60 மி.லி. வரை

மெனர்க்கி :

முதன்முதலில் பெண் பூப்படையும் நிலையைக் குறிக்கும். இது 12 (அ) 13 வயதில் நிகழும் சில சமயங்களில் 10 வயதிற்கு முன் (அ) 18 வயதிற்கு மேல் நிகழும்.

பூப்படைதல் :

இனப் பெருக்க உறுப்புகள் முழு வளர்ச்சியடைந்து செயல்படத் துவங்குவதையே பூப்படைதல் என்கிறோம்.

பூப்படையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  1. 1. ஈஸ்ட்ரோலன்

* வெளி பிறப்பு உறுப்புகள் அதன் அளவில் பெரிதாக காணப்படுதல்.

* பூப்படையும் நிலை அடையும் போது முட்டைபைகள், கர்ப்பப்பை, மற்றும் பெல்லோபியன் குழாய்கள், மார்பகங்கள் இவையெல்லாம் வளர்ச்சியடைகிறது.

* நீள் எலும்புகளின் திசுக்கள் ஒன்றுசேர உதவுகிறது.

* எலும்பின் திசுக்கள் வளரவும், கொழுப்பு படியவும் தோல் பருமன் மற்றும் தன்மை மாறவும் உடல் பிறப்பு உறுப்பில் முடி வளரவும் உதவுகிறது.

புரோலஸ்டிரோன் .

* சினை முட்டை பதிப்பதற்கும் தயார் ஆவதற்கும்

* மார்பகம், பெல்லோபியன் குழாய் வளர்ச்சிக்கு துணை புரிகிறது

மெனோபாஸ் (மாதவிடாய் நின்று போதல்)

ஒரு பெண்ணிற்கு 45 வயதிலிருந்து 50 வயதுக்கும் இடையில் மாதவிடாய் ஒழுங்கற்று இருந்து பிறகு முற்றிலும் நின்று விடும். இதுவே இறுதி மாதவிடாய் ஆகும். கருவணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி விடும். ஹார்மோன்கள் உற்பத்தியும் நின்று விடுகின்றது.

மெனோபாஸ் நிகழும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

* இதய படப்படப்பு, வெப்பத்தினால் உண்டாகும் எரிச்சல்.

* மண்டை முடிகள் மிக மெலிந்தும் உடல் ரோமங்கள் அடர்த்தியாக மாறும்.

* மார்பக சுரப்பிகளில் கொழுப்பு திசுக்களால் நிரப்படும்.

* சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை மற்றம் சிறுநீரக மண்டலமும் அதன் திசுக்களும் மெல்லிய நிலையில் காணப்படும். சிறுநீர்புறவழியில் அதிகமான தொற்று வாய்ப்பு ஏற்படும்.

* பசியின்மை, சோர்வு. சூரிய ஒளியால் பாதிப்பு, தக்கமின்மை, உணர்ச்சியற்ற நிலை ஏற்படும்.

* சிசுத்தாரை சுவர் மிகவும் மென்மையாகவும், தொய்வு (Ph நிலை) மாற்றத்துடனும். இனப்பெருக்கு மண்டலம் மிகவும் சிறிய அளவில் காணப்படும்.

டிஸ்மெனோரியா :

வலியுடன் காணப்படும் மாதவிடாய் (அ) மாற்றத்துடன் காணப்படும் மாதவிடாய்.

தன்மை :

கீழ் வயிற்றில் அதிக தசைப்பிடிக்கும் வலி காணப்படும். தலைவலி, எரிச்சல், மன அழுத்தம், உடல் நலக் குறைபாடு மற்றும் மயக்கம்.

மெட்ரோலியா :

மாதவிடாய் காலம் தவிர கருப்பையில் இருந்து அல்லது இரத்தமானது இடைவெளி இல்லாமல் (அ) ஒழுங்கீனமான நிலையில் ஏற்படும்.

மெனரோலியா:

மாதவிலக்குக் காலங்களில் அதிகப்படியான இரத்த ஒழுக்கு. இவற்றிற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் இரத்த சோகை ஏற்படும்.

அமினோரியா:

மாதவிடாய் காலம் ஏற்படாமல் போகும் நிலை. இது தற்காலிகமாக காணப்படுகிறது.

கருவுறுதல் :

சினைமுட்டையும் விந்தணுவும் சேரும் நிகழ்வுக்கு கருவுறுதல் எனப்படும்.

கருவுறுதல் நிகழ்வு

* அண்டத்தில் இருந்து கருமுட்டை வெளியேறியதைத் தொடர்ந்து இந்த கருமுட்டை ஃபல்லோப்பியன் குழாய்க்குள் நுழைந்து கருப்பையை நோக்கி நகரும்.

* இச்சமயத்தில் ஆண், பெண் புணர்ச்சி ஏற்பட்டால் விந்தணுவானது சிசுத்தாரை வழியாக நுழைந்து கருப்பை வழியாக ஃபல்லோப்பியன் குழாயை அடைகின்றது.

* 300 - 600 மில்லியன் விந்தணுக்கள் சிசுத்தாரைக்குள் நுழைந்தாலும், ஒன்று மட்டுமே கருவறையைத் துளைத்து உள்ளே நுழைகிறது.

* கருமுட்டைக்கும், விந்து அணுவுக்கும் இடையே புணர்ச்சி ஏற்பட்டு சினைமுட்டை உருவாகிறது.

* விந்தணு மற்றும் கருமுட்டை ஒவ்வொன்றும் 23 குரோமோசோம்களை தந்து 46 குரோமோசோம்களை கொண்ட சினைமுட்டையை உருவாக்குகின்றன.

* சினைமுட்டை கருப்பையை 3 - 4 தினங்களில் அடைகிறது.

* சினை முட்டை மெதுவாக நகர்ந்து கருப்பையை அடைந்து எண்டோ மெட்டிரியத்தில் புதைகிறது.

* புதைந்த சின்னமுட்டை எண்டோமெட்ரியம் முழுவதுமாக முடி விடுகிறது.

* ஆண் மற்றும் பெண் உருவாக்கும் விந்து மற்றும் கருமுட்டை "கே மெட்ஸ்'' எனப் பெயர்.

* கருவுற்ற முட்டை கருவுறுதலுக்கு பின் சைகோட் (அ) சினைமுட்டை என்று கூறப்படுகிறது.

கருவுற்ற முட்டை வளர்ச்சி அடைய கூடிய நிலை

* கருவுற்ற முட்டை முதல் 3 - 4 நாட்கள் வளர்ச்சியடைகிறது.

* மைடாடிக் முறையில் சினை முட்டை வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. இதற்கு "கிள்வேஜ்" எனப்பெயர்.

* செல்கள் பெருக பெருக ஓர் குறிப்பிட்ட வடிவில் அமைகின்றன. ஒரு செல் இரண்டாகவும், இரண்டு நான்காகவும், பின்னர் 8, 16, 32 என்று பெருக்கப்பட்டு இறுதியில் செல்லினால் ஆன ஒரு பந்தாக மாறுகிறது.

* முதல் மைட்டாடிக் நிலையின் போது, 46 குரோமோசோம்கள் கொண்ட சினைமுட்டையை உருவாக்குகின்றது. அந்த ஒவ்வொரு செல்லிலும் “டிப்ளாய்டு" நிலையில் உள்ளது.

* கிளிவேஜ் நிலைக்கு பிறகு சைகோப் பெல்லோபியன் குழாயில் இருந்து கருப்பையில் இடம்பெயர்கிறது.

* கருப்பையிலும், பெல்லோபியன் சைகோட், கிளிவேஜ் உருவெடுக்கிறது.

* கருவுறுதலுக்கு பின் 3 நாட்களில், கருவுள்ள முட்டை 32 செல்லினால் ஆன ஒரு பந்தாக மாறுகிறது. இப்பந்திற்கு "மொருலா" Morule) எனப்பெயர்.

* கருவுறுதலுக்கு பின் 5 நாட்களில் செல் பந்தாக மாற்றப்படும் போது இதில் ஒரு குழி தோன்றுகிறது. இதற்கு ''பிளாஸ்டோசீல்' எனப் பெயர். இது முழுவதுமாக பிளாஸ்டோமியர் என்று அழைக்கப்படுகிறது.

* கருப்பைச் சுவரில் முழுவதும் புதைந்து காணப்படக் கூடிய ப்ளாஸ்டோ சிஸ்ட்கள் அ) எம்பெடிங் என்று பெயர். இது 10 வது நாளில் நடைபெறுகிறது. சில பெண்களுக்கு சில குறிப்பிட்ட அளவு இரத்த ஒழுக்கு இந்நிலையில் ஏற்படும். அதற்கு "இம்ப்ளான்டேசன் இரத்த ஒழுக்கு" என்று பெயர்.

* சினைமுட்டை மெதுவாக நகர்ந்து கருப்பையை அடைந்து எண்டோமெட்ரியத்தில் புதைகிறது. இதற்கு 'நெஸ்டிங்" என்று பெயர்.

* 11ம் நாளுக்கு பிறகு எண்டோமெட்ரியம் முழுவதுமாக மறைய ஆரம்பிக்கும் பிளாஸ்டோசிஸ்டை சுற்றி வளர்ச்சி அடையக்கூடிய குழிக்கு. ''லாக்குனே" எனப் பெயர். இது இம்பிளாண்டேசன் நிலையில் நடைபெறுகிறது. ப்ளாஸ்டோசிஸ்ட் வழியாக சிசுக்கு ஊட்டச்சத்துக்களையும், வளர்ச்சி மாற்றத்தை நிகழ்த்துகிறது.

* கோரியானிக் கொனோடோராபின் என்ற ஹார்மோன் பிளாஸ்ட்டோ சிஸ்ட்டில் சுரக்கப்படுகிறது.

* பிளாஸ்டோ சிஸ்டு என்பது இரண்டு உறைகளால் சூழப்படுகிறது. உள்ளே சிசு உருவாக ஏதுவான செல்களால் ஆன அமைப்பு கொண்டுள்ளது.

* கர்ப்பிணிக்கு கருப்பையின் வளர்ச்சிக்கு புரோஜெஸ்டிரோன் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் கருப்பையின் உட்சுவரான "எண்டோமெட்ரியம் டெசிடுவா" என அழைக்கப்படுகிறது.

• இரண்டு சுவர் அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு ஊட்டச் சத்துக்களையும், மற்றும் பாதுகாப்பு, வளர்ச்சிக்கும் துணைப்புரிகிறது.

* கருவுயிரின் வளர்ச்சி காலத்தில் உள்வளர்ச்சி அடையக் கூடிய ஒரு செல் பந்து காணப்படும்.

* உள்புறத்தில் உள்ள சுவர் செல்களால் சிசு உருவாக்கப்பட்டு வளர ஆரம்பிக்கப்படுகிறது.

குழந்தையின் படலமும் மற்றும் நஞ்சு கொடியும் உருவாகும் விதம்

ட்ரோபோபிளாஸ்ட் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை

சின்சிடியோ ட்ரோபோ பிளாஸ்ட்

சைட்டோட்ரோபோ பிளாஸ்ட்

எக்டோடெர்ம் : இது தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை, சுவாச உறுப்பு, லென்ஸ், கண், தொண்டை இவற்றை உருவாக்குகிறது.

மீசோடெர்ம் : இது எலும்புகள், தசை மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் இனப்பெருக்க மண்டலம், சிறு நீரகங்கள் மற்றும் சிறுநீரக தாரை ஆகியவற்றை உருவாக்குகிறது.

எண்டோடெர்ம் : இது சளிச் சவ்வுகள், மற்றும் சுரப்பிகள், சுவாசப்பாதை, சிறுநீரகப் பை, கணையம், மற்றும் சுரப்பிகள் ஆகியவற்றை உருவாக்குகின்றன.

கருவுயிருக்கு முன் : முதல் 2வது வாரத்திற்குப் பிறகு கருவுறுதல் என்ற நிகழ்வு ஆரம்பிக்கும் செல்லுலர் பிளவு இந்நிகழ்ச்சியில் தான் தொடங்குகிறது.

* சைகோட் (சினைமுட்டை : கருவுற்ற கருமுட்டை முதல் 3 வாரங்களுக்கு இருக்கும் நிகழ்வு சினைமுட்டை என்று அழைக்கப்படுகிறது.

கருவுயிர் : கருவுற்ற 4வது வாரம் வரை வளர்ந்துள்ள உறுப்பு அமைவுக்கு கருவுயிர் என்று பெயர். ஏழாவது மாதத்தில் எல்லா மண்டலங்களும், உறுப்புகளும், வளர்ச்சியடைகிறது.

முதிர்க்கரு : கரு உருவான நாளில் இருந்து கரு வெளியே வரும் நாள் வரை உள்ள காலம் 8 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் கரு வளர்ச்சி இதற்கு முதிர்க்கரு என்று பெயர்.

குழந்தை : பிறந்த பின் உள்ள பருவம், குழந்தை என்று பெயர்.

ஆம்னியாடிக் குழிகள் : ஆம்னியாடிக் குழிகள் என்பது வெளிப்புற சுவர் ஆகும். இது முதிர்கரு பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

டெசிடுவா : கர்ப்பகாலத்தில் கருப்பையின் உட்புறமான எண்டோமெட்ரியம் டெசிடுவா என்று அழைக்கப்படுகிறது. இதில் 3 அடுக்குகள் உள்ளன. இதில் பேசல் அடுக்கு, ஃபங்சனல் அடுக்கு, காம்பேக்ட் அடுக்காகும்.

நஞ்சுக்கொடி

இது இரத்தக்குழாய்களின் வடிவமைப்பை பெற்றுள்ளது. கோரியோ, டெசிடுவா பேசாலிஸ், சிசுவின் இரத்தம், இரத்தக் குழாய்கள், மற்றும் கோரியானிக் வில்லை இவற்றினால் ஆனது தான் நஞ்சுக்கொடியாகும். தாயினிடத்திலிருந்தும் உருவானது. ஆகையால் நஞ்சுக் கொடிக்கு தாயின் சார்பும், முதிர்கருவின் சார்பும் உண்டு முதிர்கருவின் இரத்தமும், தாயின் இரத்தமும் கலப்பதில்லை. கோரியோ டெசிடுவாலிஸ், இதனால் இரத்தம் கலப்பதில்லை. சிசுவின் இதய துடிப்பினால் 500 மி.லி. நிமிடத்திற்கு இரத்தம் நஞ்சுக்கொடியின் வழியாக செல்கிறது. நஞ்சுக்கொடியானது 10வது வாரத்தில் முழுமையாக வளர்ச்சி அடைகிறது. இவை தட்டையான, வட்டமான, வடிவம் உடையது. 15 - 20 செ.மீ விட்டத்திலும், 2.5-3 செ.மீ தடிமனும் 15 - 20 லோப்கள், 1/6 குழந்தையின் உடல் எடையிலும் 1/6 பங்கும் சுமார் 500 - 600 கிராம்கள் எடை உள்ளது.

நஞ்சுக்கொடியில் இரண்டு பகுதிகள் உண்டு. அவை தாய் மற்றும் சேய் பகுதிகள்.

தாயின் பகுதி (மெடர்னல் சர்பேஸ்):

கோரியானிக் வில்லை மடல்களாக உருவானது. அதற்கு 'கார்டிலிடன்ஸ்'' என்று பெயர். இவை சல்கை ஆப் பர்ரோஸ் - இல் தனிப்படுத்தப்படுகிறது. இந்த பகுதியானது ட்ரோபோபிளாஸ்ட் செல்களில் மூடப்பட்டுள்ளது. இந்த பகுதியானது சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்நிலையில் பகுதிகளுக்கு மேல் உப்புகள் படிய ஆரம்பிக்கும். இந்நிலைக்கு ''கால்குள்ஸ் டீஜெனரேஷன்" எனப்பெயர்.

சேய் பகுதி (ஃபீட்டல் சர்பேஸ்) :

இவை மிகவும் மென்மையாக வெள்ளை நிறமுடைய மற்றும் பளபளப்பான இரண்டு சவ்வுகளினால் மூடப்பட்டுள்ளது. கோரியான் மற்றும் ஆம்னியான். கோரியானும் ஆம்னியானும். நஞ்சுக்கொடியின் நடுமையத்தில் கருப்பை சுவருடன் மற்றும் தொப்புள் கொடியுடனும் இணைந்து காணப்படுகிறது.

நஞ்சுக் கொடியின் வளர்ச்சி :

3வது வார காலத்தில் கர்ப்பிணிக்கு ட்ரோபோ பிளாஸ்ட் பகுதியானது முழுமையாக, அதை சுற்றி காணப்படக்கூடிய பகுதிக்கு கோரியானிக் வில்லை எனப் பெயர். இவையெல்லாம் டெசிடுவாலில் பேசில்லிஸ் பகுதியினால் சூழப்பட்டுள்ளது. இதற்கு கோரியான் பிராண்டுசம் எனப்பெயர். கோரியான் பிராண்டுசம் அதிகப்படியாக வேகமாக வளர்ச்சியடைந்து, ஓர் நீண்ட அமைப்பாக மாறுகிறது. அதற்கு நஞ்சுக்கொடி என்று பெயர்.

கோரியான் வில்லை :

இது கொத்துக் கொத்தாக காணப்படக்கூடிய ஓர் அமைப்பு. இவை கோரியானிக் சவ்வினில் சூழப்பட்டு 2 செல் அடுக்களினால் சூழப்பட்டுள்ளது.

1. தமனி மற்றும்

2. சிரை.

இந்த இரண்டு செல் அடுக்களுக்கு லாங்கர்ஹேன்ஸ் என்றும் சின்ட்சைட்டியம் என்றும் பெயர். இந்த இரண்டு கோரியானிக்க வில்லை சேர்ந்தது. ஆன்காரிக் வில்லை மற்றும் தருக்கமான வில்லை என்றும் கூறலாம்.

நஞ்சுக்கொடியின் வேலைகள்

1. சுவாசம்: சிசுவின் நுரையீரலாக நஞ்சுக்கொடி இயங்குகிறது. இது தாயின் ஹிமோகுளோபினில் இருந்து பிராணவாயுவை எடுத்து கொண்டு, கரியமில வாயுவை எடுத்து வெளியிடுகிறது.

2. ஊட்டச்சத்துக்கள்: முதிர்கருவுக்கு அமினோ அமிலங்கள், குளுகோஸ், உயிர்ச் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாது உப்புகள் அனைத்தையும், தாயின் இரத்தத்தில் இருந்து நஞ்சுக் கொடி வழியே செல்கிறது.

3. சேமிப்பு: நஞ்சுக்கொடி குளுகோஸ், இரும்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்களை சேமித்து வைக்கின்றது.

4. கழிவுப்பொருள் நீக்கம் : கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, பிலிரூபின், யூரியா, ஆகியவற்றை முதிர்கருவிடம் இருந்து வெளியேற்ற நஞ்சுக்கொடி உதவுகிறது.

5. பாதுகாப்பு: நஞ்சுக் கொடியானது நுண்ணியிரிகள் தாயிடமிருந்து கருவுக்கு போகாமல் பாதுகாக்கின்றது.

6. நாளமில்லா சுரப்பிகள் : மேலும் நஞ்சுக்கொடி மனித கோரியானிக் கொனோடோட்ராபின். ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரான், மனித நஞ்சுக்கொடி, பாலிக்குலர். தூண்டப்படக்கூடிய ஹார்மேன் லூட்டினைசிங் ஹார்மோன் மற்றும் கொனோடோட்ராபின் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கின்றது.

ஆம்னியாடிக் திரவம்

ஆம்னியான் உறையில் உள்ள திரவத்திற்கு ஆம்னியாடிக் திரவம் என்று பெயர். இந்த திரவத்தில் தாயின் இரத்தம், குழவியின் சிறுநீர் மற்றும் குழவியின் சுவாச பையில் உள்ள திரவம் அடங்கியிருக்கும். ஆம்னியாடிக் திரவம் வெளிர் நிறத்துடனும், மஞ்சள் தன்மை உடையதாகவும், தெளிந்த நீர் போலவும் குழவியின் அசைவிற்கு எந்த உராய்வும் இல்லாமல் இருந்து ஏதுவாக ஆகிறது. இதன் அளவு ஒன்று முதல் மூன்று பைன்டுகளாகும் (500 - 1500 மி.லி.). இது ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கும் வடிகட்டப்பட்டு, சமச்சீர் செய்யப்படுகிறது. இதில் 99% தண்ணீரும், ஒரு பங்கு திடப்பொருள்களாகிய உப்புக்களும், யூரியா, கரியாடினிஸ், சர்க்கரை, ஹார்மோன்ஸ், குழவியின் செல், கழிவு பொருட்கள், ஆல்புமின், சிறுநீர் வெர்னிக்ஸ் கேசியோசா, லேனுகோ ஆகியவை இருக்கும்.

ஆம்னியாடிக் திரவத்தின் செயல்பாடு

1. சீரான வளர்ச்சிக்கும், இலகுவான அசைவுக்கும் உதவி புரிகிறது.

2. வெளிப்புற அதிர்வுகளில் இருந்தும் கருவை பாதுகாக்கிறது.

3. கருவின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகின்றது.

4. அழுத்தத்தை தடுக்கிறது. பஞ்சு போன்று இருக்கும்.

5. குழவி ஆம்னியான் உறையினால் அழுத்தப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

6. தாய் கீழே விழும் சூழலில் காயம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

7. திரவத்தின் முக்கிய பங்கு, கரு திரவத்தை குடித்து, சிறுநீர் கழிக்க ஏதுவாக அமைகிறது.

தொப்புள் கொடி :

தொப்புள் கொடி கருவின் இரத்தக்குழாய்களை நஞ்சுக்கொடியுடன் இணைக்கிறது. இக்கருவின் உயிர்பாதை ஆகும். கருவிலிருந்து நஞ்சுக்கொடி வழியாக சுத்திரிகரிக்கப்படாத இரத்தத்தையும், மற்றும் கழிவுப்பொருள்களையும் இரண்டு தமனிகளின் மூலம் தொப்புள் கொடி பெற்றுக் கொள்கிறது. இது முற்றிலும் தாயைச்சார்ந்திருக்கிறது. இந்த தொப்புள் கொடி வாட்சன் ஜெல்லி என்ற தெளிவான பொருள் மூலம் சூழ்ந்து இருக்கும். இது கொடி 40 - 50 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதில் இரத்தம் பாய்கின்ற அளவு 400 மிலி/நிமிடம். குழந்தை பிறந்த உடன் நுரையீரல் வேலை செய்ய ஆரம்பிக்கும். பிறந்த பின்பு தான் குழந்தை மூச்சு விடுவதற்காக தன் நுரையீரலை பயன்படுத்த தொடங்குகின்றது. மேலும் பிறப்பின் போது இரத்த ஓட்டத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்து குழந்தை தன்னைத் தானே சார்ந்து இருக்கும்.

கருவின் வளர்ச்சி நிலைகள்

• கருவுற்றபிறகு 0 - 4 வாரங்கள்:

* அண்டம் திராட்சை வடிவத்தில் மென்மையாக தோலுடன் காணப்படும்.

* மனித தன்மை அற்று இருக்கும்.

* அதிக வளர்ச்சி.

* கருவுயிர் உருவாதல்.

* மத்திய நரம்பு மண்டலம் உருவாதல்.

* இருதயம் உருவாகி துடிக்கத் தொடங்குதல்.

* கால்களின் நுனிப்பகுதி உருவாதல்.

4 – 7 வாரங்கள்

* புறாமுட்டை வடிவத்தில் இருக்கும்.

* செல்பெருக்கம் விரைவாக நடைபெறும்.

* தலை மற்றும் முக வடிவங்கள் தோன்றும்.

* முக்கிய உறுப்புகள் அனைத்தும் ஆரம்ப கால வளர்ச்சி நிலைமை அடைதல்.

* கருவின் ஆரம்ப அசைவுகள் அல்ட்ராசவுண்ட் சோதனையில் தெரியும்.

• சிறுநீரக வடிவத்தில் இருக்கும். தலையும், வாலும் சந்தித்து இருக்கும். 2.5 செ.மீ இருக்கும்.

8 வாரங்கள்

• கரு கோழி முட்டை வடிவில் இருக்கும். டெசிடுவா பேசாலிஸ் மட்டும் இருந்து அதை சுற்றி இருக்கும்.

* கரு முதல் நிலையில் 3 செ.மீ. இருக்கும்.

* முக்கிய உறுப்புகள் அனைத்தும் ஆரம்பகால நிலையில் வளர்ச்சி நிலையில் இருக்கும்.

* தலை மற்றும் கால் வளர்ச்சி காணப்படும். எலும்பு வளர்ச்சி ஆரம்பமாகும். எடை 4கி இருக்கும்.

• வெளிப்புற பிறவி உறுப்பு உருவாகும், கரு 3 செ.மீ. நீளமும், தலை பெரிதாகவும் காணப்படும்.

* கருவின் ஆரம்ப அசைவுகள் அல்ட்ராசவுண்ட் சோதனையில் தெரியும்.

12 வாரங்கள்

* வாத்து முட்டை வடிவில் இருக்கும். சிசு 10 செ.மீ. உயரத்துடன் 60 கிராம் எடையுடனும் இருக்கும்

* கண் இமைகள் இணைந்து மூடும். கைவிரல்கள், கால்விரல்கள் காணப்படும்.

* சிறுநீரகம் செயல்பட ஆரம்பிக்கும்.

* வளரும் கரு 2 வாரங்களில் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

• இரத்த ஓட்டம் தொடங்கும். முதிர்கரு சப்புதல் மற்றும் விழுங்குதல் ஆகிய செயல்களை செய்ய ஆரம்பிக்கும்.

* முதிர்கரு இலகுவாக அசைய ஆரம்பிக்கும். கரு ஆணா, பெண்ணா என தெளிவாக தெரிதல்.

16 வாரங்கள்

* குழந்தையின் எடை 170 கிராம், 15 செ.மீ நீளம் இருக்கும்.

* கருவின் இதய துடிப்பும் அசைவும் இருக்கும்.

* கரு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கலாம். உடலில் பூனை ரோமங்கள் (Lanugo) தோன்றும்.

* எலும்பு வளர்ச்சி துரிதமாகும்.

• அதனை எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் மூலமாக கண்டறியலாம்.

* குடலில் மெக்கோனியம் தோன்றும்.

* மூக்கிலுள்ள செப்டம் மற்றும் மேல் அன்னமேடு ஒன்று சேரும்

20 வாரங்கள்

* குழவியின் நீளம் 20 செ.மீ. எடை 300 கிராம்.

* லேணுகோ ரோமம் தலை மற்றும் புருவத்தில் காணப்படும்.

* வெர்னிக்ஸ் கேசியோசா தோலில் தோன்றும்.

* கைவிரல் நகங்கள் வெளிப்படும்.

* இளம் சிசுவின் அசைவுகளை தாயால் உணரமுடியும்.

* இளம் சிசுவின் ஓசைகளை கவனிக்க முடியும்.

* இளம் சிசுவின் தோல் சிவந்து சுருக்கமுடன் காணப்படும்.

24 வாரங்கள்

* குழவியின் நீளம் 30 செ.மீ எடை 700 கிராம்.

* குடலில் மெக்கோனியம் இருத்தல்.

* இளம் சிசுவின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும்.

* தூக்கம் மற்றும் செயல்பாடுக்கான காலம்.

* சப்தத்தை உணர்தல்.

* தோல் சிவந்து மற்றும் சுருங்கி இருத்தல்.

28 வாரங்கள்

• குழவியின் நீளம் 35 செ.மீ. எடை 1.1 கி.கி. இருக்கும்.

* குழவி பிறந்தால் உயிருடன் இருப்பதற்கு எதிர்ப்பார்க்கலாம்.

* கண் இமைகள் மீண்டும் திறத்தல்.

* சுவாச தூண்டுதல்கள் இருக்கும்.

32 வாரங்கள்

• குழவியின் நீளம் 40 செ.மீ. எடை. 1.5 கி.கி.

* தோல் வெளிறி சுருக்கங்கள் குறைதல்.

* தோலின் அடியில் சிறிதளவே கொழுப்பு இருக்கும்.

* சிசு இரும்பு சத்து மற்றும் கொழுப்புச்சத்தை சேமிக்க ஆரம்பிக்கும்.

* நுண் ரோமங்கள் முகத்தில் இருந்து மறையும்.

* விதையுறையில் விதைபைகள் இருக்கும்.

36 வாரங்கள்

* நீளம் 46 செ.மீ. எடை 2.5 கி.கி.

• நகங்கள் முழுவளர்ச்சி அடைதல்.

* தோலின் அடியில் சிறிதளவே கொழுப்பு இருக்கும்.

* உயிர் வாழ்தலின் நிலை 96% இருக்கும்.

* கொழுப்புச்சத்து சேமிக்கப்படுவதால் சிசுவின் உடம்பு உருண்டையாதல்.

* நுண் ரோமங்கள் உடலில் இருந்து மறைதல்.

• தலை ரோமம் நீளுதல்/காது குறுத்து எலும்பு மிகவும் மென்மையாக இருத்தல்.

40 வாரங்கள்

• எடை 3.2 கி.கி. நீளம் 50 செ.மீ.

* தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு முழுவதுமாக நிரம்பியிருக்கும். தோல் சுருக்கமின்றி இருக்கும்.

* கர்ப்பகாலம் முடிந்து பிரசவம் நிகழக்கூடிய காலம்.

* மண்டையோடு அழுத்தமாக மாறுதலடையும்.

கரு கரந்த ஓட்டம்

* கரு பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) நஞ்சுக்கொடி மூலம் பெற்றுக்கொள்கிறது.

* நஞ்சுக்கொடியானது கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனைப் பெற்றுக் கொள்கிறது.

* தொப்புள் கொடியானது தொப்புள் சிரையிலிருந்து கல்லீரல் மூலம் இரத்தத்தை பெற்றுக் கொள்வதுடன், பிராணவாயு (O) மற்றும் ஊட்டச்சத்துக்களையும் பெற்றுக் கொள்கிறது.

* போர்ட்டல் சிரையில் இணைக்கப்பட்டு, கல்லீரலுக்கு இரத்தத்தை அனுப்புகிறது.

முக்கியமான 4 தற்காலிக அமைப்புகள்

பக்டஸ் வினோசஸ்:

(சிரையிலிருந்து சிரை) தொப்புள் சிரையுடன் இணைக்கப்பட்டு இன்பீரியர் வீனகேவா வரை செல்கிறது.

போரமன் ஓவேல் (Foromen ovale):

இந்த திறப்பு வலது மற்றும் இடது ஏட்ரியம் வரை இருக்கும். Atrium இரத்தமானது, கீழ்பெருஞ்சிரையில் இருந்து போரமன் ஓவேல் வழியாக வலது மற்றும் இடது ஆரிக்கிளிற்கு அனுப்பப்படுகிறது.

டக்டஸ் ஆர்ட்டிரியோசலை :

இக்கிளைகள் பிரிந்து நுரையீரல் தமனியிலிருந்து கீழுள்ள மகாதமளிக்குள் நுழைந்து, அதற்கும் பின்னுள்ள சப்கிலேவியன் மற்றும் கரோடிட் தமனி வரை நீடிக்கிறது.

ஹைப்போ காஸ்மாக் தமனிகள் :

அதன் கிளைகள் உள் இலியாக் தமனியில் இருந்து தொப்புள் தமனியில் நுழைந்து, தொப்புள் கொடி வழியாக நஞ்சுக் கொடிக்கு இரத்தத்தை திருப்புகிறது.

கருவின் இரத்த ஓட்டம்

இரண்டு இரத்த ஓட்டமும் எப்போதும் இணைவதில்லை. இரத்த ஓட்டமானது கருவின் இரத்த ஓட்டமாகவும் மற்றும் தாயின் இரத்த ஓட்டமாகவும் இருக்கிறது.

கருவின் இரத்தம் அனுப்புதல்:

கருவிலிருந்து தொப்புள் தமனி வழியாக இரத்தம் நஞ்சுக் கொடிக்கு சுத்திகரிப்பிற்காகவும் மறுபடி பூர்த்தி செய்யவும் அனுப்பப்படுகிறது.

தாயின் இரத்தம் அனுப்புதல்:

தாயின் இரத்தம் கருப்பைத் தமனியிலிருந்து கோரியான் டெசிடுவாலில் சுற்றி அனுப்பப்படுகிறது. வில்லையின் அணுக்கள் வழியாக தேவையான பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கருவின் இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது. மற்றும் கழிவுப் பொருட்கள் திரும்பவும் அனுப்பப்படுகிறது.

நஞ்சு கொடியின் இரத்தம்:

சேர்க்கப்படாத இரத்தமானது தொப்புள் சிரையிலிருந்து பெறுகிறது. வயிற்றுச்சுவர் கீழுள்ள கல்லீரல் பகுதி வரை காணப்படுகிறது. உடலிலுள்ள கீழ்ப்பகுதி வரை இரத்தமானது டக்டஸ் வினோசஸினால் அனுப்பப்படுகிறது. சேர்க்கப்படாத இரத்தமானது கீழ் பெருஞ்சிரைக்கு அனுப்பப்படுகிறது. போரமள் ஓவேல் Foramen ovale) வழியாக இரத்தம் வலது அறைக்குள் இருந்து இடது அறைக்குள் அனுப்பப்படுகிறது. இடது வெண்டிரிக்கிலிருந்து மகாதமனி வரை இரத்தம் பாய்கிறது. மகாதமனியின் கிளைகளாக கொரோனரி கரோடிட் மற்றும் சப்கிளேவியன் தமனி இருக்கிறது. இதனால், இதயம், மூளை மற்றும் மேல் கைகளை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை பெற்றுக்கொள்கிறது. இதனால் தான் கைகளானது கால்களை விட மிகவும் அதிக வளர்ச்சி அடைகிறது.

மேல் உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்தம், O2 மற்றும் ஊட்டச்சத்துடன் சூப்பிரியர் வீனகேவாவிற்குள் நுழைகிறது. இந்த இரத்தமானது இன்பீரியர் வீனகேவா இரத்ததுடன் கலந்து வலது ஏட்ரியத்தில் செல்கிறது.

25% கலக்கப்பட்ட இரத்தம், சிறிதளவு O2 மற்றும் ஊட்டச்சத்துக்களை பல்மனரி தமனி வழியாக நுரையீரலுக்கு அனுமதிக்கிறது. டக்டஸ் ஆர்ட்டீரியோசஸ் மூலம் மீதமுள்ள இரத்தமானது மகாதமனிக்கு அனுப்பப்படுகிறது. குறைந்த O2 மற்றும் ஊட்டச்சத்துள்ள இரத்தமானது உடலில் உள்ள மற்ற உறுப்புகளும், கால்களுக்கும் மகாதமனி மூலம் அனுப்பப்படுகிறது.

உள் இலியாக் தமனிகள், ஹைப்போ காஸ்டிரிக் தமனிகள் மூலம் நஞ்சுகொடிக்கு திருப்பி அனுப்புகிறது. மீதமுள்ள இரத்தமானது கீழுள்ள கால்களுக்கு அனுப்பப்படுகிறது மற்றும் இன்பீரியர் வீனகேவாவிற்கும் திரும்புகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate