“தூய்மையான கிராம இயக்கம்” 2003-04 ஆம் ஆண்டில் முதன் முதலாக துவக்கப்பட்டு 2005-06ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. 2011-12ம் ஆண்டில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
•திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
•பல்வேறு தரப்பு மக்களின் சுகாதாரத் தேவைகளைக் கண்டறிவதுடன், குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள், இளவயதினர், வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சுகாதாரத் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்.
•அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் ஆகியனவற்றில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
•பல்வேறு புவியமைப்புகளில், நிலத்தடி நீர் கிடைக்கும் நிலை, நீராதாரம் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல்.
•அறிவுசார் திறமைகள் மூலம் சுகாதாரப் பழக்க வழக்கத்தை ஊக்குவித்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
•சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதில், சமுதாயத்திற்கும் ஊராட்சி அமைப்புகளுக்கும் மேலாண்மைத் திறனைப் பலப்படுத்துதல்.
•சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் பணியாற்றும் பலதரப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளை நிலைப்படுத்துதல்.
•தீவிர தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக கிராம ஊராட்சிகள் மற்றும் இதர துறைகளையும் சமூகத்துடன் ஒருங்கிணைத்தல்.
•திறந்தவெளியில் மலம் கழித்தலைத் தடுத்தல்.
•மழை நீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீரினை மறு சுழற்சி செய்தல்.
•திடக்கழிவு மேலாண்மை
•மனிதக் கழிவினைக் கொண்டு எரிவாயு கலன் அமைத்தல்.
•தனிநபர் இல்லங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் சுகாதார வசதி மற்றும் திறந்தவெளி மலங்கழித்தலை முழுமையாக அகற்றுவதன் மூலம் தூய்மையான சூழலை உருவாக்கியும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் சேகரிப்பு வாயிலாக 100% சுகாதாரத்தையும் எய்துகின்ற ஊராட்சிகள் மாநில அரசு வழங்கும் ரூ.5 இலட்சம் ரொக்கப் பரிசு பெறத் தகுதி அடைகின்றன.
•ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 31 சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு “ரொக்கம் மற்றும் செயலாக்க ஊக்கத்தொகை” வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/8/2020
அம்மா கைப்பேசி திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக...
‘இ–பெட் ரோல்’ திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொட...
அம்மா சிறு வணிகக் கடன் திட்டம் பற்றிய தகவல்கள் இங்...
அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் ப...