தடுப்பூசி அட்டவணை ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும். குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும். வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு. குடற்புழு நீக்க அட்டவணை ஆடுகளின் வயது பரிந்துரைகள் 2வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து 3வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து 4வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து 5வது மாதம் உருண்டைப்புழுக்களுக்கான மருந்து 6வது மாதம் உருண்டைப்புழுக்களுக்கான மருந்து 9வது மாதம் உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து 12வது மாதம் தட்டைப் புழுக்களுக்கான மருந்து ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்க வேண்டும். மாதம் பரிந்துரைகள் ஜனவரி - மார்ச் தட்டைப்புழுவிற்கான மருந்து ஏப்ரல் - ஜீன் உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து ஜீலை - செப்டம்பர் தட்டைப் புழுவிற்கான மருந்து அக்டோபர் - டிசம்பர் உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும். தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும். அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம். வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை வ. எண் நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் முதல் தடுப்பூசி தொடர் தடுப்பூசிகள் சிறப்புக் கவனம் 1. பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்) 3-4 மாதம் ஆண்டுக்கு ஒரு முறை தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். 2. கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி) 2 மாத வயதில் ஆண்டுக்கு ஒரு முறை நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம். 3. துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி) 6 வார வயதில் ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம். 4. ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி) 3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்) ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்) கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம். 5. அடைப்பான் நோய் தடுப்பூசி(அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி) நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில் நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை. நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும். 6. டெட்டனஸ் ஜன்னிதடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி) குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை - குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின். 7. தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி) 6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்) ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம். கேள்வி பதில் 1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது? கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும். 2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது? தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது. 3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது? பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம். ஆதாரம்: UD Integrated Farms