<div id="MiddleColumn_internal"> <h3>கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல்</h3> <ul> <li style="text-align: justify;">தற்போது கன்றுகளைத் தாயிடமிருந்து சீக்கிரம் பிரித்துவிடுவது மேலாண்மை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</li> <li style="text-align: justify;">சீக்கிரமே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பது பண்ணையினை நன்றாக மேலாண்மை செய்யவும் உதவுகிறது.</li> <li style="text-align: justify;">இம்முறையில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தனியாக கொட்டகைகளில் வளர்க்கப்பட்டு அவற்றுக்குத் தேவையான தீவன பராமரிப்பு முறைகளும், மேலாண்மை முறைகளும் பின்பற்றப்படுகின்றன.</li> <li style="text-align: justify;">இந்த மேலாண்மை முறையில் கன்றுகள் சீம்பாலை குடித்தவுடன், மீண்டும் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.</li> <li style="text-align: justify;">ஆனால் மாட்டிடமிருந்து பாலை முழுவதும் கறந்து, போதுமான அளவு பால் கன்றுகளுக்கு தனியாக அளிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தனியாக தட்டுகளிலோ அல்லது பால் பாட்டில் போன்ற அமைப்புடைய தட்டுகளிலிலோ பால் குடிக்க பழக்கப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் தீவன மேலாண்மையும் எளிதாகிறது.</li> <li style="text-align: justify;">தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகளின் உடல் எடை வாரம் ஒரு முறை எடுக்கப்பட்டு அவற்றின் உடல் எடைக்கேற்ப பால் அளிக்கப்பட வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon external-link" title="வெளி இணையதளம் ஒரு புதிய சாளரத்தில் திறக்கிறது" href="http://agritech.tnau.ac.in/ta/" target="_blank" rel="noopener">தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்</a></p> </div>