மகளிருக்கான விவசாய வயல்வெளிப்பள்ளி (FFS) - தக்காளியில் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு அனுபவம் தர்மபுரி மாவட்டத்தின், கோட்டூர், சிறியம்பட்டி மற்றும் இச்சாம்பள்ளம் கிராமங்களில், தக்காளி ஒரு முக்கிய பணப்பயிராகும். இங்குள்ள விவசாயிகள், விலை அதிகமான இடுபொருள்களைக் கொண்டு, தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் அதிகமாக உபயோகிப்பதால் சாகுபடிச் செலவு அதிகமானது. விவசாயிகளுக்கு மாற்று விவசாய சாகுபடி முறைகள் பற்றி கூறுவதன் மூலம், சூழ்நிலை பாதுகாக்கப்படும் மற்றும் முதலீட்டு செலவும் குறையும். இந்த நோக்கத்துக்காக, தாங்களாகவே கண்டுபிடித்து கற்கும் முறையின் அடிப்படையில் காணப்படும் விவசாயி வயல்வெளிப்பள்ளி, இதற்கு உகந்த முறையாக கருதப்பட்டது. செயல்பாடுகள் வயல் சூழல் ஆய்வு பங்குபெறும் விவசாயிகளின் அனுபவத்திற்கும் மற்றும் கற்றுக் கொள்வதற்காகவும், 0.64 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. விவசாயிகளின் முறைகள், பரிந்துரைக்கப்பட்ட முறை, வயல்வெளி ஆராய்ச்சி, IPM-யின் மாற்று முறைகள் ஆகியவற்றிக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஊடுபயிராக தட்டைபயிரையும், பாதுகாப்பு பயிராக மக்காச் சோளம், துளக்க சாமந்தி மற்றும் கம்பு ஆகியவை கூடுதல் வருமானத்திற்காக வளர்த்தனர். வாரந்தோறும் வயல் சூழல் ஆய்வு (AESA) மூலம் வயலில் காணப்பட்ட அனுபவங்களை, சிறு குழுவில் பகிந்து கலந்துரையாடப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும். ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி காட்சியகம், மண்ணின் ஈரப்பாதுகாப்பு போன்ற சிறு சிறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, குழுவில் இருப்பவர்களுக்கு அனுபவம் பெற வழிவகுத்தது. குழு இயக்கநிலை குழுவில் உள்ளவர்களுக்கு பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் குழு மேம்பாட்டு திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்கு, குழு இயக்க நிலை செயல்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தது. ஒரு குழுவில் உள்ளவர்கள் மற்ற குழுவிடமிருந்து அனுபவங்களை பகிர்ந்து கற்றுக் கொண்டனர். FFS ன் முடிவில் வயல் தினம் கொண்டாடப்பட்டு, அருகிலுள்ள ஐந்து கிராமத்து விவசாயிகளும் கூடி, தக்காளி சாகுபடியில், அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். பயிற்சிகள் நாற்றங்கால் உற்பத்தி; மேட்டுபாத்தி முறையில் தக்காளியில் நாற்றுகளை வளர்ப்பது, விவசாயிகளுக்கு மண்வழி நோய் கிருமிகளிடமிருந்து கன்றுகளை பாதுகாத்து, தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறையை உணர செய்த்து. நாற்றங்காலில், வரியில் விதைப்பது, முறையாக களையெடுப்பதற்கு உதவியதையும் உணர முடிந்தது. தடுப்பு பயிர் மற்றும் பொறி பயிர் உபயோகம் தக்காளி பொதுவாக தனிப்பயிராக பயிரிடப்படுகிறது. வயல்வெளிப்பள்ளி பங்கேற்புக்கு முன், விவசாயிகள் ஊடுபயிர் செய்தால், அவை, தக்காளியுடன் போட்டியும் மற்றும் பூச்சிகளை கவரவும் செய்யும் என்று நினைத்து வந்தனர். வயல்வெளிப்பள்ளியில் பங்கேற்றதன் மூலம், இந்த எண்ணங்கள் தவறு என்று உணர்ந்தனர். பாதுகாப்பு பயிரான மக்காச் சோளம் மற்றும் கம்பு, வெள்ளை ஈக்கு ஒரு தடுப்பாக அமைந்தது. துளக்க சாமந்தி, கனி துளைப்பான் முட்டை இடுவதற்கும், தட்டை பயிர், நன்மை செய்யும் உயிரினங்களுக்கு உணவாகவும் அமைந்தது. பல்பயன் தரும் மூடாக்கு முக்கியமாக மண் ஈரப்பதம் காத்தலின் பயன்களை கற்றுக் கொடுத்தனர். பண்னை கழிவுகளான கரும்பு தோகை, பயன்படாத வைக்கோல், மற்றும் தென்னை மட்டைகளை, தக்காளி சாகுபடியில் ஈரப்பதத்தை காக்கும் பொருள்களாக உபயோகப்படுத்தப்பட்டது. ஈரப்பதத்தை பராமரித்தால், பின்வரும் பயன்களை தங்கள் கண்களால் விவாசயிகளே பார்த்தனர். பயிரை அதிகமாக சேதப்படுத்தும், சிகப்பு சிலந்தியின் தாக்கம் குறைவாக இருத்தல். பாசன எண்ணிக்கையைக் குறைத்தல் (3-4 நாளுக்கு ஒரு முறையில் இருந்து 7 நாட்களுக்கு ஒரு முறை அளித்தல்) இலையின் எண்ணிக்கை, செடியின் உயரம் போன்ற உற்பத்தி காரணிகளை 30% அதிகமாதல் களை வளர்ச்சியைக் கட்டுபடுத்துதல் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பில், மஞ்சள் நிற ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சி பொறி, குழி பொறி உபயோகம் பற்றியும், முட்டை ஒட்டுண்ணி ட்ரைகோகிராமா, நன்மை செய்யும் பூச்சி கிரைசோபெர்லா பற்றியும், மிளகாய் -பூண்டு சாறு தெளிப்பு, லேன்டனா இலைசாறு, பஞ்சகாவியம், NPV, சுடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் பற்றியும் புதிதாக தெரிந்துக் கொண்டனர். ஒட்டும் வகை மஞ்சள் நிற பொறி விவசாயிகள், ஒட்டும் வகை மஞ்சள் நிற பொறி கொண்டு, சார் உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்துவதை கற்றனர். வெவ்வேறு நிறங்களை மற்றும் பொறியின் உயரத்தையும் மாற்றி சோதித்ததில், வண்ணமும், உயரமும் பூச்சிகளை கவருவதற்கு முக்கியமானவை என்பதை உணர்ந்தனர். முக்கிய பலன்கள் செலவு குறைத்தல் சில வெளி இடுபொருள்களை குறைப்பதன் மூலம், உற்பத்தி செலவை ஏக்ககுக்கு, ரூ.13,000 வரி குறைத்தனர். நாற்றங்காலை தானாகவே உற்பத்தி செய்வதால், செலவை 68% குறைத்தனர். முந்தைய சாகுபடி முறையில் உபயோகித்த இரசாயனங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை குறைத்ததால் உற்பத்தி செலவை 75% குறைத்தனர். பாத்தியில் களையெடுப்பு தேவையில்லையாதலால், செலவை 16% குறைத்தனர். எனவே மொத்தத்தில் 29%, உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டது. IPM-ல் முடிவுகள் - மகளிரால் ஏற்படும் வித்தியாசம் சாகுபடியில் முக்கிய முடிவுகளை, பொதுவாக கோட்டுரில் ஆண்கள் தான் எடுப்பர். ஆனால் இம்முறை, FFS ல் பங்குபெற்ற பெண்கள், மாற்று சாகுபடி முறையை பயன்படுத்தி சிவப்பு சிலந்தி தாக்கத்தை குறைத்தனர். இந்த பயன்களை கண்ட பின்னர், முதலில் பெண்களின் ஆலோசனைகளை ஏற்க தயக்கம் காட்டிய ஆண்கள், இப்பொழுது ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்னொரு வகையில், விலை அதிகமான இரசாயனங்கள் இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆண்கள், பெண்களை FFS ல் கலந்துகொள்ள ஊக்கப் படுத்துகின்றனர். இப்பொழுது பெண்கள் பண்னை உற்பத்தியில், தாங்கள் பங்களிப்பதை நினைத்து பெருமிதம் அடைகின்றனர். செலவு மற்றம் வருமானம் ஒப்பீடு (ஒரு ஏக்கருக்கு) வரிசை எண் செயல்முறை சாதாரணசாகுபடி FFSபாத்தி வித்தியாசம் (%) 1 உற்பத்தி செலவு நிலம் தயாரித்தல் 2200 2200 - பொருள்கள் 12,000 12,000 இடு பொருள்கள் (நாற்று, தொழுஉரம், உரம், பூச்சிக்கொல்லி) 15,590 5125 67 வேலையாட்கள் 15,860 13,260 16 மொத்தம் 45,650 32,585 29 2 மகசூல் 18,420 17,800 -3 3 மொத்த வருமானம் 2,30,250 2,22,500 -3 4 நிகர வருமானம் 1,84,600 1,89,915 3 அதிகமான வருமானம் உற்பத்திச் செலவு குறைவால், ஒரு ஏக்கருக்கு, ரூ.5,315 அதிக நிகர வருமானம் கிடைப்பதை விவசாயிகள் உணர்ந்தனர். 3% அதிகமானது. இரசாயனச் சாகுபடியிலிருந்து LEISA செயல்முறைக்கு மாறிய முதல் வருடத்திலேயே கிடைத்ததாகும். விவசாயின் கண்டுபிடிப்பு - ஒட்டும் வகை மஞ்சள் பொறிக்கு ஒரு வட்டார மாற்று பொறி குழுவில் பங்கு கொண்டவர்கள் ஒட்டும் வகை மஞ்சள் பொறிக்கு ஒரு மாற்றினை கண்டுபிடித்தனர். தேங்காய் ஓடு மற்றும் மட்டைகளை சேகரித்து, மஞ்சள் நிறம் பூசி வெளிபுறத்தை விளக்கெண்னை தடவி, பூச்சிகளை கவர உபயோகப்படுத்தினர். 3 - 4 நாட்களுக்கு ஒரு முறை, என்ணெய் தடவ வேண்டும். குழந்தைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அறிய செய்தல் இது குழந்தைகள் சுற்று சூழுல் பற்றி அறிய ஒரு சிறந்த வாய்ப்பு. குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் FFS-ன் சில செயல்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் வயல் சூழல் ஆய்வு, விளக்கப் படம் வரைதல் அவற்றை விளக்குதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டனர். பயிர், பூச்சி மற்றும் அதன் உறவு ஆகியவற்றை புரிந்துக் கொண்டு அதை அவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். மூலம்: AME நிறுவனம் தொடர்புடைய இணையதளங்கள் SRI- System of Rice Intensification துல்லிய பண்ணைய திட்டம் - தமிழ்நாடு