<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">வறட்சி வருவதை கண்டறிதல்</h3> <p style="text-align: justify;">அனுபவங்களை கொண்டு, வேளாண் பட்டங்களில் / பருவங்களில் வரப் போகும் வறட்சியை குறிப்பிடும் சில எச்சரிக்கை சூழ்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:</p> <p style="text-align: justify;"><strong>கரீஃப் (ஜுன் - ஆகஸ்ட் காலக்கட்டத்தில் விதைப்பு)</strong></p> <ul style="text-align: justify;"> <li>தென் மேற்கு பருவ மழை காலதாமதமாகுதல்</li> <li>தென் மேற்கு பருவ மழை செயல்பாட்டில் அதிக இடைவெளி</li> <li>ஜுலை மாதத்தில் போதுமான மழை பொழியாது இருத்தல்</li> <li>கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தல்</li> <li>நீர் சேமிப்பு அணைகளில், நீர் வரத்து அதிகமாகாமல் இருத்தல்</li> <li>கிராமபுற குடிநீர் தேவைகளை சந்திக்கும் நீரிநிலைகள் வற்றுதல்</li> <li>வறட்சியற்ற நல்ல வருடத்தில் காணப்படும் அளவிற்கு, நிலங்களில் தொடர் விதைப்பு செயல்பாடுகள் குறைவுபடுதல்</li> </ul> <p style="text-align: justify;"><strong>ரபி (நவம்பர் - ஜனவரி காலக்கட்டத்தில் விதைப்பு)</strong></p> <ul style="text-align: justify;"> <li>தென்மேற்கு பருவமழை காலத்தின் கடைசியில் (செப்டம்பர் 30ல்) போதுமான மழை இல்லாது இருத்தல்</li> <li>வறட்சியற்ற வருடத்தில் உள்ள நிலத்தடி நீரை விட, நிலத்தடி நீர் கம்மியாதல்</li> <li>அணைகளில் நீர் மட்டம் வழக்கத்தை விட குறைவாக இருத்தல். இது தென் மேற்கு பருவ மழைக்கு பின்பு, குறைந்த அளவு நீர்வரத்தை குறிக்கும்</li> <li>மண்ணின் ஈரப்பதம் மிகவும் குறைந்து காணப்படுதல்</li> <li>கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தல்</li> <li>தமிழ் நாடு மற்றம் புதுச்சேரிக்கு, வடகிழக்கு பருவ மழை, மிக அவசியமாகும் (அக்டோபர் - டிசம்பர்)</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஏனைய பருவங்களுக்கு</strong></p> <ul style="text-align: justify;"> <li>குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மராத்வாடா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் பகுதிகளுக்கு, மார்ச் அல்லது ஏப்ரல் முக்கிய மாதங்களாகும். இந்த சமயங்களில், போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்தால், பல பகுதிகளில் தீவிர குடிநீர் தட்டுபாடு காணப்படும்.</li> <li>சில மாநிலங்களுக்கு, சில பயிர்களுக்கு வருடத்தில் குறிப்பட்ட நேரத்தில் ஏற்படும் மழை மிக முக்கியமானதாகும் உதாரணத்திற்கு, கேரளாவில் பணப்பயிர்களுக்கு, பிப்ரவரியில் மழை அவசியமாகும்</li> </ul> <p style="text-align: justify;">மூலம்: <a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://agricoop.nic.in/en" target="_blank" rel="noopener">வேளாண் துறை</a></p> <h3 style="text-align: justify;">இந்தியாவின் வறட்சி - சில தகவல்கள்</h3> <p style="text-align: justify;">இந்தியாவில், பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை (ஜுன் - செப்டம்பர்) பொய்க்கும் போது, வறட்சி ஏற்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அடுத்த பருவகாலம் வரும் வரை பயிரிடுவதற்கு காத்திருக்க வேண்டும். ஏனென்றால், நாட்டின் 73% வருடாந்திர மழை, தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே கிடைக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>நாட்டின் மழை அளவு பற்றிய புள்ளி விவர குறிப்புகள் அடிப்படையில், வறட்சி சம்பந்தப்பட்ட கீழ்கண்ட தகவல்களை அறியலாம்.</strong></p> <ul style="text-align: justify;"> <ul style="text-align: justify;"> <li>நம் நாட்டின் மொத்த பரப்பளவில், 16% வறட்சியடைவதற்கான வாய்ப்பும், வருடத்தில் 50 மில்லியன் மக்கள் வறட்சியின் தாக்கத்திற்கும் ஆளாகின்றனர்.</li> <li>Êசாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில், 68% வெவ்வேறு அளவிளான வறட்சி சூழ்நிலைகளை சந்திக்கிறது</li> <li>35% பரப்பளவு, 750 - 1125 மீ.மீ மழையை பெறக்கூடியவை. இவை வறட்சிக்கு உட்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.</li> <li>பெரும்பாலும் வறட்சிக்கு உட்படும் பகுதிகள், வறண்ட நிலப்பகுதி (19.6%), பகுதி வறண்ட நிலப்பகுதி (37%) மற்றும் மிதமான ஈரப்பசையை உடைய நிலப்பகுதி (21%) ஆகிய பகுதிகளே ஆகும். இவை நாட்டின் மொத்த நிலப்பரப்பான 329 மில்லியன் ஹெக்டரில், 77.6% ஆகும்.</li> <li>நாட்டின் சராசரி வருடாந்திர மழை அளவு 1160 மீ.மீ ஆகும். இதில் 85%, 100-120 நாட்களுக்குள்ளேயே (அதாவது தென்மேற்கு பருவ மழையின் போது) பெறக்கூடியது.</li> <li>33% பரப்பளவு, 750 மீ.மீ -க்கும் குறைவான மழையை பெறக்கூடியவை. இவை கடுமையான வறட்சிக்கு உட்படும் வாய்ப்பு அதிகம்.</li> <li>21% பரப்பளவு, 750 மீ.மீ -க்கும் குறைவான மழையை பெறக்கூடியது (இராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் தீபகற்ப பகுதி)</li> <li>பத்து வருடத்தில், நான்கு வருடங்கள் நிலையற்ற மழையை பெறக்கூடியது இந்திய வானிலை.</li> <li>இந்நியாவின் பாசன திறன் 140 மில்லியன் ஹெக்டர் ஆகும் (76 மில்லியன் ஹெக்டர் நிலமட்ட நீர்ப்பாசனம் + 64 மில்லியன் ஹெக்டர் நிலத்தடி நீர் பாசனம்)</li> <li>குறைந்து வரும் நிலத்தடி மற்றம் நிலமட்ட நீர் வசதிகள், சாகுபடி செய்யப்படும் அனைத்து நிலங்களும் பாசனம் செய்வதற்கு ஏதுவானதாக இல்லை என்பதை குறிக்கிறது.</li> <li>பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, நகரமயமாதல், தீவிர சாகுபடி மற்றும் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகியன, தனி நபருக்கான நீர் கிடைக்கும் நிலையை குறைய செய்கிறது. இப்பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.</li> <li>இதனால், வறட்சி சில பகுதிகளிலோ அல்லது பல பகுதிகளிலோ வருவதை தவிர்க்க இயலாது.</li> </ul> </ul> <iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/SA0NltVqqLY" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe> <p style="text-align: justify;">மூலம்: வறட்சி - தேசிய நெருக்கடி மேலாண்மை திட்டம், இந்திய அரசின் வேளாண் அமைச்சகம்</p> </div>