<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">வீணாக்கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்</h3> <p style="text-align: justify;">இன்றைய தேதியில் உலகத்தில் 700 கோடி பேர் உள்ளனர். 2050 ஆண்டு இந்த மக்கட்தொகை 900 கோடி எட்டும் என கணக்கிட பட்டு உள்ளது.</p> <p style="text-align: justify;">அமெரிக்காவில் அதிகமான வறட்சி. ஆஸ்ட்ரேலியா அப்படியே. 40% சதவீதம் குறைந்து சாகுபடி செய்த வருடங்கள் அவை. அப்படியும் உலகில் 2239 மில்லியன் டன் உணவு உற்பத்தி ஆனது. உலக உணவு நிறுவனம் கணக்கு படி இந்த உணவில் 1300 கோடி மக்கள் உணவு அளிக்க முடியும்!</p> <p style="text-align: justify;">அதாவது இன்றைய உணவு உற்பத்தியிலேயே இன்றைய மக்கள் தொகையை போன்று 2 மடங்கு தாக்கு பிடிக்க முடியும். அப்படியானால் உணவு எங்கே போகிறது?</p> <p style="text-align: justify;">மேற்கத்திய நாடுகளில் 40% உணவு வீணாக்க படுகிறது. ஒரு வருடத்தில் $165 பில்லியன் அளவு உணவு வீணாக போகிறது. தேவையில்லாமல் வாங்குவது, தூக்கி போடுவது, போன்று பல காரணங்கள். சூபர் மார்க்கெட்களில் 50% வரை காய்கறிகளும் பழங்களும் அழுகி தூக்கி போட படுகின்றன.</p> <p style="text-align: justify;">இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 66 மில்லியன் டன் உணவு ஸ்டாக்கில் இருந்தது. சரியாக சேமிக்காமல் மழையிலும் பூச்சிகளாலும் கெட்டு போனவை பல மில்லியன் டன்கள். இது போதாது என்று 9 மில்லியன் டன் அரிசி நாம் ஏற்றுமதி செய்கிறோம். நம் நாட்டில் பட்டினியும் பசியும் இருக்கும் போது இப்படி உணவை வீணாக்கி ஏற்றுமதி செய்து பற்றாக்குறை செயற்கையாக அரசுகள் செய்கின்றன.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/copy2_of_3.jpg" /></p> <p style="text-align: justify;">இது முழுக்க முழுக்க விநியோகம் பிரச்னையே (Distribution problem) தவிர குறைந்த உற்பத்தி (Not production problem) மூலம் வந்த பிரச்னை அல்ல. விளைவதை நன்றாக சேமித்து விநியோகம் செய்தாலே பசி பட்டினி குறையும்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: பசுமை தாயகம்</p> </div>