<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">கரும்பு</h3> <p style="text-align: justify;">ஒரு வருடத்தில் சராசரியாக 12000 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றது.</p> <p style="text-align: justify;">கரும்பு பயிரில் நடவுப் பயிரை விட மறுதாம்பு பயிரில் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/copy_of_28.jpg" /></p> <h3>தாளை பூத்தல்</h3> <p style="text-align: justify;">மறுதாம்பில் இளம் கரும்பு பயிரில் இரும்புச் சத்துப் பற்றாக்குறையில் இலைகள் மஞ்சள் நிறமாகி நாளடைவில் கரும்பின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதற்கு தாளை பூத்தல் என்று பெயர்.</p> <h3>வழிமுறைகள்</h3> <ol> <li style="text-align: justify;">இதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு பெரஸ் சல்பேட் 4 கிலோ, சிங்க் சல்பேட் 2 கிலோ 2 நுண்ணூட்டச்சத்தையும் முதள் நாள் இரவில் 10 லிட்டர் (1 குடம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் 2 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.</li> <li style="text-align: justify;">அத்துடன் 4 கிலோ யூரியாவைச் சேர்த்து கலக்கி அந்தக் கரைசலைக் கைத்தெளிப்பான் கொண்டு 14 டேங்க் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">இதன்படி தெளித்தால் 10 நாள்களுக்குள் மஞ்சள் நிறம் மாறி துளிர்த்து வரும் இலைகள் பச்சை நிறமாக வளரும்.</li> <li style="text-align: justify;">ஒருமுறை தெளித்து மஞ்சள் நிறம் மாறவில்லை எனில் 15 நாள்கள்</li> <li style="text-align: justify;">கழித்து மறுமுறையும் மேற்கண்டவாறு தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">இதனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து, கரும்பு எடை கூடி மறுதாம்பு வயலிலும் அதிக மகசூல் பெற முடியும்.</li> <li style="text-align: justify;">எனவே கரும்பு விவசாயிகள் மேற்கண்ட தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.</li> </ol> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத்துறை</p> </div>