<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?</h3> <p style="text-align: justify;">நெல் அறுவடை தொடங்கும் நேரத்தில் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும்.</p> <ul> <li style="text-align: justify;">பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும்.</li> <li style="text-align: justify;">முதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தக் கூடாது.</li> <li style="text-align: justify;">அறுவடை செய்த விதைக் குவியல்களை நன்கு சுத்தம் செய்து களங்களில் உலர வைக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">விதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாகக் குறைத்து 12 முதல் 13 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். பின்னர், நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப் பைகளில் சேமிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">மேலும், அடையாளத்துக்காக விதைகளின் ரகத்தை அதில் எழுதி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: திருநெல்வேலி விதைப் பரிசோதனை மையம்</p> </div>