<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அங்ககப் பொருளும் நூற்புழுவும்</h3> <p style="text-align: justify;">தேயிலைக் கழிவு, மரவள்ளி ஆலைக் கழிவு, பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளுஞ்சி. எருக்கு இலை மற்றும் தக்கைப் பூண்டு, எண்ணெய்வித்துப் பிண்ணாக்குகளான வேப்பம்பிண்ணாக்கு மற்றும் ஆமணக்குப் பிண்ணாக்கு போன்றவற்றைத் தேவைக்கேற்ற அளவில் இடுவதால் கீழ்கண்ட வகைகளில் நூற்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.</p> <ol> <li style="text-align: justify;">சில அங்ககப் பொருட்கள் தாமாகவே நூற்புழுக்களை அழிக்கும் திறன் கொண்டவை. (உதாரணம் –வேப்பம் பிண்ணாக்கு).</li> <li style="text-align: justify;">இப்பொருட்கள் மண்ணின் தன்மையை மாற்றி நூற்புழுக்கள் வாழ ஏதுவற்ற சூழலை ஏற்படுத்துகின்றன.</li> <li style="text-align: justify;">பயிரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் நூற்புழுக்களால் ஏற்படும் சேதம் ஈடு கட்டப்படுகின்றது.</li> <li style="text-align: justify;">தாவரங்களுக்கு எதிர்ப்புத்திறன் உண்டாகிறது.</li> <li style="text-align: justify;">நூற்புழுக்களுக்கு எதிரி உயிரினங்கள் அதிக அளவில் பெருக்கமடைந்து நூற்புழுக்களை அழிக்கின்றன.</li> <li style="text-align: justify;">இப்பொருட்கள் மண்ணில் மட்கும் போது உண்டாகும் வெப்பமும் அப்போது உண்டாகும். சில அங்கக அமிலங்களும் நூற்புழுக்களை அழிக்கின்றன.</li> </ol> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://agritech.tnau.ac.in/ta/" target="_blank" rel="noopener">தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்</a></p> </div>