<div id="MiddleColumn_internal"> <h3>வாழையில் சூறை காற்று சேதங்களை தடுக்கும் முறைகள்</h3> <ul> <li style="text-align: justify;">வாழைத்தோட்டங்களை சுற்றிலும் 'சுங்குனியானா' ரக சவுக்கு மரக்கன்றுகளை நடுவதால் காற்றில் மரங்கள் சேதமாவதை தடுப்பதுடன் உபரி வருவாய் கிடைக்கும்”,</li> <li style="text-align: justify;">கடந்த சில நாட்களுக்கு முன் கம்பம் பள்ளத்தாக்கு, சின்னமனுர் பகுதியில் வீசிய சூறைக்காற்றால், அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.</li> <li style="text-align: justify;">பத்து மாதங்களாக பாதுகாத்த வாழை மரங்கள் ஒரு சில நிமிடம் வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.</li> <li style="text-align: justify;">இந்த வேலியால் காற்றின் மேலடுக்கில் இருந்து வரும் காற்றின் வேகத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்க முடியாது.</li> <li style="text-align: justify;">சுங்குனியானா ரக சவுக்கை நடவு செய்வதன் மூலம் காற்றினால் வாழைமரம் சேதமாவதை தடுக்க முடியும்.</li> <li style="text-align: justify;">கடைசி உழவுக்கு பின் வரப்பின் உள்பக்கம் சவுக்கு கன்று நடவு செய்ய வேண்டும்.</li> <li style="text-align: justify;">ஒரு மீ., இடைவெளியில் அடுத்த வரிசையை போல நடவேண்டும். பின் இரண்டு மீ., இடைவெளியில் பெருக்கல் குறி போல நட வேண்டும்.</li> <li style="text-align: justify;">வாழை மரங்கள் காற்றின் வேகத்தில் சேதமாவதை தடுப்பதுடன் உபரி வருவாயும் கிடைக்கும்</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தினமலர் விவசாயம்</p> </div>