<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் இரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்</h3> <h4 style="text-align: justify; ">இரண்டாம் முறையீட்டை எப்போது செய்வது?</h4> <ul style="text-align: justify; "> <li>முதன்மை முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பு உங்களுக்கு திருப்தியளிக்காத போது.</li> <li>பொதுதகவல் அதிகாரியினால் உங்களுக்குத் தரப்பட்ட தகவல் போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது (அ) தவறானதாக இருக்கும் போது மற்றும் தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக அமையும் போது.</li> <li>பொதுத்தகவல் அதிகாரி (PIO) அல்லது முதன்மை முறையீட்டு அதிகாரி (AA) உங்களது மனுவில் கோரப்பட்டுள்ள தகவலைத்தர நிராகரிக்கும்போது.</li> <li>மேல்முறையீட்டு அதிகாரி, குறிப்பிட்ட கால அளவுக்குள் மனுவிற்கான தீர்ப்பு கூறாமலிருந்தால்.</li> <li>துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது மனுவை பெறமறுத்தால், அல்லது மனுவை மாநில/மத்திய பொதுதகவல் அதிகாரிகளுக்கு அல்லது மாநில/மத்தியத் தகவல் குழுக்களுக்கு அனுப்பமறுத்தால்.</li> <li>தகவல் அறியும் சட்டம் 2005 இன் மூலம் தகவலைப் பெற மனுவிற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணினால்.</li> </ul> <h4 style="text-align: justify; ">இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?</h4> <ul style="text-align: justify; "> <li>மாநிலத்தகவல் ஆணையர் அலுவலகத்தில் (State Information Commission (SIC)) மனுவானது மாநில பொது அதிகாரத்திற்குட்பட்டிருந்தால் (State’s Public Authority)</li> <li>மத்தியத்தகவல் ஆணையர் அலுவலகத்தில் (State’s Public Authority) மனுவின் சாரம் மத்தியத்தகவல் பொது அதிகாரத்திற்குட்பட்டிருந்தால்</li> </ul> <h4 style="text-align: justify; ">இரண்டாம் மேல்முறையீடு செய்யக்கால அவகாசம்</h4> <ul style="text-align: justify; "> <li>கூறப்பட்டுள்ள காலாவதியாகிய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அல்லது முதன்மை மேல்முறையீட்டு அதிகாரியிடமிருந்து தகவல்பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுதல் நிராகரிப்பு) 90 நாட்களுக்குள்</li> <li>மாநில / மத்தியத்தகவல் ஆணையம், மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால் மேல்முறையீட்டாளரின் மனு தரப்பட்டு 90 நாள்கள் சென்ற பின்னும் இரண்டாம் மனு சமர்ப்பிக்கலாம்.</li> </ul> <h4 style="text-align: justify; ">இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை எழுதும் முறை</h4> <ul style="text-align: justify; "> <li>உங்கள் மனுவை வெள்ளைத்தாளில் எழுதவும் செய்யலாம் அல்லது <a class="pdf-icon" href="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/e-governance/b86ba4bbebb0bcd-b95bbebb0bcdb9fbcd-b9abc7bb5bc8/secondappealformtamil.pdf" target="_blank"> இரண்டாவது முறையீட்டிற்கான படிவம்</a> என்னும் இணைப்பிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.</li> <li>மனுவினைக் கையால் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்யலாம்.</li> <li>மனு, ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் (மத்தியத்தகவல் ஆணையம் தொடர்பான மனுவாக இருப்பின்) அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும் (மாநிலத் தகவல் ஆணையம் தொடர்பான மனுவாக இருப்பின்)</li> </ul> <h4 style="text-align: justify; ">மனுவினை/விண்ணப்பபடிவத்தினைத் தயாரித்தல்</h4> <ul style="text-align: justify; "> <li>தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.</li> <li>இணைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலை பக்க எண்ணுடன் சேர்க்கவும்.</li> <li>அனைத்து ஆவணங்களையும் 5 நகல்கள் எடுத்துக்கொண்டு (அதாவது, மேல்முறையீட்டு மனு, தகவலுக்கான வேண்டுதல், முதலில் அனுப்பப்பட்ட மனு, பொதுதகவல் அதிகாரியிடம் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் போன்றன) அவைகளில் சுய ஒப்பமிட (self attested) வேண்டும். உங்களுக்காக ஒரு சொந்த நகல் ஒன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.</li> </ul> <h4 style="text-align: justify; ">மனுவினை எவ்வாறு அனுப்ப வேண்டும்</h4> <ul style="text-align: justify; "> <li>பதிவுத்தபால் மூலம் மனுவின் ஐந்து நகல்களை அனுப்பவேண்டும்.</li> <li>மனுவிடன் ஒப்புதல் அட்டையை (acknowledgement card) இணைத்து அனுப்பவும்.</li> <li>மத்திய தகவல் ஆணையத்திற்கு (Central Information Commission) அனுப்பப்பட வேண்டிய மனு எனில் கணிப்பொறிவழி (online) <a class="ext-link-icon" href="http://rti.india.gov.in/rti_direct_complaint_lodging.php" target="_blank"><strong>சமர்ப்பிக்கலாம்.</strong></a> என்ற இணையதள முகவரியில் மனுவினைச் சமர்ப்பிக்கலாம்.</li> </ul> <h4 style="text-align: justify; ">தகவல் தருவதற்கான கால அவகாசம்</h4> <ul style="text-align: justify; "> <li>சாதாரணமாக மனுவின் மீதான முடிவு 30 நாட்களில் தரப்பட வேண்டும். விதிவிலக்கான சில வழக்குகளில் 45 நாட்கள் ஆகலாம்.</li> <li>மத்திய/மாநில தகவல் ஆணையம் மனுவினை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மனுவிற்கு பதிலளிக்க வேண்டிய கால அவகாசம் துவங்குகிறது.</li> </ul> <p style="text-align: justify; "><strong>மாநில/மத்திய தகவல் ஆணையக்குழு</strong></p> <p style="text-align: justify; ">இருவரையும் கட்டுப்படுத்தினாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் (Public Authority) மாநில / மத்திய தகவல் ஆணையத் தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.</p> </div>