<div id="MiddleColumn_internal"> <h3>அறிமுகம்</h3> <p style="text-align: justify;">வன உயிர் மற்றும் நீர் வளங்கள் சார்ந்த பல சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால் நன்னீர் பல்லுயிர் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்கள் குறைந்த அளவிலியே உள்ளது. அவ்வித சட்டங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானது.</p> <h3>இந்திய மீன்பிடிச்சட்டம், 1987</h3> <ol style="text-align: justify;"> <li>மீன்களை பேரளவில் அழிக்கக்கூடிய மீன்பிடி முறைகளான நச்சு மற்றும் வெடி வைத்து பிடிப்பது போன்றவற்றை தடை செய்தல்.</li> <li>சில நீர் நிலைகளில் மாநில அரசு விதிகள் மூலம் மீன்களுக்கு பாதுகாப்பு அளித்தல்</li> </ol> <p style="text-align: justify;">சில மாநிலங்களில், மாநிலங்கள் அளவிலான மீன்சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவைகள் முறையே கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா</p> <ul style="text-align: justify;"> <li>கேரளா : உள்நாட்டு மீன்பிடிச்சட்டம்</li> <li>கர்நாடகா : கர்நாடகா உள்நாட்டு மீன்பிடி (பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் சீரமைப்பு) சட்டம், 1996</li> <li>மகாராஷ்ட்ரா : 1961 மகாராஷ்ட்ரா சட்டம்</li> </ul> <h3>பல்லுயிர் சட்டம், 2002</h3> <p style="text-align: justify;">இச்சட்டம் இந்தியாவில் காணப்படும் பல்லுயிரினங்களைப் பற்றியதாகும். அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளுக்கான பொருத்தமான மேலாண்மை நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தையும், வன உயிர்களைப் பிடிப்பதை தடைசெய்வது அல்லது கட்டுப்படுத்துவதைப் பற்றியதாகும்.</p> <p style="text-align: justify;">அனைத்து மாநில பல்லுயிரிய வாரியங்களும், உள்ளுர் மக்கள் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற ஏதுவாக பல்லுயிர் பதிவேட்டை பெற்றிருக்க வேண்டும்.</p> <h3>ஈர நில விதிகள் 2009</h3> <ol style="text-align: justify;"> <li>ஈரநில விதிகள் அதன் அளவு, வாழிடம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை அடிப்படையாக கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு, அந்தப்பிரிவு தகவலை ஈரநிலங்களுக்கு பொறுப்புடைய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவித்தல்.</li> <li>இந்த மூன்று பிரிவுகளின் கீழ் அடங்கும் ஈரநிலங்களில் குறிப்பாக எந்த செயல்கள் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது அனுமதிக்கப்பட கூடாது என்பதை விளக்குதல்</li> </ol> <h3>தேசிய நீர்க்கொள்கை, 2012</h3> <ol style="text-align: justify;"> <li>மனிதன் உயிர் வாழ தண்ணீர் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது, தண்ணீரின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவில் தண்ணீரின் பயன்பாடு நீர் வள மேலாண்மையில் உள்ள இடைவெளிகளைப் பற்றி இக்கொள்கை விளக்குகிறது.</li> <li>எதிர்காலத்தில், நம் நீர் வளங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.</li> </ol> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>மேற்குத்தொடர்ச்சி மலை, நன்னீர் பல்லுயிரியம், தமிழ்நாடு வனத்துறை</p> </div>