<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify; ">நிலஅளவைத் துறையின் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர் உள்ளார். உதவி இயக்குநரின் கீழ் இரண்டு ஆய்வாளர்களும், ஆய்வாளர்களின் கீழ் எட்டு வட்டங்களிலும் வட்டத் துணை ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.</p> <p style="text-align: justify; ">இராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிலஅளவை பிரிவு வட்டத் துணை ஆய்வாளரின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. அங்கு கீழ்க்கண்ட பணிகள் நடைபெற்று வருகிறது.</p> <h3 style="text-align: justify; ">பட்டா மாறுதல்</h3> <p style="list-style-type: none; text-align: justify; ">பொது மக்களால் கிரையம் வாங்கப்படும் நிலங்களில் முழுமையாக வாங்கப்படும் நிலத்திற்கு மண்டல துணை வட்டாட்சியராலும், பகுதியாக வாங்கப்படும் நிலங்களில் உட்பிரிவு செய்யப்பட்டு வட்டாட்சியரால் பட்டா வழங்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify; ">புல எல்லை அளவு செய்தல்</h3> <p style="list-style-type: none; text-align: justify; ">பட்டாதாரர் இருவருக்கும் இடையே எல்லை தொடர்பான தாவா ஏற்படும் பொழுது அல்லது பட்டாதாரரால் தனது எல்கையினை தெரிந்து கொள்ளும்பொருட்டு மனு செய்யும்பொழுது புல எல்லை அளந்து காண்பிக்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify; ">ஆக்கிரமிப்பு அகற்றுதல்</h3> <p style="list-style-type: none; text-align: justify; ">ஊராட்சி, நகராட்சி மற்றும் அரசுத் துறைகளுக்கு சொந்தமான அல்லது புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படும்பொழுது புல எல்லைகள் அளவு செய்து ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுகிறது.</p> <h3 style="text-align: justify; ">நில ஒப்படைப்பு / வீட்டு மனை ஒப்படைப்பு</h3> <p style="list-style-type: none; text-align: justify; ">நிலமற்ற மற்றும் வீட்டு மனை இல்லாத ஏழை விவசாயிகளுக்கு தரிசு மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் அரசால் நில ஒப்படை செய்யும் பொழுது அது சம்பந்தமாக பட்டா வழங்கும் பொருட்டு நிலஅளவை உட்பிரிவு பணிகள் செய்யப்படுகிறது.</p> <h3 style="text-align: justify; ">நில எடுப்பு</h3> <p style="list-style-type: none; text-align: justify; ">அரசுக்கு மொத்தமாக நிலம் தேவைப்படும் பட்சத்தில் நில எடுப்பு சட்டத்தின்படி ரயத்துகளிடமிருந்து நிலத்தினை அரசுக்கு பெற தேவையான அளவுப் பணிகள் நிலஅளவை சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது.</p> <p style="text-align: justify; ">தொடர்புக்கு:</p> <p style="list-style-type: none; text-align: justify; ">உதவி இயக்குநர்,<br style="list-style-type: none; " />மாவட்ட நிலஅளவை அலுவலகம்,<br style="list-style-type: none; " />மாவட்டஆட்சியர்அலுவலகம்,<br style="list-style-type: none; " />இராமநாதபுரம் மாவட்டம் – 623503.<br style="list-style-type: none; " />தொலைபேசி : 04567-230657</p> </div>