விவரங்கள் விரிவாக்கம் பரப்பளவு 3363 சதுர.கி.மீ. sq.kms மக்கள் தொகை 1,495,661 மாவட்ட தலைமையகம் நாமக்கல் மொழி தமிழ் வலைதளம் http://www.namakkal.tn.nic.in/ வரலாறு மற்றும் புவியியல் நாமக்கல் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியதால் இரண்டிற்கும் ஒரு வரலாறுதான் உண்டு. சேர, சோழ, பாண்டியர்களிடம் ஹோய்சாளர்கள் 14ஆம் நூற்றாண்டின் ஆட்சியை உருவாக்கினார்கள். அதனை தொடர்ந்து விஜயநகர பேரரசு 1565ஆம் ஆண்டும் மதுரை நாயக்கர்கள் 1623ஆம் ஆண்டும் ஆட்சிக்கு வந்தனர். அதன் பிறகு சுல்தான்களாலும் மைசூர் மகாராஜாவாலும் 1750களில் கையகப்படுத்தப்பட்டது. இந்த சமயத்தில் ஹைதர் அலி இந்த பகுதிக்காக ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது 1768ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. சுற்றுலா இயற்கை எழில் கொஞ்சும் நாமக்கல் மாவட்டம் மலைகள், அருவிகள், படகு இல்லங்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் கோயில்களை கொண்டது. கொல்லி மலை ஒரு சிறந்த சுற்றுலாத்தலம் ஆகும். சங்க காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்த கொல்லி மலை சிறந்த முறையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அறப்பல்லீஸ்வரர் சிவன் ஆலயம் மற்றும் ஆகாய கங்கை எனும் அருவி பெரியகோவிலூரில் அழகாக அமைந்துள்ளது. மேலும் கொல்லி மலையிலுள்ள எட்டுகை அம்மன் கோயிலும் சிறப்பம்சம் கொண்டதாகும். ஆதாரம் : தமிழ்நாடுஅரசு வலைதளம்