<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify; "><strong>சமுக நலத்துறை பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது:</strong></p> <ul> <li>மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்</li> <li>ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்</li> <li>அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்</li> <li>டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்</li> <li>டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம்</li> <li>முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்</li> <li>சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம்</li> </ul> <h3>பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017</h3> <p style="text-align: justify; ">நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்களை சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார். <span>தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. </span><span>ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.</span></p> <h3>குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006</h3> <p style="text-align: justify; ">18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.</p> <h3>குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண் – 1098</h3> <p style="text-align: justify; ">அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி</p> <p style="text-align: justify; ">சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளை சோ்த்து கொள்வதற்க்கு <span>தகுதிகள் :</span></p> <ul> <li>14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்</li> <li>விதவை மகள்</li> <li>ஆதரவற்ற பெண்கள்</li> <li>இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify; ">a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.</p> <p style="text-align: justify; ">b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.</p> <h3>குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005</h3> <p style="text-align: justify; ">உடல் ரீதியான, <span>பாலியல் ரீதியான, </span><span>பொருளாதார ரீதியான, </span><span>வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல். </span><span>பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் </span><span>நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.</span></p> <h3>வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961</h3> <p style="text-align: justify; ">திருமணத்திற்கு முன்போ (அ) பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ (அ) கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.</p> <p style="text-align: justify; ">மணமகள் / மணமகனின் பெற்றோர் / உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.</p> <p style="text-align: justify; ">வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.</p> <p style="text-align: justify; ">ஆதாரம் - <a class="ext-link-icon" href="https://nilgiris.nic.in/" target="_blank">நீலகிரி மாவட்டம் </a></p> </div>