<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">நோக்கம்<span> </span></h3> <p style="text-align: justify; ">முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.</p> <h3 style="text-align: justify; ">பெறும் முறைகள்</h3> <ul> <li style="text-align: justify; "><span>''மாணவர்களுக்கு தேவையான முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணையவழியாக (www.textbookcorp.in) விற்று வருகிறது. மேலும், இணையவழியாக பணம் செலுத்த இயலாததால், பாடநூல்களை பெற முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தாலுகா அளவிலான அரசு பொது இ-சேவை மையம் மூலமாகவும் பணம் செலுத்தி பாடநூல்கள் பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.</span></li> </ul> <p style="text-align: center; "><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/copy_of_Untitled.jpg" /></p> <ul> <li style="text-align: justify; "><span>பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவற்றை அரசு பொது இ-சேவை மையத்திலேயே, பாடநூல் நிறுவன இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தை அணுகி தேவையான பாடநூல்களை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி, பதிவு செய்யலாம். அதற்கான ரசீதும் வழங்கப்படும்.</span></li> </ul> <p style="text-align: justify; ">இதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. அவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, பாடநூல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்'</p> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் : </strong>தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்</p> </div>