<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">தட்கல் முன்பதிவு</h3> <p style="text-align: justify; ">இந்தப் புதிய திட்டத்தின்படி ஏசி வகுப்புக்கு காலை 10 மணியிலிருந்தும் மற்ற வகுப்புக்கு காலை 11 மணிக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு கவுண்டர்களில் கூட்டம் குறைவாக இருக்கும் தவிர <a class="external-link" href="http://irctc.co.in">irctc.co.in</a> என்ற இணையதளத்திலும் எளிதில் பதிவு செய்து கொள்ளலாம்.</p> <p style="text-align: justify; "><span>தற்போது இதனைப் பாகுபடுத்தி பயணிகளின் வசதிக்காக ஒழுங்கமைக்கப்பட்டது. உதாரணமாக க்யூவில் ஆறாம் இடத்தில் ஏஸி டிக்கெட் வாங்க வந்தவர், அவருக்கு முன்னால் நிற்கும் ஐந்து சாதாரண வகுப்பு டிக்கெட் வாங்க நிற்பவர்களைத் தாண்டி போகவேண்டும். வேறு வழியில்லாமல் அங்கேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.</span></p> <h3><span>விதிமுறைகள்</span></h3> <ol> <li style="text-align: justify; "><span>ஏஸி வகுப்பு வேண்டுவோர் 10 மணிக்கு கவுண்டருக்கு வந்தால் போதும், 11 மணியிலிருந்து மற்றவர்களின் முன்பதிவு நடைபெறும். இதை நடைமுறைப்படுத்தினால் தட்கல் முன்பதிவு எளிதாகி டிக்கெட் கிடைப்பதும் உறுதியாகும்.</span></li> <li style="text-align: justify; "><span>கூட்ட நெரிசல் குறையும்.</span></li> <li style="text-align: justify; "><span>பத்து மணிக்கு ஏஸி டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து பதினொரு மணிக்கு சாதாரண டிக்கெட் கிடைக்குமா என்று முயற்சி செய்யலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>கவுண்டரிலேயே நிறைய பேருக்கு டிக்கெட் உறுதியாகக் கிடைக்கும்.</span></li> <li style="text-align: justify; "><span>இப்படி நேரில் குறித்த நேரத்தில் வந்து முன்பதிவு செய்கையில், வலைத்தளத்திலும் சர்வர் பிரச்னைகள் குறைந்து முன்பதிவு செய்வது எளிதாகும்.</span></li> </ol> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் : </strong>தென்னிந்திய ரயில்வே</p> </div>