<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify; ">நிலத்தின் பட்டா மாறுதல் பணிகள் வருவாய் மற்றும் நில அளவைத் துறையினர்களால் தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify; ">கடந்த 2003ம் ஆண்டு முதல் கைகளால் எழுதப்பட்ட பட்டா நில பதிவேடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, <span style="text-align: justify; ">வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றம் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தமிழகத்தில் முதல் கட்டமாக, <span style="text-align: justify; ">கடலுார், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் விருத்தாசலம் ஆகிய <span style="text-align: justify; ">நான்கு வட்டங்களில்</span> </span>செயல்படுத்தப்பட்டது.</span></p> <ul> <li style="text-align: justify; "><span>இந்த வசதியினைக் கொண்டு பொது மக்களும் பொது சேவை மையங்களான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்கள் போன்றவற்றில் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அளிக்கலாம். விண்ணப்பம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு சேவை மையத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும். இந்த மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும்.</span></li> <li style="text-align: justify; "><span>அவ்வாறு விண்ணப்பித்தோரின் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்களை அதே மையத்தில் கொடுத்து ஸ்கேன் செய்து மீண்டும் ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். </span></li> <li style="text-align: justify; "><span>பட்டா மாற்றப்பட்ட பின்னர் அதன் உத்தரவினை பொது சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டாவில் 'க்யூ ஆர் கோடு' உள்ளதால் தாசில்தார் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம் பொது மக்கள் எளிதில் ஆவணங்களை பெற முடிவதோடு கால விரயமும் தவிர்க்கப்படுகிறது. </span></li> </ul> <p style="text-align: justify; "><strong> ஆதாரம் : </strong>முற்றம் நாளிதழ்</p> </div>