இஎஸ்ஐ-யில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய எளிய திட்டம் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டம் 2025 என்பது இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். 2025 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இதன்படி உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலைகள்/ நிறுவனங்கள், அதில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த விவரங்களை இஎஸ்ஐசி இணையதளம், ஷ்ரம் சுவிதா மற்றும் எம்சிஏ இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். உரிமையாளர் அறிவித்த தேதியிலிருந்து பதிவு செல்லுபடியாகும். பதிவுக்கு முந்தைய காலங்களுக்கு எந்த பங்களிப்பும் அல்லது பயனும் பொருந்தாது. முன் பதிவு காலத்திற்கு எந்த ஆய்வும் அல்லது கடந்த கால பதிவுகளுக்கான கோரிக்கையும் செய்யப்படாது. இந்தத் திட்டம் பிந்தைய அபராதங்கள் குறித்த அச்சத்தை நீக்கி பதிவு செயல்முறையை எளிதாக்குவதன் மூலம் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிக்கிறது. எனவே, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் மாவட்டங்களின் தொழில் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலைகளை / நிறுவனங்களை பதிவு செய்ய இந்தத் திட்டத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு அருகிலுள்ள இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் -புதுச்சேரி (0413 2227339) இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் -வில்லியனூர் (0413 2660144) இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் -காந்தி நகர் (0413 2276774) இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் -திருபுவனை (0413 2641442) இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் - முதலியார்பேட்டை (0413 2357867) இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் - காரைக்கால் (04368 291870) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். அல்லது புதுச்சேரி இ.எஸ்.ஐ மண்டல அலுவகத்தை (0413- 2357642) தொடர்புகொள்ளலாம் அல்லது www.esic.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்