மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை “பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை” வழங்கி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய தேசிய சிறுபான்மையினரைச் சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை தன்னார்வ, அரசியல் சாராத, இலாப நோக்கற்ற, சமூக சேவை அமைப்பாகும், இந்த அறக்கட்டளை கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினரிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ளது. பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கான "பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை" திட்டம் முன்னர் "மவுலானா ஆசாத் தேசிய உதவித்தொகை" திட்டம் என்று அழைக்கப்பட்டது. இது அறக்கட்டளையால் 2003-04 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் உதவித்தொகை திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாகும். உதவித்தொகை திட்டத்தின் குறிக்கோள் நிதி உதவி இல்லாமல் கல்வியைத் தொடர முடியாத தேசிய சிறுபான்மையினரைச் சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளை அங்கீகரித்தல், ஊக்குவித்தல் மற்றும் உதவுதல். உதவித்தொகையின் நோக்கம் பள்ளி/கல்லூரி கட்டணம் செலுத்துதல், பாடத்திட்ட புத்தகங்களை வாங்குவது, பாடநெறிக்கு தேவையான எழுதுபொருள்/உபகரணங்கள் வாங்குவது மற்றும் போர்டிங்/லாட்ஜிங் கட்டணங்கள் செலுத்துதல் ஆகியவற்றுக்கான உதவித்தொகை வழங்கப்படும். தகுதி நிலை அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவிகள், அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் மட்டுமே தகுதியுடையவர்கள். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முந்தைய வகுப்பில் மொத்தம் குறைந்தது 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஆதாரங்களிலிருந்தும் மாணவிகளின் பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாநில அரசு/யூனியன் பிரதேசம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரசபையால் வழங்கப்பட வேண்டிய பெற்றோர்/பாதுகாவலரின் வருமான சான்றிதழை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை இணையதளத்தை பார்க்கவும். ஆதாரம்: மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை