<p style="text-align: justify;">ஏற்காடு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.</p> <p style="text-align: justify;">ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு பல விஷயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின் உதகமண்டலம்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏற்காடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.</p> <p style="text-align: justify;">ஏற்காடு என்ற பெயர் பின் வரும் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து வந்தது. அதாவது ‘ஏரி’ மற்றும் ‘காடு’ என்ற இரண்டு சொற்கள் ஏற்காடு என்று பெயர் வர காரணமாயிற்று.</p> <h3 style="text-align: justify;">சிறப்பம்சங்கள்</h3> <p style="text-align: justify;">ஏற்காடு அதன் பெரும்பான்மை சாகுபடியான காபி, ஆரஞ்சு, பலாப்பழம், கொய்யா, ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு தோட்டங்களுக்கு பேர்போனது. காபி ஒரு முக்கிய உற்பத்தியாகும். இது ஆபிரிக்காவில் இருந்து 1820 இல் ஸ்காட்டிஷ் கலெக்டர் திரு எம்.டி. காக்பர்ன் மூலம் ஏற்காடு வந்தது. மேலும் இங்கு சுரண்டப்படாத மரங்களும் வனவிலங்குகளும் உடைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம், தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகள் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன. ஏற்காடு ஒரு மலை வாசஸ்தலம் என்றாலும் இங்கு தீவிர குளிர் நிலையானது காணப்படுவதில்லை. எனவே சுற்றுலா பயணிகள் சுமப்பதற்கு கடினமான தங்கள் குளிர் கால உடமைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இலகுவான உடைமைகளை கொண்டு வந்தால் போதுமானது. இடங்களை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டை சுற்றிலும் மலையேற்றத்திலும் ஈடுபடலாம். மே மாதத்தில் இங்கு வர நேர்ந்தால் இங்கு நடை பெறும் கோடை திருவிழாவை தவற விட்டு விட கூடாது. இத்திருவிழாவில் நடைபெறும் படகு போட்டி, மலர் கண்காட்சி மற்றும் நாய்களின் கண்காட்சி முதலியன கண்களுக்கு விருந்தாக இருக்கும். வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஏற்காட்டில் ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. ஏற்காட்டின் வரலாறு பரவலாக தெரியவில்லை என்றாலும், தெலுங்கு மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஏற்காட்டில் முதல் குடியமர்வு ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகான கவர்னராக இருந்த சர் தாமஸ் முரோ என்பவரால் 1842ம் ஆண்டு ஏற்காடு கண்டறியப்பட்டது.</p> <p style="text-align: justify;">ஏற்காடு ஷாப்பிங் விதிவிலக்கிற்கான இலக்கு அல்ல என்றாலும், அது ஒரு சில விஷயங்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது. சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான சில இயற்கை எண்ணெய்கள், வாசனை திரவியங்கள், தோல் பராமரிப்பு பொருட்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு புதிதாக பேக் செய்யபட்ட மிளகு, ஏலக்காய் மற்றும் காபி போன்றவை இங்கு கிடைக்கின்றன.</p> <h3>தங்கும் விடுதிகள்</h3> <p style="text-align: justify;">தங்கும் விடுதியை கண்டுபிடிப்பது ஏற்காட்டில் சுலபம். விருப்பங்களை பொருத்து நிறைய தேர்வு செய்ய முடியும். பட்ஜெட் ஹோட்டல்கள், ஆடம்பர தங்கும் விடுதிகள், ஏன் வீடு போன்ற தங்கும் இடங்கள் கூட உள்ளன.</p> <h3 style="text-align: justify;">ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்</h3> <p style="text-align: justify;">பரந்த அமைதியான பள்ளதாக்குகளும் அழகிய இயற்கை காட்சிகளையும் உடைய ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல உள்ளன. கோயில்கள், குகைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது பள்ளதாக்குகளின் ஒய்யாரமான அழகு என்று மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்பதாக ஏற்காடானது அமைந்துள்ளது. 4700 அடி கடல் மட்டத்திற்கு மேலே அமைந்துள்ள ஏற்காடு ஒரு பிரபலமான கண்கவர் இடம். பல்வேறு இறையியல் கல்லூரிகளும், கன்னியாஸ்திரி மடங்களும் ஏற்காட்டில் அமைந்துள்ளன; மாலை சுற்றுலாவிற்கு ஏற்காடு நகரம் நன்றாக இருக்கும். ஏற்காட்டில் உள்ள மிகவும் பிரபலமான அழகாக கட்டப்பட்டு நன்றாக பராமரிக்கப்படும் இரண்டு இடங்கள் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் மற்றும் மோண்ட்ஃபோர்ட் பள்ளி ஆகியன. மற்றொரு பிரபலமான கண்கவர் இடம் பெண் இருக்கை, ஆண் இருக்கை மற்றும் குழந்தைகள் இருக்கை. இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும். அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளையும், மேட்டூர் அணை மற்றும் சேலத்தையும் நோக்கியவாறு அமைந்துள்ளன. கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மனி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்து கொண்டிருந்ததால் இந்த பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.</p> <h3>பயணிகளை கவரும் இடங்கள்</h3> <p style="text-align: justify;">ஏற்காட்டில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை கவரும் சில இடங்கள்</p> <ul style="text-align: justify;"> <li>பெரிய ஏரி,</li> <li>கரடி குகை,</li> <li>லேடி சீட்,</li> <li>ஆண்கள் இருக்கை மற்றும் குழந்தைகள் இருக்கை,</li> <li>ஆர்தர் இருக்கை,</li> <li>அண்ணா பூங்கா,</li> <li>தாவரவியல் கார்டன்,</li> <li>மாண்ட்ஃபோர்ட் பள்ளி,</li> <li>சேர்வராயன் கோயில்,</li> <li>ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில்</li> <li>திப்பேரேரி காட்சி முனை</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்</p>