மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் வாய்பாட்டைச் சொல்லுதல். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை, சொல்வதை எழுதச் சொல்லுதல். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்கள் சொல்வதை எழுதச்சொல்லுதல், வாக்கியமாக அமைத்தல். 9 ஆம் வகுப்பிற்குத் தமிழ், ஆங்கிலத்தில் 2 நிமிடம் பொது அறிவு சம்பந்தமாகப் (பிழையின்றி) பேசுதல் (Group Discussion), பேச்சு மற்றும் குழு உரையாடல். பள்ளி இறுதி மணி ஒலித்த பின்பு நாட்டுப்பண் பாடப்பட வேண்டும். வார இறுதி நாள் செயல்பாடுகள் ஒவ்வொரு வாரமும் வார இறுதி வேலை நாளான வெள்ளிக் கிழமையன்று இறுதி ஒரு மணி நேரம் கீழ்க்கண்ட செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் பன்முகத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழிகள் கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகளை ஒவ்வொரு மாணவரும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆதாரம் : பள்ளிக்கல்வித்துறை, மாணவர் கையேடு