அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை [Anusandhan National Research Foundation (ANRF)], நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நடைமுறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஆராய்ச்சி நிதியைத் தொடர்வது, ஆழமான ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவது மற்றும் பொது-தனியார் கூட்டுச் செயல்பாடு ஆகியவை அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) மூன்று முக்கிய அம்சங்கள். இந்த அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவியல் ஆராய்ச்சியில் அரசு, கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் அடிப்படை அறிவியலில் கவனம் செலுத்துகின்றன. அரசு நிதியுடன் தனியார் துறை பங்களிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஏ.என்.ஆர்.எஃப் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் அறிவியல் சூழல் அமைப்பு தனித்து நிற்கிறது. ஐ.ஐ.டி (IITs) மற்றும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் (IISERs) போன்ற முன்னணி நிறுவனங்கள் உயர் தர ஆராய்ச்சித் தன்மை, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன. மாநில அளவிலான பல்கலைக்கழகங்கள் தங்கள் இளம் ஆராய்ச்சியாளர்களின் திறனை அதிக அளவில் கொண்டிருந்தாலும் அதை ஊக்குவித்து மேம்படுத்த ANRF உதவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்