<div id="MiddleColumn_internal"> <h3>டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்</h3> <ol> <li style="text-align: justify;">இந்தியாவில் லோடி பேரரசு முடிவுக்கு வர காரணமான போர் - பானிபட் போர்</li> <li style="text-align: justify;">பானிபட் போர் நடந்த ஆண்டு - 1526</li> <li style="text-align: justify;">பானிபட் போருக்குப்பின் தோன்றிய அரசு - முகலாயப் பேரரசு</li> <li style="text-align: justify;">பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் - இப்ராஹிம் லோடி</li> <li style="text-align: justify;">நிலங்களைத் தானமாக வழங்கும் முறைக்குப் பெயர் - ஜாகிர் முறை</li> <li style="text-align: justify;">முகமதியர் அல்லாதவர் மேல் விதிக்கப்பட்ட வரி - ஜிஸ்யா வரி</li> <li style="text-align: justify;">சுல்தானிய ஆட்சி முறை என்பது - இந்திய, பாரசீக, துருக்கிய ஆட்சிமுறைகளின் கலவை.</li> <li style="text-align: justify;">சுல்தானுக்கு ஆலோசனை வழங்க எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் - 4 முதல் 6</li> <li style="text-align: justify;">இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலமாக்கள்</li> <li style="text-align: justify;">சுல்தான்களின் நாடு எவ்வாறு பரிக்கப்பட்டது - மாநிலம்</li> <li style="text-align: justify;">மாநிலத்தின் பொறுப்பாளர் யார் - ராணுவ ஆளுநர்</li> <li style="text-align: justify;">மாநில அளவில் நீதி வழங்கும் பணியைச் செய்தவர் - காஸி</li> <li style="text-align: justify;">சுல்தான்கள் அரசின் முதன்மையான வரி - நில வரி</li> <li style="text-align: justify;">முஸ்லீம்கள் மீது விதிக்கப்பட்ட நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - உஷர்</li> <li style="text-align: justify;">இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட நிலவரி - கிராஜ்</li> <li style="text-align: justify;">சமயவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - ஜிஸ்யா</li> <li style="text-align: justify;">நீதிவழங்குவதில் அரசருக்கு ஆலோசனை கூறியவர்கள் - காஸிகள்</li> <li style="text-align: justify;">பல கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு வழங்கப்பட்டது - பர்கானா</li> <li style="text-align: justify;">சுல்தானின் ஆட்சிக் காலம் - 1206 - 1526</li> <li style="text-align: justify;">தில்லி சுல்தானியத்தை ஆண்ட வம்சங்கள் எத்தனை - 5</li> <li style="text-align: justify;">சுல்தானியர்கள் காலத்தில் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன - 4</li> <li style="text-align: justify;">தில்லி சுல்தான்களின் அரசுக்கு எதிராக உருவான இயக்கம் - பக்தி இயக்கம்</li> <li style="text-align: justify;">பக்தி இயக்கத்தினால் வளர்ந்தது - சூபிசம்</li> <li style="text-align: justify;">ராமனுஜர் காலம் - கி.பி. 12-ஆம் நூற்றாண்டு</li> <li style="text-align: justify;">ராமானுஜரின் கொள்கை - விஜிஸ்டாத்துவைதம்</li> <li style="text-align: justify;">முக்தியை அடையும் வழியாக கூறியது - பக்தி</li> <li style="text-align: justify;">ராமனுஜரின் வழித்தோன்றல் - ராமானந்தர்</li> <li style="text-align: justify;">ராமானந்தரின் சீடர் - கபீர் தாசர்</li> <li style="text-align: justify;">இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற கிருஷ்ண பக்தர் - வல்லபாச்சாரியர்</li> <li style="text-align: justify;">பக்தி இயக்கத்தின் தலை சிறந்த வித்தகர் - சைதன்யர்</li> <li style="text-align: justify;">ராமனும் ரஹீமும் ஒருவரே என்றவர் - கபீர்</li> <li style="text-align: justify;">சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் - குருநானக்</li> <li style="text-align: justify;">சீக்கியர்களின் புனித நூல் - ஆதிகிரந்தம்</li> <li style="text-align: justify;">பக்தி நெறி பரப்பிய நாமதேவர், ஏகநாதர், துக்காராம் ஆகியோர் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மஹாராஷ்டிரா</li> <li style="text-align: justify;">ராஜஸ்தானில் ஆடம்பர வாழ்வைத் துறந்து கிருஷ்ணபக்தையானவர் - மீராபாய்</li> <li style="text-align: justify;">சூபிகள் யார் - பாரசீகத்திலிருந்து வந்த இஸ்லாமியத் துறவிகள்.</li> <li style="text-align: justify;">சூபிகளின் பக்திப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன - கவாலிகள்</li> <li style="text-align: justify;">ஆஜ்மீரில் வாழ்ந்த புகழ்பெற்ற சூபி துறவி - நிசாமுதீன் அவுலியா</li> <li style="text-align: justify;">சுல்தான்களின் காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்புகளின் ஒன்று - பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ்</li> <li style="text-align: justify;">சுல்தான்களின் காலத்தில் தோன்றிய புதிய மொழி - உருது</li> <li style="text-align: justify;">சுலல்தான்களின் காலத்தில் தோன்றிய இசை - இந்துஸ்தானி இசை</li> <li style="text-align: justify;">இந்துஸ்தானி இசையைப் பரப்பியவர்கள் - சூபிகள்</li> <li style="text-align: justify;">குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - சுல்தான்கள்</li> <li style="text-align: justify;">கிதார் என்னும் இசைக் கருவி யார் காலத்தில் பழக்கத்திற்கு வந்தது - சுல்தான்கள்</li> <li style="text-align: justify;">தில்லியில் உள்ள அழகு வாய்ந்த கல்லறையில் யாருடையவை - லோடி வம்சத்தினர்</li> <li style="text-align: justify;">பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா</li> <li style="text-align: justify;">பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு - 1347</li> <li style="text-align: justify;">பாமினிப்பேரரசின் தலைநகர் - தக்காணத்திலுள்ள குல்பர்கா</li> <li style="text-align: justify;">பாமினிப் பேரரசு உட்பகுப்பு முறைக்குப் பெயர் – ஜாஹிர்</li> </ol> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் :</strong> தினமணி கல்வி வழிகாட்டி</p> </div>