<div id="MiddleColumn_internal"> <h3>டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்</h3> <ol> <li style="text-align: justify;">இந்தியாவில் முதல் மிதக்கும் தபால் நிலையம் 1976 ஜூன் 29ல் எங்கு துவங்கப்பட்டது - கேரளத்தில் "குட்ட நாடு" என்ற இடத்தில்.</li> <li style="text-align: justify;">இந்தியாவின் முதல் சைக்கிள் தபால் நிலையம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974-ல் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள "ஸ்ரீகாவுன்" என்ற கிராமத்தில்</li> <li style="text-align: justify;">"தென்னிந்தியா" என்ற பகுதியின் வட எல்லை - விந்திய சாத்பூராமலை</li> <li style="text-align: justify;">தென்னிந்தியாவின் தென் எல்லை - கன்னியாகுமாரி</li> <li style="text-align: justify;">மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் தென்னிந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் - சாதவாகனர்</li> <li style="text-align: justify;">சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பு - கிருஷ்ணா - கோதாவரி நதிக்கு இடைப்பட்ட பகுதி</li> <li style="text-align: justify;">சாதவாகன மன்றத்தில் புகழ்பெற்ற இருவர் - சிமுகர், கவுதமிபுத்திரசதகர்ணி</li> <li style="text-align: justify;">சாதவாகனர்கள் காலத்தில் ஆதரிக்கப்பட்டவர்கள் - அந்தணர்கள்</li> <li style="text-align: justify;">சாதவாகனர்கள் காலத்தில் புத்தியிர் பெற்றது - வேதபாட சாலைகள்</li> <li style="text-align: justify;">சாதவாகனர்கள் பரிசி வழங்கியது - வேதம் கற்றவர்களுக்கு</li> <li style="text-align: justify;">சாதவாகனர்கள் ஆட்சி செய்த பகுதி தற்போது எங்குள்ளது - ஆந்திரம்</li> <li style="text-align: justify;">பண்டை தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர்</li> <li style="text-align: justify;">பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் - மூன்று</li> <li style="text-align: justify;">சேர நாடு - தற்கால கேரளம்</li> <li style="text-align: justify;">சேரர்களின் தலைநகரம் - வஞ்சி</li> <li style="text-align: justify;">சேர மன்னர்களின் தலை சிறந்தவன் - சேர செங்குட்டுவன்</li> <li style="text-align: justify;">சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்தவர் - இரண்டாம் புலிகேசி</li> <li style="text-align: justify;">சேரன் செங்குட்டுவன் வென்ற வடநாட்டு மன்னர்கள் - கனகர், விசயர்</li> <li style="text-align: justify;">இமயத்தில் கல் எடுத்து கண்ணகிக்கும் சிலை எடுத்தவன் - சேரன் செங்குட்டுவன்</li> <li style="text-align: justify;">சேரர்களின் கொடி - வில் கொடி</li> <li style="text-align: justify;">சோழர்களின் பகுதி - திருச்சிக்கு வடபகுதி</li> <li style="text-align: justify;">சோழர்களின் துறைமுகம் - காவிரி பூம்பட்டினம்</li> <li style="text-align: justify;">பண்டைகால சோழர்கலில் தலைசிறந்தவர் - கரிகாலன்</li> <li style="text-align: justify;">பண்டைகால சோழர்களின் தலைநகர் - உறையூர்</li> <li style="text-align: justify;">பாண்டிய நாட்டின் பகுதிகளாகச் சொல்வது - திருச்சிக்குத் தெற்கில் உள்ள பகுதி</li> <li style="text-align: justify;">பாண்டியர்களின் முத்துக்களுக்குச் செல்வாக்கு - ரோமாபுரி</li> <li style="text-align: justify;">பாண்டிய மன்னர்களில் தலைசிறந்தவர் - நெடுஞ்செழியன்</li> <li style="text-align: justify;">நிலப்பரப்பு பிரிவுகள் - ஐந்து</li> <li style="text-align: justify;">பண்டைத் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் - ரோமாபுரி, கிரேக்கம்</li> <li style="text-align: justify;">பல்லவர்களின் தலைநகரம் - காஞ்சீபுரம்</li> <li style="text-align: justify;">பல்லவர்களின் முதலாமவன் - மகேந்திரவர்மன்</li> <li style="text-align: justify;">பல்லவர்களின் ஆட்சி பரப்பு - கிருஷ்ணா நதி முதல் பாலாறு வரை</li> <li style="text-align: justify;">பல்லவர்கள் கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது - தொண்டை மண்டலம்</li> <li style="text-align: justify;">பாண்டியனின் கொடி - மீன் கொடி</li> <li style="text-align: justify;">பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை</li> <li style="text-align: justify;">பாண்டியர்களின் துறைமுகப் பட்டினம் - கொற்கை</li> <li style="text-align: justify;">பாண்டிய நெடுஞ்செழியன் போர் வெற்றியுடன் தொடர்புடையது - தலையாலங்கானம்</li> <li style="text-align: justify;">மகேந்திர வர்மன் தமழுவியிருந்த சமயம் - சமணம்</li> <li style="text-align: justify;">மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்குத் திரும்பினார் - அப்பர் சுவாமிகள்</li> <li style="text-align: justify;">மகேந்திர வர்மனின் சிறப்புப் பெயர் - சித்திரக்காலப் புலி</li> <li style="text-align: justify;">மகேந்திர வாடி, வல்லம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவர் - மகேந்திர வர்மன்</li> <li style="text-align: justify;">சித்தன்னவாசல் ஒவியம், குடுமியான் மலை கல்வெட்டு யார் காலத்தவை - மகேந்திரவர்மன்</li> <li style="text-align: justify;">கலைகளில் ஆர்வம் கொண்டவர் - மகேந்திர வர்மன்</li> <li style="text-align: justify;">ஓவியக்கலை சிற்பக்கலையில் கை தேர்ந்தவன் - மகேந்திரவர்மன்</li> <li style="text-align: justify;">வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்மனுக்குக் கிடைத்த பட்டப்பெயர் - வாதாபி கொண்டான்</li> <li style="text-align: justify;">அப்பர் சுவாமியை வாட்டிய நோய் - சூலை நோய்</li> <li style="text-align: justify;">அப்பர் சுவாமிகள் சமணத்திலிருந்து சைவத்திற்கு வரக்காரணமாக இருந்தவர் - தமக்கை திலகவதியார்</li> <li style="text-align: justify;">சேரன் செங்குட்டுவன் இமயவரம்பன் என அழைக்கப்பட்ட காரணம் - இமயத்தில் கல் எடுத்து கனக விசயர் தலையில் வைத்துக்கொண்டு வந்தவன்</li> <li style="text-align: justify;">தமிழர்கள் இழுக்காக கருதியது - போரில் புற முதுகிட்டு இறப்பது</li> <li style="text-align: justify;">இரண்டாம் புலிகேசியின் நாடு - மேலைச் சாளுக்கிய நாடு</li> <li style="text-align: justify;">முதலாம் நரசிம்ம வர்மனை எதிர்த்து நின்றவர் - இரண்டாம் புலிகேசி</li> <li style="text-align: justify;">சோழர்களின் காலம் எதற்கு புகழ் பெற்றது - கிராம சுய ஆட்சி</li> <li style="text-align: justify;">மணிமேகலை உணர்தச்தும் சமயம் - பவுத்தம்</li> <li style="text-align: justify;">ஜாதக கதைகள் எந்தவகைப் பிரிவில் அடங்குகின்றன - சமயச்சார்பு இலக்கியம்</li> </ol> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தினமணி கல்வி வழிகாட்டி</p> </div>