எத்தனால் கலப்பு திட்டம் புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கு ஊதியம் வழங்கவும், கச்சா இறக்குமதிக்கு மானியம் வழங்கவும் மற்றும் அந்நியச் செலாவணி சேமிப்பை அடையவும் பெட்ரோலில் எத்தனால் கலப்படத்தை மேற்கொள்ள இந்திய அரசு 2003 இல் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை - 2018-க்கான திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை இவ்வருடம் மே மாதம் போல (18 மே 2022), ஒப்புதல் அளித்துள்ளது. உயிரி எரிபொருள் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக, உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு (NBCC) கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள், நிலைக்குழுவின் பரிந்துரை மற்றும் 01.04.2023 முதல் நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோலை இருபது சதவீதம் வரை எத்தனால் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது, இவ்வாறு உயிரி எரிபொருள் மீதான தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய திருத்தங்கள் பின்வருமாறு: உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கு அதிகமான மூலப்பொருட்களை அனுமதித்தல், பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு இலக்கை, 2030 இலிருந்து எத்தனால் வழங்கல் ஆண்டு (ESY) 2025-26க்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZ)/ ஏற்றுமதி சார்ந்த அலகுகளில் (EoUs) அமைந்துள்ள அலகுகள் மூலம், நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியை ஊக்குவித்தல், NBCC க்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உயிரி எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்குதல், மற்றும் தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏற்ப கொள்கையில் உள்ள சில சொற்றொடர்களை நீக்குதல்/திருத்துதல். தற்போதுள்ள உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையானது 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த திருத்தப் பரிந்துரையானது அதிக உயிரி எரிபொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும், அதன்மூலம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க வழிவகுக்கும். உயிரி எரிபொருள் உற்பத்திக்கு இன்னும் பல மூலப்பொருட்கள் அனுமதிக்கப்படுவதால், இது ஆத்மநிர்பர் பாரதத்தை ஊக்குவிப்பதோடு, 2047க்குள் இந்தியா 'ஆற்றல் சுதந்திரமாக' மாறும் என்ற பிரதமரின் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருளின் மீதான இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல், அந்நியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், இந்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMCs) ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் 10% கலப்பு இலக்கு நவம்பர், 2022 என்ற காலக்கெடுவை விட முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது, நாடு முழுவதும், பொதுத்துறை OMCகள் சராசரியாக பெட்ரோலில் 10% எத்தனால் கலவையை எட்டியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி தாக்கத்தை ஏற்படுத்தியது, பசுமை இல்ல வாயு (GreenHouse Gas) உமிழ்வை 27 லட்சம் மெட்ரிக் டன் குறைத்துள்ளது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து முன்முயற்சிகளுடன், எத்தனால் கலப்பு திட்டம் 2025-26 க்குள் 20% கலப்பு இலக்கை அடையும் பாதையில் உள்ளது. ஆதாரம்: Ethanol Blending in India