<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">குறைந்தளவு கழிவுகளை உருவாக்குதல்</h3> <ul style="text-align: justify;"> <li>மீள உபயோகிக்கக்கூடிய பொருட்களை வாங்குங்கள். பிளாஸ்டிக் கொள்கலன்களுக்கு பதிலாக, கண்ணாடிக் கொள்கலன்களை உபயோகியுங்கள். உ-ம்: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை உபயோகியுங்கள்.</li> <li>எப்போதும் புதிய பொருட்களை வாங்காமல், பாவிக்கக்கூடிய பொருட்களை திருத்தி மீள்பாவனை செய்யுங்கள்.</li> <li>ஒரு அடுக்கு பொதியிடல் போதுமாக இருக்கையில் பல அடுக்கு பொதி செய்யப்பட்ட பொருட்களை வாங்காதீர்கள். நாம் வீசியெறிபவற்றில் 33 வீதம் பொதியிடல் கழிவுகளே ஆகும்.</li> <li>அடிக்கடி உபயோகிக்கும் சாதனங்களுக்கு மீள்பாவனை செய்யக்கூடிய ரீசார்ஜிங் பற்றறிகளை பயன்படுத்துங்கள்.</li> <li>காகிதத்தின் இருபக்கத்திலும் கொப்பி அல்லது பிரின்டிங் செய்யுங்கள்.</li> <li>கடித உறைகள், ஃபோல்டர்கள், பேப்பர் க்ளிப்புகளை மீளவும் உபயோகியுங்கள்.</li> <li>காகிதம் ஊடாக தொடர்பாடுதலை தவிர்த்து, மின்னஞ்சலை உபயோகியுங்கள்.</li> <li>மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தை பயன்படுத்துங்கள்.</li> <li>புதிய ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து, பழைய ஆடைகளை சரிசெய்து உபயோகியுங்கள்.</li> <li>உபயோகித்த தளபாடங்களை வாங்குங்கள். புதிய தளபாடத்தை விட குறைந்த விலையிலேயே இவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது இன்னுமொரு அனுகூலமாகும்.</li> </ul> <p style="text-align: justify;">இயற்கை உரம் – மக்கிப்போகும் முறையில் இயற்கை உரத்தினை உருவாக்குவது, உங்கள் கழிவுகளை பாதுகாப்பாக அகற்வுவதற்கு உதவுவதுடன், நீங்கள் இருக்கும் நிலத்தையும் பண்படுத்த உதவும்.</p> <p style="text-align: justify;">மரங்களை நடுங்கள். அவற்றை வெட்டி அழிக்க வேண்டாம் - மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. இயற்கைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக மரங்களே விளங்குகின்றன. மரங்களை பாதுகாப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நிலத்தை மாத்திரமல்லாமல், நீர் மற்றும் காற்று மாசடைதலையும் தவிர்க்கின்றீர்கள். உயரமாக வளர்ந்து நிழல் கொடுக்கக்கூடிய மரங்களை வளருங்கள்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: சென்னை நலத்தகவல்கள் இதழ்</p> </div>