<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">நகர்புற திடக்கழிவுகளின் உற்பத்தி மற்றும் சேகரிப்பு</h3> <p style="text-align: justify;">இந்தியாவில் 291 ‘முதல் வகுப்பு நகரங்கள்’ மற்றும் 345 ‘நடுத்தர வகுப்பு நகரங்களில்’ அதிகபட்சமாக 52,000 டன் திடக்கழிவுகள் நாள் ஒன்றிற்கு வெளியேற்றப்படுகிறது. இதில் தனிநபர் பங்கு ஒரு நாளைக்கு 346 கிராம் ஆகும்.</p> <p style="text-align: justify;">ஒரு நாளில் 2,832 டன் திடக்கழிவுகள் மட்டுமே பாதிக்காத வகையில் சீர் செய்யப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இந்தியாவில் ஒருநாள் ஒன்றிற்கு சராசரியாக ஒரு தனி நபரால் சிறிய நகரங்களில் 100 கிராம் முதல் பெரிய நகரங்களில் 500 கிராம் வரை திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதில் 13% முதல் 20 % வரை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள். இந்தியாவில், பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, ரப்பர், இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகம் போன்றவற்றை பிரித்தெடுத்து அவற்றை குறைந்த விலை பொருட்களாக மாற்றி நடுத்தர சமுதாயத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் 70% நகர்புற கழிவுகளை அப்புறப்படுத்தமுடியாமல் அவை திறந்தவெளியில், அழுகியும், ஆடு, மாடுகளால் உண்ணப்பட்டும், சாக்கடையில் சென்று அடைத்து கொள்வதும், சிலநேரங்களில் எரியூட்டப்படுவதும் நிகழ்கிறது.</p> <p style="text-align: justify;">நாள் ஒன்றுக்கு தனிநபர் 150 லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். 1947ல் இந்தியாவின் மொத்த கழிவுநீர் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 5 பில்லியன் லிட்டர் ஆக இருந்தது. 1997ல் நாள் ஒன்றுக்கு 30 பில்லியன் லிட்டராக உயர்ந்தது. இதில் 10% கழிவுநீரே சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">குப்பைகளை குறைத்தல் - இதுவே நிலையான முடிவு</h3> <p style="text-align: justify;">குப்பைகளை ஏதாவது ஒரு வழியில் குறைப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.</p> <p style="text-align: justify;">பேப்பர், பாட்டில், உலோகம் மற்றும் சில பிளாஸ்டிக் வகைகளை, மறுசுழற்சி செய்வதுடன், சிலவற்றை மறுஉபயோகமும் செய்யலாம்</p> <p style="text-align: justify;">பொருட்களை வாங்கும் பொழுது அவை மறுஉபயோகம் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாக பார்த்து வாங்கவும்.</p> <p style="text-align: justify;">எஞ்சிய உணவு மற்றும் சமையல் அறை கழிவுகளை உரமாக்குவதன் மூலம் பயிர் அறுவடையின்போது பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் திரும்ப பூமிக்கே சேர்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon" title=" புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி வலைத்தளம்" href="http://cpreec.org/" target="_blank" rel="noopener">சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்</a></p> </div>