<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">பேரழிவுகளின் நிலைகள்</h3> <p style="text-align: justify;">இயற்கைப் பேரழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,</p> <h4 style="text-align: justify;">முதல் நிலை விளைவுகள்</h4> <ul style="text-align: justify;"> <li>உயிர் பலிகள்</li> <li>பெருமளவில் மனிதன் மற்றும் பிற உயிரினங்களுக்கு காயம் ஏற்படுதல்</li> <li>வீடுகள், பிற கட்டிடங்கள் பாதிப்படைதல்</li> <li>விவசாய நிலங்கள் நாசமாதல்</li> </ul> <h4 style="text-align: justify;">இரண்டாம் நிலை விளைவுகள்</h4> <ul style="text-align: justify;"> <li>உணவு, நீர் மற்றும் உறைவிடப் பற்றாக்குறை.</li> <li>இறந்த மனித மற்றும் விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப் படாத பட்சத்தில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்.</li> <li>குடிநீர் விநியோகம், போக்குவரத்து கழிவு நீர் வாய்க்கால்கள், சுகாதார அமைப்புகள் போன்ற அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் தடைபடுதல்.</li> <li>தொழிற்சாலைகள் மற்றும் வியாபார அமைப்புகளின் பணி தடைபடுதல்.</li> <li>உயிரிழப்பு மற்றும் உறைவிடம் இல்லாதிருத்தல் போன்றவை மனோதத்துவ ரீதியாக பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.</li> <li>நிலம், நீர், காற்று ஆகிய இயற்கை சூழலும் பாதிப்படைகின்றது.</li> </ul> <p style="text-align: justify;">மேற்குறிப்பட்ட இரண்டாம் நிலை விளைவுகளில் சில நீண்ட நாட்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது.</p> <h3 style="text-align: justify;">பாதுகாப்பு வழிமுறைகள்</h3> <p style="text-align: justify;"><strong>1. பூகம்பத்திற்கு</strong><strong> </strong><strong>முன்பு</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">வீடு, பள்ளி மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பான இடங்களை அறிந்து கொள்ளுதல்.</p> <p style="text-align: justify;"><strong>2. பூகம்பத்தின் </strong><strong>பொழுது</strong><strong> </strong></p> <ul style="text-align: justify;"> <li>படுத்துக்கொள்ளுதல், மறைந்து கொள்ளுதல், பிடித்துக்கொள்ளுதல் என்பவை பூகம்பப் பாதுகாப்பின் தாரக மந்திரமாகும்.</li> <li>நிற்காமல், தரையில் படுத்துக் கொள்ளுதல்.</li> <li>திடமான பொருட்கள் (மேஜை, கட்டில்) போன்றவற்றின் கீழ் மறைந்துகொண்டு, அவை நகரும் போது உடன் நகர்தல்.</li> <li>அதிர்வு நிற்கும் வரை, அவற்றை இருக்கமாக பிடித்து கொள்ளுதல்.</li> <li>சுவரரையட்டி அமர்ந்து கொண்டு தலையை கால்களுக்கிடையே வைத்து கைகளால் பாதுகாப்பாக மூடிக் கொள்ளுதல். சன்னல், சுவரில் தொங்கும் பொருட்கள், கண்ணாடி போன்றவற்றின் அருகே செல்வதைத் தவிர்த்தல் நலம்.</li> <li>மரங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் அருகே நிற்க கூடாது.</li> <li>அடுக்குமாடி கட்டிடங்களில் மின்தூக்கிகளை (லிவீயீt) பயன்படுத்த கூடாது.</li> <li>வாகனங்களில் சென்று கொண்டிருந்தால் மரம், மின்கம்பம் இல்லாத இடமாக பார்த்து நிறுத்திவிட்டு, வாகனங்களுக்குள்ளேயே அமர்ந்திருத்தல் நல்லது.</li> </ul> <p style="text-align: justify;"><strong>3. பூகம்பத்திற்கு</strong><strong> </strong><strong>பின்பு</strong><strong> </strong></p> <ul style="text-align: justify;"> <li>சிறிய பூமி அதிர்வுகள், சுனாமி, நிலச்சரிவு போன்ற பூகம்பத்தை தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளுதல்.</li> <li>தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் முக்கிய தகவல்களை அறிதல்.</li> <li>மின்சாரம் இல்லாத சமயங்களில், மெழுகுவர்த்தியை பயன்படுத்துவதைத் தவிர்த்து டார்ச் லைட் பயன்படுத்தலாம். ஏனெனில் பூகம்பத்தின்போது வாயுக்கசிவு ஏற்பட்டிருந்தால் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.</li> <li>பதற்றம் இல்லாமல் அமைதியாக இருத்தல் அவசியம். பயந்து, நடுங்கி ஓடுவதாலேயே அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது.</li> </ul> <h3 style="text-align: justify;">சுனாமி ஏற்படும் முன்</h3> <p style="text-align: justify;">அருகாமையிலுள்ள பகுதிகளில் பூகம்ப நிகழ்வுகளைக் கேள்வியுறும் பொழுதே (தாழ்வான கடரோலப் பகுதிகளில்) சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்.</p> <p style="text-align: justify;">இச்சமயங்களில் தாழ்வான கடலோரப் பகுதிகளைக் காலி செய்து சற்று உயரமான பகுதிகளில் தங்கியிருத்தல் நலம்.</p> <p style="text-align: justify;">சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் தாழ்விடங்களில் தங்கியிருத்தல் முட்டாள்தனமானது.</p> <p style="text-align: justify;">உடனடியாக கரையோரப் பகுதிகளைக் காலி செய்ய இயலாத பட்சத்தில் அருகிலுள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மேல் தளத்திற்குச் சென்று தங்கலாம்.</p> <h3 style="text-align: justify;">இயற்கையின் முன்னறிவிப்பு</h3> <p style="text-align: justify;">கடல் மட்டத்தின் ஏற்ற, இறக்கங்களைத் தொடர்ந்து ஆழிப்பேரலைகள் உருவாகலாம்.</p> <p style="text-align: justify;">கடல் மட்டத்தைக் காண இயலாத இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறான பேரிரைச்சலோடு கூடிய அலையோசையின் மூலம் ஆழிப்பேரலைகளில் வரவை எதிர்பார்க்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>1. சுனாமி</strong><strong> </strong><strong>தாக்கும்</strong><strong> </strong><strong>பொழுது</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">புகைப்படம்/வீடியோபடம் எடுக்க கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்தல்.</p> <p style="text-align: justify;">எச்சரிக்கை அறிவிப்புக்களை தொடர்ச்சியாக வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்ளுதல்.</p> <p style="text-align: justify;"><strong>2. சுனாமிக்குப்</strong><strong> </strong><strong>பின்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">அபாய எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்படும் வரை சுனாமி பாதிப்புள்ள பகுதிகளுக்கு செல்லுவதைத் தவிர்த்தல்.</p> <p style="text-align: justify;"><strong>3. நிலச்சரிவு</strong><strong> </strong><strong>ஏற்படுமுன்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">மலை உச்சி மற்றும் அடிவாரத்தில் கூடுமானவரையில் கட்டுமானப் பணிகளைத் தவிர்த்தல்.</p> <p style="text-align: justify;"><strong>4. முன்னறியும்</strong><strong> </strong><strong>அறிகுறிகள்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">கட்டிடங்களின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்படும்.</p> <p style="text-align: justify;">கதவு, ஜன்னல், போன்றவை மூட முடியாமல் இறுகிக்கொள்ளும்.</p> <p style="text-align: justify;">தாழ்வான பகுதிகள் மற்றும் வேலியோரங்களில் நிலப்பகுதி மேலெழும்பி காணப்படும்.</p> <p style="text-align: justify;">மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் போன்றவை கீழ்நோக்கி சாயத் தொடங்கும்</p> <p style="text-align: justify;">தொலைதூரத்தில் பொருட்கள் உருள்வது போல் கேட்கும் சப்தம் நம் இருப்பிடத்தை நிலச்சரிவு நெருங்கிக் கொண்டிருப்பதை அறிவிக்கும்.</p> <p style="text-align: justify;">வழக்கத்திற்கு மாறாக மரங்கள் அல்லது பெரிய பாறைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் சப்தம் கேட்கும்.</p> <p style="text-align: justify;">மலைப்பிரதேசங்களில் நடந்து அல்லது வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருத்தல் அவசியம்</p> <p style="text-align: justify;"><strong>5. நிலச்சரிவு</strong><strong> </strong><strong>ஏற்படும்பொழுது</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>சரிவின் போக்குப் பாதையிலிருந்து விலகி இருத்தல்.</p> <p style="text-align: justify;">தப்ப முடியாத சூழ்நிலையில் கைகளைத் தலைக்குப் பாதுகாப்பாக்கி உடலை பந்துபோல் சுருட்டிக் கொள்ளுதல் அதிக பாதிப்பைத் தவிர்க்கும்.</p> <p style="text-align: justify;">நிலச்சரிவு நின்றபின்</p> <p style="text-align: justify;">சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து விலகி இருத்தல்.</p> <p style="text-align: justify;">வானொலி/தொலைக்காட்சி அறிவிப்புக்களைத் தொடர்ந்து கேட்டு கவனித்து வருதல்.</p> <p style="text-align: justify;">காயம் அடைந்தவர்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு முடிந்த உதவிகள் செய்வதோடு, மீட்பு பணியில் உள்ளவர்களுக்கும் சரியான தகவல்களைக் கொடுத்து உதவலாம்.</p> <p style="text-align: justify;">நிலச்சரிவை தொடர்ந்து ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம்.</p> <p style="text-align: justify;"><strong>6. எரிமலை</strong><strong> </strong><strong>வெடிக்கும்</strong><strong> </strong><strong>முன்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்ட உடன் வசிப்பிடங்களை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல்.</p> <p style="text-align: justify;">கூடுமான வரையில், தேவையான உணவு மற்றும் தண்ணீரை வைத்துக் கொள்ளுதல்.</p> <p style="text-align: justify;"><strong>7. வெடிக்கும்</strong><strong> </strong><strong>போது</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சென்று பார்ப்பதைத் தவிர்க்கலாம்.</p> <p style="text-align: justify;">எரிமலைக் குழம்பு, சகதி மற்றும் புகை அதிகமுள்ள இடங்களில் மிக அருகில் இருப்பதை தவிர்த்தல் அவசியம்.</p> <p style="text-align: justify;">ஜன்னல், கதவு, புகைபோக்கி போன்றவற்றை சாம்பல் புகமுடியா வண்ணம் நன்றாக மூடி வைத்தல் அவசியம்.</p> <p style="text-align: justify;">வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை குறைந்த வேகத்தில் ஒட்டுதல் நலம்.</p> <p style="text-align: justify;">வழிந்தோடும் எரிமலையின் அருகில் உள்ள பாலங்களைக் கடப்பதைத் தவிர்த்தல் நலம்.</p> <p style="text-align: justify;"><strong>8. வெடித்த</strong><strong> </strong><strong>பின்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்புக்களை தொடர்ந்து கவனித்தல் அவசியம்.</p> <p style="text-align: justify;">எரிமலை சாம்பல் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்தல்</p> <p style="text-align: justify;">வெளியில் செல்லும் போது வாய் மற்றும் மூக்கு பகுதிகளை நன்றாக மூடிக் கொள்ளுதல்</p> <p style="text-align: justify;">தோல் எரிச்சல் மற்றும் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க உடல் முழுவதும் மூடியிருக்கும் வகையில் உடைகளை பயன்படுத்துதல்.</p> <p style="text-align: justify;">காயமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுமான முதலுதவி செய்தல்.</p> <p style="text-align: justify;"><strong>9. சூறாவளி</strong><strong> </strong><strong>ஏற்படும்பொழுது</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">சூறாவளி வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில் வீடுகளுக்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது.</p> <p style="text-align: justify;">கீழ்தள அறைகள், ஜன்னல்கள் இல்லாத அறைகள் அல்லது பெரிய அலமாரிக்குள் இருத்தல் மிகவும் பாதுகாப்பானது.</p> <p style="text-align: justify;">மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தால் பாட்டரி உள்ள விளக்குகளை பயன்படுத்தலாம். மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தவதைத் தவிர்த்தல் நலம்.</p> <p style="text-align: justify;">வானிலை அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருதல் நல்லது.</p> <p style="text-align: justify;">சூறாவளிக்குப்பின் வெளியில் தேங்கிக் கிடக்கும் நீரில் நடப்பதை தவிர்ப்பதன் மூலம், துண்டிக்கப்பட்ட மின் கம்பிகளினால் உருவாகும் பயங்கர ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.</p> <p style="text-align: justify;">நடந்தோ/வாகனங்களிலோ செல்லும் போது முறிந்து கிடக்கும் விளம்பரப்பலகைகள், மரங்கள், மின்கம்பங்கள், உலோகத்தாலான சாலைத் தடுப்புக்களைக் கவனமாக கடந்து செல்லுதல் அவசியம்.</p> <p style="text-align: justify;">அபாய எச்சரிக்கை நிறுத்தப்படும் வரை அருகிலுள்ள கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>10. வெள்ளத்திற்கு</strong><strong> </strong><strong>முன்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து விலைமதிப்புள்ள பொருட்களை அப்புறப்படுத்துதல்.</p> <p style="text-align: justify;">காஸ் சிலிண்டர், மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்தல்.</p> <p style="text-align: justify;">டார்ச் லைட்டை உபயோகிக்கவும்.</p> <p style="text-align: justify;"><strong>11. வெள்ளம்</strong><strong> </strong><strong>எற்படும்பொழுது</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">தாழ்வான இடங்களைக் காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல்.</p> <p style="text-align: justify;">வெள்ளநீர் வடியும் வரை அப்பகுதிகளுக்கு செல்லுவதைத் தவிர்த்தல்.</p> <p style="text-align: justify;">பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக இருத்தல்.</p> <p style="text-align: justify;"><strong>12. வெள்ளம்</strong><strong> </strong><strong>வடிந்த</strong><strong> </strong><strong>பின்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong></p> <p style="text-align: justify;">வெள்ள நீரில் நடத்தல், நீந்துதல் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்த்தல்.</p> <p style="text-align: justify;">பாதுகாப்பான உணவு மற்றும் நீரை உட்கொள்ளுதல்.</p> <p style="text-align: justify;">குடிநீரை கொதிக்க வைத்து, வடிகட்டி பருகுதல்.</p> <p style="text-align: justify;">தரை, சுவர் அனைத்தும் நன்கு உலரும் வரை மின்சாரம் பயன்படுத்தாமல் இருத்தல் மின் கசிவினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும்.</p> <p style="text-align: justify;">வாயு கசிவு ஏதும் உள்ளதா என பரிசோதித்தல்.</p> <p style="text-align: justify;">தீ பற்றும் வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதித்தல்.</p> <p style="text-align: justify;">தரை, கதவு, ஜன்னல் மற்றும் சுவரில் ஏதும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிதல்.</p> <p style="text-align: justify;"><strong>13. காட்டுத்தீ</strong><strong> </strong><strong>ஏற்படும்</strong><strong> </strong><strong>முன்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">தீயிலிருந்து தப்பிக்கும் வழிகள் மற்றும் முதலுதவி செய்யும் முறைகளைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.</p> <p style="text-align: justify;"><strong>14. தீ</strong><strong> </strong><strong>பரவும்</strong><strong> </strong><strong>சமயம்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">குடியிருப்புக்களைக் காலி செய்யும் பட்சத்தில் காஸ் சிலிண்டர்கள் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட வேண்டும்.</p> <p style="text-align: justify;">எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்க்களை வீட்டின் மையப் பகுதியில் குவித்து வைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">வெளியேறுவதற்கு தகுந்த கால அவகாசம் இருப்பின் தோட்டம் மற்றும் தொட்டிச் செடிகளுக்கு நீருற்றுதல் மூலம் பெரிய அளவிலான பாதிப்புக்களைத் தவிர்க்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>தீ</strong><strong> </strong><strong>அணைந்த</strong><strong> </strong><strong>பின்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்தல்.</p> <p style="text-align: justify;">எரிந்த மின்கம்பங்கள் மற்றும் மரங்கள், கட்டைகள் போன்றவற்றை கவனித்து செல்லுதல்.</p> <p style="text-align: justify;">வீட்டில் முழுமையாக புகை மற்றும் தீப்பொறி இல்லை என்பதை உறுதி செய்த பின் உட்செல்லுதல்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி வலைத்தளம்" href="http://cpreec.org/" target="_blank" rel="noopener">சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்</a></p> </div>