வீட்டு விலங்குகள் சில வீட்டு விலங்குகள் உணவிற்காகவும், மருந்திற்காகவும் மற்றும் ஆராய்ச்சிகளாவும் துன்புறுத்தப்படுகின்றன. அவை படும் துன்பங்கள் எண்ணிலடங்தாவை. இதனால் சுற்றுச்சூழல் பிரச்சனைகளான வெதண வேறுபாடு, விலங்குகளின் வாழ்விடம் அழிதல் போன்றவை ஏற்படுகின்றன. காளைகள் காளைகள் வலி நிவாரணி இல்லாமல் கொடுரமாக வதைக்கப்படுகினறது. மிக அதிக எடையுள்ள வண்டிகளை இழுக்க சாட்டையாலும், கூர்மையான கம்பிகளாலும் துன்புறுத்தப்படுகின்றன. அவை நோயுறும் வகையில் அடிக்கின்றனர். நாம் உண்ணும் இரைச்சி நோயுள்ள விலங்கியிலிருந்து கிடைக்கிறது. பசு பசுக்கள் செயற்கை கருத்தரிப்பிற்கு அடிக்கடி உட்படுத்தப்படுகின்றன. கன்று பிறந்தவுடன் , தாயிடமிருந்து கன்றை பிரித்து விடுகின்றனர். ஊசிமூலம் ஆக்ஸிடேஸின் மருந்தை செலுத்தி அதிகபால் சுரக்கப்படுகின்றன. பசுவின் பயன்பாடு முடிந்தவுடன் இறைச்சிகாக கொல்லப்படுகிறது. போக்குவரத்து இன்னல்கள் இந்திய வன விலங்கு சட்டத்தின் படி ஆடு மாடுகள் மட்டுமே வண்டியில் ஏற்ற வேண்டும். ஆனால் 30-40 விலங்குகளை பல நாட்கள் நீர் மற்றும் உணவு இன்றி வண்டியில் ஏற்றிச் செல்வதை கண்கூடாகப் பார்கிறோம். குதிரைகள் குதிரைகள் பந்தயத்திற்கும் சவாரிக்கும் பயன்படுத்தப்படுகிறது, குதிரை பந்தயத்தில் வேகமாக ஓடுவதற்கு போதை பொருட்கள் தரப்படுகின்றன. கனரக வாகனங்களை இழுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இறுதியாக இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. ஆடுகள் ஆடுகள் மதத்தின் பெயரால் பலி கொடுக்கப்படுகிறது. நட்பு விலங்குகள் நாய்கள் நாய்களுக்காக சட்டத்தில் (1991) நாய்களை கொலை செய்வதை தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் நாய்கள் கொல்லப்படுகின்றன. பூனைகள் நரிக்குறவர்களால் உண்பதற்காக பூனைகள் திரட்டப்படுகிறது. பூனையை பிடிப்பதற்காக அவற்றின் மீது சுடுநீர் ஊற்றப்படுகினறது, அதன் ரோமங்களுக்காக கொல்லப்டுகிறது. பின் தெருகளில் அனாதையாக விரட்டப்படுகிறது. கோழிகள் கோழிகளின் அலகுகள் உடைக்கபடுகிறது. பின் அதன் முட்டையிடுவதற்கு, இறைச்சிக்காவும் மரபியல் மாறற்ங்கள் செய்யப்படுகின்றது. இரு கால்களும் கட்டப்பட்டு தலைகீழாக மிதிவண்டியில் கட்டிவைத்து எடுத்து செல்லப்படுகின்றன. கோழிச்சண்டைக்கு வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்படுகின்றது. வாத்துகள் வாத்துகள் அதிக இறைச்சிகாகவும் மிருதுவான தலையனை மற்றும் மெத்தை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். மீன்கள் அதிகமான மீன் பிடிப்பிகளால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மீன்கள் அழிவை சந்திக்க நேடிடும். மீன்கள் வளர்ப்பு மையங்கள் அவை வாழ்வதற்கான அடிப்படை வசதியின்றி உள்ளது. இவை உப்பு நீர் ஊடுருவால் , நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் ஹார்மேன்கள் பயன்பாடு போன்ற பயன்பாடுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. தாவர உணவிற்கு மாறுதல் கொடூரமான முறையில் கிடைக்கும் மாமிச உணவை தவிர்க்கலாம். ஆரோக்கியமான வாழ்வு அசைவ உணவுகள் கொழுப்புச் சத்து மிகுந்தவை எனவே சராசரியாக அசைவ உணவர்களின் கொழுப்புச்சத்து ரத்தத்தில¢ 210 மில்லி கிராம். இது இதய இதய நோய்க்கு வழியாகும், ஒலிம்பிக் பதக்கம் பெற்ற விஐயகுமார் , குரு ஹனுமான் மற்றும் மல்யுத்த வீரர்கள் சைவ உணவையே உண்பவார்கள். இதற்கு காரணம் சைவ உணவால் ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வாழலாம். அறிவுப்பூர்வமானது உலகின் சிந்தனை சிற்பிகளான லியோனோ டாவின்சி, ஆல்பர்ட் அயன்டீன், அன்னிபெசன்ட், மகாத்மா காந்தி, ராமனுஜம், லியோ டால்டோய் போன்றவர்கள் சைவ உணவையே பின்பற்றினார். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்