நிலக்கரி சுரங்கங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஒப்புதல் செயல்முறைகளை எளிதாக்கும் திருத்த விதிமுறைகள் நிலக்கரித் துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் அத்துறை வணிகம் செய்வதை எளிதாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய சுரங்கங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்புதல் செயல்முறைகளை எளிதாக்கும் வகையிலான திருத்த விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. புதிய நிலக்கரி கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்கி சுரங்கங்களை விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர உதவும். அதே நேரத்தில் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மேற்பார்வையை உறுதி செய்யப்படும். திருத்த விதிமுறைகள் 23.12.2025 அன்று வெளியிடப்பட்டன. இது தொடர்பான விரிவான விவரங்களை கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளில் காணலாம். https://coal.nic.in/sites/default/files/2025-12/26-12-2025a-wn.pdf https://egazette.gov.in/WriteReadData/2025/268804.pdf ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்