சென்னையில் புதுமை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் அறுவடைத் திருநாள் கொண்டாட்டங்களின்போது நடத்தப்படும் சென்னை புத்தகக் கண்காட்சியானது, நாடெங்கிலுமுள்ள புத்தகப் பிரியர்களின் தவிர்க்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. வருகை தரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உலகிலேயே, B2C எனப்படும் வணிக நிறுவனத்தாரிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிற மிகப்பெரிய புத்தகக் கண்காட்சிகளுள் இதுவும் ஒன்று! சென்னை உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனத்தில் (YMCA, Nandanam, Chennai) சனவரி 6, 2023 முதல் சனவரி 22, 2023 வரை நடக்கும் 46வது புத்தகக் கண்காட்சியானது சிறப்பு வாய்ந்த நிகழ்வாக அமையவுள்ளது. சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஒரு உலகளாவிய நிகழ்வாக ஒரு பெரிய அற்புதம் வாய்ந்த மைல் கல்லை எட்டுகிறது. உலகெங்கிலும் வாழும் 8 கோடி தமிழர்களை பன்னாட்டு வாசிப்புத் தளத்தை நோக்கி ஈர்ப்பதற்கு எல்லாம் தயாராக உள்ளன என்பதால், தற்போதைய உலகப் போக்குகளுக்கு ஏற்ற வகையில் இது மாறி வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியானது, எப்போதோ பன்னாட்டு கண்காட்சியாக மாறியிருக்க வேண்டும், ஏனெனில், தமிழ் மொழி, உண்மையான உலக மொழியாக, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் அலுவல் மொழியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்றாகவோ இருக்கிறது. ஆனால், நீண்ட தாமதம் ஆகிவிட்டது. மேலும், உலகளவில் இன்று உயிருடன் இருக்கக்கூடிய மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒன்றாகவும் திகழ்கிறது. சென்னையில் நடைபெறும் முதல் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (Tamil Nadu Textbook and Educational Services Corporation) என்ற மாநில அரசின் நிறுவனமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் [Book Sellers and Publishers Association of South India (BAPASI)] இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்வில், காப்புரிமைகள் விற்பனைக் கண்காட்சி, மொழிபெயர்ப்பு நல்கைத் திட்டம், மொழி சார்ந்த பதிப்பக சந்தைகளின் எதிர்காலம் தொடர்பான பன்னாட்டு மாநாடு, சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு ஆகியவை இடம்பெறுவதோடு, பங்குபெறும் நாடுகளின் புத்தகங்கள் மற்றும் பண்பாடுகளை காட்சிப்படுத்தும் ஒரு கூடாரமாகவும் இது அமையவுள்ளது. இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு நகரமும் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. பெரிய நூலகங்கள் கட்டி அதில் புதுபிக்கப்பட்ட அறிவு வளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அறிந்துகொள்ளுதல், பகிர்தல், படைப்பு ஆகியவற்றின் உலகளாவிய மையமாக சென்னை மற்றும் தமிழ்நாட்டை நிறுவுவதற்கான சமீபத்திய முயற்சி சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியாகும். பன்னாட்டு மயமாகும் சென்னை புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் கடந்த 45 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் சென்னை புத்தகக் கண்காட்சி தற்போது புதிய சிறப்பம்சங்களுடன் வடிவம் பெற்றுள்ளது. ஆம், பன்னாட்டு புத்தகக் கண்காட்சியாக மாறியுள்ளது! காப்புரிமைகள் (Rights) விற்பனைக் கண்காட்சி, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பதிப்பக தொழில்துறை மாநாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. இந்த சிறப்புமிகு கண்காட்சியில் கலந்துகொள்ளும்படி, ஆசியாவின் மிகப்பெரிய பதிப்பக சந்தைகளில் ஒன்று உங்களை அழைக்கிறது. பன்னாட்டு அளவிலான நிகழ்ச்சிகள் இந்தக் கண்காட்சிக்கு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? சென்னை என்ற மாநகரம், ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு மாநிலமோ, இந்தியாவின் மிகவும் வளம் செறிந்த மாநிலங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் 8 கோடி தமிழர்களுடன் சேர்த்து, அலாஸ்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை, கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் தமிழ் புத்தகச் சந்தைக்கு வரவேற்கிறோம்! சென்னை குறித்து அறியலாமா? சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ளது. பொருளாதாரம், தொழில்துறை, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளுக்கு மட்டுமின்றி, இலக்கியம், இசை மற்றும் நடனம் போன்ற அம்சங்களுக்கும் இந்த நகரம் புகழ்பெற்றதாகும். அறிவுசார் தொழில்துறைகளுக்கு, உலகளாவிய அளவில் மனிதவளங்களை ஏற்றுமதி செய்யும் மையமாக சென்னை விளங்குகிறது. டிஜிட்டல் பொருளாதார மையமாக அறியப்படும் சென்னை, டிஜிட்டல் புத்தொழில் சுற்றுச்சூழலை செழிப்பாக்குவதில் பெருமிதம் கொள்ளும் வகையில் திகழ்கிறது. இந்நகரம், ஒரு திரைப்பட தயாரிப்பு மையமும் ஆகும். காப்புரிமைகள் வர்த்தக மையம் பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள், சாரணர்கள், நாட்டு நிறுவனங்கள், பதிப்பாளர் சங்கங்கள், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருக்காக கண்காட்சியில் உள்ள காப்புரிமைகள் வர்த்தக மையம் இரண்டு நாட்களுக்குச் செயல்படும். குறிப்பாக, தமிழ் இலக்கிய காப்புரிமைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் பங்கேற்பாளர்கள் காப்புரிமைகள் வர்த்தக மையத்தில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். தமிழ் நூல்கள் சந்தையில் பிரபலமாக அறியப்படும் மொழிபெயர்ப்புத் தலைப்புகளுடன் உலகளாவிய பங்கேற்பாளர்களிடமிருந்து தலைப்புகளின் காப்புரிமைகளை வாங்குவதற்காக காப்புரிமைகள் வர்த்தக மையத்தை பயன்படுத்த உள்ளூர் பதிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு, அவர்களுடன் சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி அமைப்பாளர்கள் இணைந்து செயல்படுவார்கள். மொழிபெயர்ப்பு நல்கைக்காக, பங்கேற்கும் பிற மொழி பதிப்பாளர்கள் காப்புரிமை வர்த்தக மையத்தில் விண்ணப்பிக்கலாம். மொழிபெயர்ப்பு நல்கைகள் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின்போது, தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிபெயர்ப்புக்கான உலகளாவிய நல்கைத் திட்டத்தைத் தொடங்குகிறது. காப்புரிமைகள் விற்பனைக் கண்காட்சி அல்லது பிற சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பன்னாட்டு பார்வையாளர்கள், மொத்தம் 3,00,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு நல்கைகளைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள். காப்புரிமைகள் விற்பனை அட்டவணையை அணுகுவதற்கும் நல்கைகளைப் பெறுவதற்கும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யவும். மாநாடு மொழி வெளியீட்டு சந்தைகளின் எதிர்காலம்: தமிழ் மற்றும் உலகளாவிய புத்தக வெளியீட்டு போக்குகள் குறித்த ஒரு நாள் பன்னாட்டு மாநாடு கண்காட்சியின் ஒரு பகுதியாக, 'தமிழ் மற்றும் உலகளாவிய புத்தக வெளியீட்டு போக்குகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு மாநாடு நடைபெறும். வெளியீட்டுத் தொழில் வளர்கையில் மொழி வெளியீட்டு சந்தைகளின் எதிர்காலத்தை ஆராய்வது மிகவும் அவசியமானதாகும். பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், பதிப்பு சேவை வழங்குநர்கள், பதிப்பக தொழில்நுட்பம் வழங்குநர்கள், நூலகங்கள், உரிமைகள் வணிக வல்லுநர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் ஆகியோர் பங்கேற்பாளர்களாவார்கள். பங்கேற்பது இலவசம் - கண்காட்சியின் இணையதளத்தில் பதிவு செய்தால் போதுமானது. எடுத்துக்கொள்ளப்பட்ட சில தலைப்புகள் தமிழ் மொழி பதிப்பகத் துறைக்கான வாய்ப்புகள் பல்வகைப் பதிப்பு: அச்சு, மின்நூல் மற்றும் ஒலிவடிவிலான புத்தகங்கள். பன்னாட்டு மொழிபெயர்ப்பு நல்கைகளைப் பெறுவது எப்படி? செய்யறிவு போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எழுதுதல், வடிவமைத்தல் மற்றும் மொழிபெயர்த்தல் பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் வர்த்தகம் பதிப்பாளர்களுக்கான மின்வர்தகம் மற்றும் சில்லறை வர்த்தகம் பதிப்பாளர்களுக்கான மின்வர்தகம் மற்றும் சில்லறை வர்த்தகம் பதிப்புத் துறையில் புத்தொழில் மற்றும் வல்லுனர்கள் ஆதரவு மற்றும் பேசும் வாய்ப்புகள் உள்ளன: கலந்துகொள்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றாலும், காட்சிப்படுத்த விரும்பும் ஆதரவாளர்களும் பங்கேற்பாளர்களும் இடம் மற்றும் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். பன்னாட்டு அரங்கு தங்கள் படிப்பாளர்களையும் புத்தகங்களையும் விளம்பரப்படுத்தவும், தங்கள் நாட்டுக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், வணிகம் செய்யவும், தமிழ் பதிப்புத் துறையிலிருப்பவர்களைச் சந்திக்கவும் மற்றும் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் பன்னாட்டு அரங்கு வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களை அழைக்கிறது. புத்தக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பன்னாட்டு பங்கேற்பாளர்களும் காட்சிப்படுத்துவதற்கு இலவச இடம் அல்லது மேசைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சி: இந்த வகையிலான மற்ற நிகழ்சிகளைப் போலல்லாமல், செ.ப.பு.க. யின் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் ஒருவருக்கு மட்டுமல்லாமல், வருகை தந்துள்ள நாட்டின் பிரதிநிதி ஒருவருக்கும் இந்திய மாநிலங்களில் ஒருவருக்குமென இருவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த நிகழ்விற்கான விருந்தினர்களை முன்மொழிவதற்கு உலகம் முழுவதிலுமிருந்தும் இந்தியாவின் மாநிலங்களில் உள்ள அதிகாரப்பூர்வ அமைப்புகளையும் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி அன்புடன் கேட்டுக்கொள்கிறது. காலத்தினூடே ஒரு பயணம்: யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரத்திற்கும் சமீபத்தில் முடிவடைந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்ற அரங்கிற்கும் ஒரு நாள் உல்லாசப் பயணமாக பன்னாட்டு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆதாரம்: www.tamil.chennaiinternationalbookfair.com