இந்திய அரசாங்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2014, டிசம்பர் 25 ஆம் நாள் தடுப்பூசிகள் திட்டத்தை கொண்டு வந்தது. 2009க்கும் 2013க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விழுக்காடு 61 லிருந்து 65 ஆக, ஆண்டுக்கு ஒரு விழுக்காடு வளர்ச்சியையே காட்டியது. ஒவ்வொரு ஆண்டும் 5% அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கூடுதலாக தடுப்பூசி தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்காக இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோக்கம் வானவில்லின் ஏழு நிறங்களைக் குறிக்கும், இந்திரனின் கைஅம்பு என்ற பொருள் தரும், இந்திரதனுஷ் திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட்டுவிடும் இலக்கை கொண்டுள்ளது. கக்குவான், ரனஜன்னி, டெட்டனஸ், இளம்பிள்ளைவாதம், காசநோய், மீசல்ஸ், டீவகை மஞ்சள் காமாலை ஆகியவையை தடுக்ககூடிய 7 வகை நோய்களுக்கு அரைகுறையாக தடுப்பூசி போடப்படுபவர்களும் இந்தத் திட்டத்தின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவார்கள். அமலாக்கம் தடுப்பூசிகள் போடப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் குழந்தைகள் 7 வகை தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டுமே போட்டுக் கொண்டுள்ள குழந்தைகள் ஆகிய அனைவரையும் பிரசார வழிமுறையின் மூலம் ஊக்கமளித்து பற்றிக்கொள்வதற்கான திட்டவட்டமான ஒழுங்குமுறை கொண்ட, ஒரு முகப்படுத்தப்பட்ட செயல்திட்டம் தான் இந்திரதனுஷ் தடுப்பூசிதிட்டம். இந்தத் திட்டத்தின் முதல்கட்டம் 201 மாவட்டங்களில் அடுத்தடுத்த 4 மாதங்களுக்கு 2015 ஏப்ரல் 7 முதல் ஒருவாரகால தீவிர முகாம்களின் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இவர்களில் 20 லட்சம் குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. 20 லடசத்திற்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் டெட்டனஸ், டாக்ஸாய்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டனர். அரசாங்கம், தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 352 மாவட்டங்களில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும். இவற்றில் 279 மாவட்டங்களில் நடுத்தரகவனம் தேவைப்படும் மாவட்டங்கள். மீதமுள்ள 73 மாவட்டங்கள் முதல் கட்டதடுப்பூசித் திட்டத்திலும் இடம் பெற்றிருந்த மாவட்டங்களாகும். இரண்டாவது கட்ட இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டத்தின் போது ஒவ்வொன்றும் ஒருவாரகால நீட்சியுடைய மக்களைத் திரட்டும் நான்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2015 அக்டோபர் மாதம் முதல் இது நடைமுறைபடுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் நிறுவனம், ரோட்டரி அமைப்பு, தானங்கள் தரும் மற்ற பங்காளர்கள் ஆகியோர் அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப ஆதரவைத் தருவார்கள். ஊடகங்கள் தனிநபர் இடைத் தொடர்புகள், தண்ணிய மேற்பார்வை உத்திகள், திட்டத்தின் செயல்பாடு குறித்த மதிப்பீடுகள் ஆகியவை இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டத்தின் மிக முக்கயமான அங்கங்களாகும். கவனம் செலுத்தப்படும் பகுதிகள் இந்திரதனுஷ் தடுப்பூசித்திட்டம் முதல் கட்டத்தில் 201 உயர் முன்னுரிமை மாவட்டங்களையும். இரண்டாம் கட்டத்தில் 297 மாவட்டங்களையும் இலக்காகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் செயல்பட்டது. இதில் தடுப்பூசிகளே போட்டிராத குழந்தைகளும் ஒருசில தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ள குழந்தைகளுமாக ஏறத்தாழ 50 % குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 201 மாவட்டங்களில் 82 மாவட்டங்கள் உத்திரபிரதேசம், பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே உள்ளன. முற்றிலும் தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகள், ஒருசில தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இத்தகைய ஒட்டு மொத்த இந்தியக் குழந்தைகளில் 25 மூபேர் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த 82 மாவட்டங்களில் வாழ்கின்றனர். இந்த மாவட்டங்களுக்குள் அதிக நோய் இடர்கள் நேரக்கூடிய 4 லட்சம் குடியிருப்புகள் இருப்பது போலியோ தடுப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்பட்டது. இந்தக் குடியிருப்புகள் இருக்ககூடிய இடஅமைப்பு, பிறப்பு இறப்பு புள்ளிவிவர ஆய்வுகள் இங்குள்ள மக்களினத்தவர் இவைபோன்ற பல சவால்கள் நிலவுவதுதான் இந்தப் பகுதிகளில் தடுப்பூசிப் பணிகள் நடைபெறாமல் போனதற்கான காரணங்கள். தடுப்பூசி சிறப்பு முகாம்களின் இலக்காகக் கொள்ளப்படும் பகுதிகள் பின்வருமாறு 1. போலியோ ஒழிப்புத் திட்டத்தின் போது அடையாளம் காணப்பட்ட அதிக நோய் இடர்கள் நேரக்கூடிய பகுதிகள்: மக்கள் இடப்பெயர்வு அதிகமாக இருக்கும் நகர்ப்புற குடிசைப் பகுதிகள் நாடோடி மக்கள் செங்கற் சூளைப் பணியாளர்கள் கட்டுமானப் பணியாளர்கள் பிற இடப்பெயர்வாளர்கள் (மீனவ கிராமங்கள், ஆற்றோரப் பகுதிகளில் அவ்வப்போது குடியேறுவோர்) சேவைகள் அதிகம் கிடைக்கப் பெறாத, எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் வசிக்கும் மக்கள் (வனங்கள், ஆதிவாசி மக்கள் குழுக்கள்) 2. வழக்கமான தடுப்பூசி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகள் (மீசல்ஸ், தடுப்பூசியால் தடுக்கப்படக்கூடிய நோய்கள் பரவும் பகுதிகள்) 3. காலியிடங்கள் உள்ள துணைமையங்கள் : சுகாதாரப் பணியாளர்கள் மூன்று மாதங்களுக்குமேல் இல்லாத இடங்கள். 4. தொடர்ச்சியான தடுப்பூசி நடவடிக்கைகள் இடையில் விடுபட்டுப் போன பகுதிகள் : சுகாதாரப் பணியாளர்கள் நீண்டவிடுப்பில் இருப்பது போன்ற காரணங்களால் 5. சிறிய கிராமங்கள், குடிசைப்பகுதிகள், தடுப்பூசி நடவடிக்கைகளுக்கான தனிப்பட்ட சேவைகள் கிடைக்காத–பிற கிராமங்களுடன் சேர்க்கப்பட்ட பகுதிகள். இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் முதல்கட்டமாக 201 மாவட்டங்கள் வரிசை எண் மாநிலம் வரிசை எண் மாவட்டம் வரிசை எண் மாவட்டம் 1 ஆந்திரப்பிரதேசம் 1 கிழக்குகோதாவரி 2 குண்டுர் 3 கிருஷ்ணா 4 கர்னூல் 5 விசாகப்பட்டினம் 2 அருணாசலபிரதேசம் 1 சங்லாங் 2 கிழக்குகமங் 3 கிழக்குசியாங் 4 லோஹிட் 5 மேல் சியாங் 3 அஸ்ஸாம் 1 போங்கைகவோன் 2 தர்ரங் 3 துப்ரி 4 கோல்பாரா 5 ஹைலாகண்டி 6 கரிம்கஞ்ச் 7 கோக்ராஜ்ஹர் 8 நாகாவோன் 4 பிகார் 1 சுராரியா 2 பேகுசாரய் 3 கிழக்குசம்ப்பரன் 4 மேற்குசம்ப்பரன் 5 தர்பங்கா 6 குயா 7 ஜமூய் 8 கதிஹார் 9 கிஷன் கஞ் 10 முசாபர்பூர் 11 பட்னா 12 சஹார்சா 13 சமஸ்டிபூர் 14 சிதமர்ஹி 5 சட்டிஸ்கர் 1 பலோடா பஜார் 2 பிஜப்பூர் 3 பிலாஸ்பூர் 4 தந்தவாடா 5 ஜாஷ்பூர் 6 கோர்பா 7 ராய்ப்பூர் 8 சர்குஜா 6 டெல்லி 1 வடகிழக்குடெல்லி 2 வடமேற்குடெல்லி 7 குஜராத் 1 அஹமதாபாத் 2 ஆகமதாபாத் நகராட்சி 3 பனஸ்கந்தா 4 தஹோத் 5 டாங்ஸ் 6 கட்ச் 7 பஞ்சமஹல்ஸ் 8 சபர்கந்தா 9 வல்சாத் 8 ஹரியானா 1 பரிதர்பாத் 2 குர்காவோன் 3 மேவத் 4 பல்வால் 5 பானிபட் 9 ஜம்முகாஷ்மீர் 1 தோதா 2 கிஷ்ட்வார் 3 பூஞ்ச் 4 ரஜவ்ரி 5 ரம்பான் 10 ஜார்க்கண்ட் 1 தியோகார் 2 தன்பாத் 3 கிரிதிஹ் 4 காட்டா 5 பாகுர் 6 சஹிப்கஞ்ச் 11 கர்நாடகா 1 பெங்களுருநகரம் 2 பெல்லாரி 3 குல்பர்கா 4 கொப்பால் 5 ராய்ச்சூர் 6 யாத்கிர் 12 கேரளா 1 காசர்கோடு 2 மலப்புரம் 13 மத்தியப்பிரதேசம் 1 ஆலிராஜ்பூர் 2 அனுப்புர் 3 சத்தார்பூர் 4 ததோஷ் 5 ஜாபுவா 6 மண்ட்லா 7 பன்னா 8 ரெய்சன் 9 ரேவா 10 சாகர் 11 சடானா 12 ஷாதோல் 13 திகம்கார் 14 ஊமாரியா 15 விதிஷா 14 மகாராஷ்டிரா 1 பீட் 2 துலே 3 ஹிங்கோலி 4 ஜல்காவோன் 5 நந்தெத் 6 நாசிக் 7 தானே 15 மணிப்பூர் 1 சுராசந்த்பூர் 2 சேனப்படி 3 தமெங்லாங் 4 உக்ருல் 16 மேகாலயா 1 கிழக்குகாசிகுன்றுகள் 2 மேற்குகாரோகுன்றுகள் 3 மேற்குகாசிகுன்றுகள் 17 மிசோரம் 1 லாங்திலாய் 2 லுங்லேய் 3 மமிட் 4 சாய்ஹா 18 நாகாலாந்து 1 திமாபூர் 2 கிபிரி 3 கொஹிமா 4 மொன் 5 துவன்சாங் 6 வோகா 19 ஓடிசா 1 பௌவுத் 2 கஜபதி 3 கஞ்சம் 4 கந்தமால் 5 குர்தா 6 கொராபுட் 7 மலாக்கன்கிரி 8 நபரங்பூர் 9 நுவாபதா 10 ராய்கடா 20 புதுச்சேரி 1 ஏனாம் 21 பஞ்சாப் 1 குர்தாஸ்பூர் 2 லூதியானா 3 முக்த்சார் 22 ராஜஸ்தான் 1 அல்வார் 2 பர்மர் 3 புண்டி 4 தவுல்பூர் 5 ஜெய்ப்பூர் 6 ஜோத்புர் 7 கரவ்லி 8 சவாய்மதோபுர் 9 டோங்க் 23 தமிழ்நாடு 1 கோயமுத்தூர் 2 காஞ்சிபுரம் 3 மதுரை 4 திருவள்ளுர் 5 திருச்சிராப்பள்ளி 6 திருநெல்வேலி 7 வேலூர் 8 விருதுநகர் 24 தெலுங்கானா 1 அடிலாபாத் 2 மக்பூப்நகர் 25 திரிபுரா 3 தலாய் 4 வடக்குதிரிபுரா 5 திரிபுராமேற்கு 26 உத்திரபிரதேசம் 1 ஆக்ரா 2 அலிகர் 3 அலகாபாத் 4 அமேதி 5 அம்ரோஹா 6 ஓளரயா 7 அசம்கர் 8 பதாதுன் 9 பதோதி 10 பஹ்ரெய்ச் 11 பல்ராம்பூர் 12 பண்டா 13 பரபன்கி 14 பெய்ரலி 15 புலந்சாகர் 16 சித்ரகூட் 17 ஈட்டாஹ் 18 எட்டாவா 19 பரூக்காபாத் 20 பைரோசாபாத் 21 காசியாபாத் 22 கோண்டா 23 ஹபூர் 24 ஹர்தோய் 25 ஹத்ராஸ் 26 கன்னுஜ் 27 கஸ்கஞ்ச் 28 கௌசாம்பி 29 கேரி 30 மெய்ன்புரி 31 மதுரா 32 மீரட் 33 மிர்சாபுர் 34 மொராதாபாத் 35 முசாபர்நகர் 36 பிலிபிட் 37 சம்பால் 38 ஷாஜகான்புர் 39 ஷாம்லி 40 சித்தார்த் நகர் 41 சிதாபுர் 42 சன்பாத்ரா 43 ஸ்ரவஸ்தி 44 சுல்தானா 27 உத்தரகண்ட் 1 ஹரித்வார் 28 மேற்குவங்காளம் 1 24 பர்கானாக்கள் - வடக்கு 2 24 பர்கானாக்கள் - தெற்கு 3 பர்தாமன் 4 பிர்பும் 5 முர்ஷிதாபாத் 6 உத்தர்தினாஜ்புர் இரண்டாம் கட்டமாக 352 மாவட்டங்கள் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்திற்கான நடப்புமுறை நோய் தடுப்பு மருந்துகள் மிகவும் குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மீது தனிகவனம் செலுத்தி, நாடுமுழுவதும் தடுப்பூசி தரப்படுவதை உறுதிசெய்து ஒரு தேசிய செயல்பாட்டுத் திட்டமாக இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டம் இருக்கும். இந்திரதனுஷ் தடுப்பூசி செயல்திட்டம் பின்வரும் நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும்: அனைத்து மாவட்டங்களிலும் கவனமாக சிறப்புத் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவது ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்ப்புறத்திலும் நுண்திட்டங்கள் ஆய்வுசெய்து போதுமான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசி போடுபவர்களும் ஒவ்வொரு முகாமின் போதும் இருக்குமாறு உறுதிசெய்து கொள்வது. 4 லட்சம் நோய்பரவும் அதிக நிலைமைகள் உள்ள குடியிருப்புகளில் குறிப்பாக நகர்புற குடிசைகள் கட்டுமானம் நடைபெறும் இடங்கள், செங்கற் சூளைகள், நாடோடிமக்கள், மலைவாழ் பழங்குடி மக்கள் போன்றவர்களை முழுமையாக சென்றடையும் படி சிறப்புத் திட்டங்களை உருவாக்குதல். திறம்மிக்க தகவல் தொடர்பு, மக்கள் திரட்சி நடவடிக்கைகள் தகவல் தொடர்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதன் மூலமும், மக்கள் திரளைக் கூட்டி அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி தேவைக்கான தேவையை அதிகரிப்பது. அவ்வப்போது நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பது. இதற்கு ஊடகங்கள், இடை ஊடகங்கள், தனிப்பட்ட நபர்களுடனான தகவல் பறிமாற்றம், பள்ளிகள், இளைஞர்களின் அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியைப் பெறுவது. சுகாதார பணியாளர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் சுகாதார பணியாளர்கள், முன்னின்று ஊழியம் செய்வோர் போன்றோரின் திறமைகளை அதிகரித்து தடுப்பூசி முகாம்களில் தரமான சேவையாற்றும்படி செய்வது. கடின வேலை செய்யும் குழுக்களின் மூலம் பதில் சொல்லும் பொறுப்பை உருவாக்குதல் மாவட்ட அளவில் தனிப் பொறுப்பளிக்கப்பட்ட பணிக்கழுக்களை உருவாக்கி மாவட்ட நிர்வாகம் மற்றம் மாவட்ட சுகாதார அமைப்புகளின் ஈடுபாட்டையும், பொறுப்புணர்வையும் அதிகரித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பணிவெற்றிக் காணச் செய்தல். முகாம்கள் நடைபெறும் அதே வேளையிலேயே தரவுகளைப் பெற்று மேற்பார்வை செய்து இடைவெளிகளை அதற்றுதல். மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்சகம் மற்ற அமைச்சகங்களுடன் ஒன்றுபட்டு செயல்படும் ஒத்துழைப்பை உருவாக்கி களப்பிணிகளும், பன்னாட்டு பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து நாட்டில் தடுப்பூசிகள் அதிகம் பேருக்குக் கிடைப்பதை உறுதி செய்வார்கள். ஆதாரம்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்