<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவதும், இறப்பதும் நடக்கிற விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும்.</p> <p style="text-align: justify;">அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும்.</p> <p style="text-align: justify;">அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெற்று விடுகிறது.</p> <p style="text-align: justify;">இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும்.</p> <p style="text-align: justify;">விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். அவை சருமத்தில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.</p> <p style="text-align: justify;">சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும்.</p> <h3 style="text-align: justify;">சர்க்கரை ஃபேஸ் பேக்</h3> <p style="text-align: justify;">தேவையானவை :1</p> <p style="text-align: justify;">சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்</p> <p style="text-align: justify;">ஆலிவ் ஆயில் - 2 சொட்டு</p> <p style="text-align: justify;">எலுமிச்சை சாறு - 2 சொட்டு</p> <ul> <li style="text-align: justify;">எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும்.</li> <li style="text-align: justify;">சர்க்கரை இறந்த செல்களை அகற்றும்.</li> <li style="text-align: justify;">ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும்.</li> <li style="text-align: justify;">ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.</li> <li style="text-align: justify;">பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.உங்கள் முகம் பளிச்சிடும்.</li> </ul> <h3>மருவெல்லாம் போக்க</h3> <p style="text-align: justify;">தேவையானவை 2:</p> <p style="text-align: justify;">சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்</p> <p style="text-align: justify;">தேன் - 1 டேபிள் ஸ்பூன்</p> <ul> <li style="text-align: justify;">இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காய விடவும். அதன் பின் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள்.</li> <li style="text-align: justify;">வாரம் இருமுறை செய்தால், மாசு, மருவெல்லாம் போயே போச்சு. சருமத்தை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: மாலைமலர் நாளிதழ்</p> </div>