<div id="MiddleColumn_internal"> <h3>தாய்நலமும் ஊட்டச்சத்தும்</h3> <ul> <li style="text-align: justify;">பேறுகாலத்தில் ஏறத்தாழ 9-11 கி.கி. எடை கூடும்.</li> <li style="text-align: justify;">தாயின் நலத்தைப் பேணவும், வளரும் கருவின் தேவைகளை நிறைவு செய்யவும், குழந்தைப் பிறப்பின் போது தேவைப்படும் வலிமையையும் உள்ளுரத்தையும் வழங்கவும்,</li> <li style="text-align: justify;">போதுமான அளவுக்குப் பால்சுரக்கவும் கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.</li> <li style="text-align: justify;">தாய்க்கு இரத்தச்சோகை நோய் இருந்தாலும் கரு தனக்குத் தேவையான இரும்புச்சத்தைத் தாயிடம் இருந்தே எடுத்துக்கொள்கிறது.</li> <li style="text-align: justify;">அதனால் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி, ஈரல், முட்டை, பச்சைப்பட்டாணி, பருப்புகள், கீரைகள், பேரீச்சை ஆகியவற்றை உட்கொள்ள தாயை ஊக்கப்படுத்த வேண்டும்.</li> <li style="text-align: justify;">கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், எளிதில் செரிமானம் அடையத் தக்கதாகவும், புரதம், தாது, உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">குறைந்த அளவு ஒரு லிட்டர் பால், ஒரு முட்டை, நிறைய பச்சைக் காய்கறிகள் பழங்களைக் முக்கிய உணவோடு கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தேசிய சுகாதார இணையம்</p> </div>