<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">பெருகி வரும் மெட்ராஸ் ஐ : தடுக்க வழிகள்</h3> <ol style="text-align: justify; "> <li><span>கைகளால் கண்களை தேய்க்காதீர்கள் இதனால் கைகளில் இருக்கும் கிருமிகள் எரிச்சலை உண்டாக்கும்.</span></li> <li><span>லென்ஸ் உபயோகிப்பவர்கள் அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளவும்.</span></li> <li><span>கணினியை தொடர்ந்து பார்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். முடிந்த வரை தூரத்தில் பார்ப்பது நல்லது.</span></li> <li><span>அவ்வப்போது கண்களை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.</span></li> <li><span>கண் சொட்டு மருந்தை அடிக்கடி உபயோக படுத்துவதை தவிர்க்கவும்.</span></li> <li><span>கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும்.</span></li> <li><span>கண்நோய் வராமல் தடுக்க கண்ணாடிகளை பயன்படுத்தவும்.</span></li> <li><span>கண்நோய் வந்தவர்கள் கண்களின் மேல் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.</span></li> <li><span>கண்நோய் வந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.</span></li> <li><span>எல்லாவற்றிற்கும் மேலாக கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் இருப்பது நல்லது.</span></li> </ol> <p style="text-align: justify; ">ஆதாரம் : விகடன்</p> </div>