<div id="Middlecolumn_internal"> <h3>கண் பார்வை</h3> <ul> <li style="text-align: justify;">பார்வையைத் தெளிவாக்கும் எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.</li> <li style="text-align: justify;"><span style="text-align: justify;">உடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.</span></li> <li style="text-align: justify;"><span style="text-align: justify;">தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை.</span></li> <li style="text-align: justify;"><span style="text-align: justify;">சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர்.</span></li> <li style="text-align: justify;"><span style="text-align: justify;">எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.</span></li> </ul> <h4>மங்கலான பார்வை தெளிவடையும்</h4> <p style="text-align: justify;">எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும். ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது.</p> <p style="text-align: justify;">ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான பார்வை தெளிவடையும்.</p> <h4 style="text-align: justify;">கண்களில் பூ விழுந்தவர்களுக்கு</h4> <p style="text-align: justify;">பேரிச்சம்பழக்கொட்டையும், தாய்பாலில் இழைத்து அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள் குணம் பெறுவார்கள்.</p> <h4 style="text-align: justify;">கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள்</h4> <p style="text-align: justify;">கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில் போட்டு பதமாக வதக்கி சூடு ஆறியதும், கண்கள் மீது வைத்துக் கட்டி விட வேண்டும். இதைப் படுக்கப் போகும் போது செய்யவும்.</p> <p style="text-align: justify;">காலையில் அவிழ்த்து விட வேண்டும். குணம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யவும். எள்ளுப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தேன் உடலுக்கு பலத்தை தரும்.</p> </div>