<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <ul> <li style="text-align: justify;">விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</li> <li style="text-align: justify;">கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.</li> </ul> <h3>பயன்கள்</h3> <ul> <li style="text-align: justify;">ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.</li> <li style="text-align: justify;">ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள் கால்நடை உதவி மருத்துவரால் மதிப்பீடு செய்யப்பட்டு காதில் வில்லைகள் போடப்பட்டு அடையாளப்படுத்தப்படும்.</li> </ul> <h3>வழிமுறைகள்</h3> <ul> <li style="text-align: justify;">காப்பீடு செய்யும் கறவை பசுவின் பயனாளியும் சேர்த்து காதுவில்லை எண் தெரியும்படியாக நிழல்படம் எடுத்து பசுக்கள் காப்பீடு செய்யப்படும்.</li> <li style="text-align: justify;">பயனாளிகள் காதுவில்லைகள் தொலையாதபடி கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை தொலைந்துவிட்டால் காப்பீடு செய்த அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கால்நடைகளுக்கு திடீர் இறப்பு நேரும்போது அதிலிருந்து தங்கள் பொருளாதார இழப்பை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.</li> </ul> <h3>கேள்வி பதில்</h3> <p style="text-align: justify;">1. <strong>காப்பீடு செய்வதனால் பலன் என்ன?</strong></p> <p style="text-align: justify;">திடீரென கால்நடைகளில் இறப்பு ஏற்படுமாயின் அதனால் பண்ணைகளில் ஏற்படும் இழப்பிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழிமுறைதான் காப்பீடு.</p> <p style="text-align: justify;">2. <strong>எந்தெந்த கால்நடைகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகின்றது?</strong></p> <p style="text-align: justify;">ஆடு, மாடு, பன்றி, குதிரை மற்றும் நாய்.</p> <p style="text-align: justify;">3. <strong>கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய எங்கே அணுகுதல் வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">அருகில் உள்ள காப்பீடு வங்கிகளுக்கு சென்று அணுகலாம்</p> <p style="text-align: justify;">4. <strong>காப்பீடு செய்வதற்கு கால்நடைகளுக்கு வரையறை இருக்கின்றதா?</strong></p> <p style="text-align: justify;">ஆம். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள்</p> <ul style="text-align: justify;"> <li>ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்</li> <li>நோயின்றிக் காணப்படுதல் வேண்டும்</li> <li style="text-align: justify;">எந்த விதமான காயங்களும் இன்றி இருத்தல் வேண்டும்</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>கால்நடை பராமரிப்புத் துறை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை</p> </div>