இந்தியாவில் பட்டுத் தொழில் - ஒரு கண்ணோட்டம் இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம் கலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு நூலாக காஞ்சிபுரம் மற்றும் பனாரசி போன்ற பட்டு புடவைகள் திகழ்கிறது மல்பெரி இலைகளை உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புழுக்கள் கூடுகளை சுழற்றி, பின்னர் அவை பட்டு நூல்களாக மாற்றப்பட்டு துணியாக நெய்யப்படுகின்றன. உலகளவில் பட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோரில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கச்சா பட்டு உற்பத்தி 2017-18 ஆம் ஆண்டில் 31,906 மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 38,913 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 223,926 ஹெக்டேராக இருந்த மல்பெரி பரப்பளவு 2023-24 ஆம் ஆண்டில் 263,352 ஹெக்டேராக வளர்ந்தது. பட்டு மற்றும் பட்டு பொருட்கள் ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டில் ₹1,649.48 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ₹2,027.56 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம் கலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு நூலாக பட்டு திகழ்கிறது. காஞ்சிபுரம் புடவைகளின் செழிப்பு, பிரகாசமான வண்ணங்கள் முதல் பாகல்பூர் துசரின் அழகு வரை, ஒவ்வொரு பட்டுப் புடவையும் ஒரு கதையைச் சொல்கிறது. அவை தூய மல்பெரி பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கைவினைஞர்களால் கவனமாகவும் திறமையாகவும் நெய்யப்படுகின்றன. இந்தக் கைவினை தலைமுறை தலைமுறைகளாக உயிர்ப்புடன் திகழ்கிறது. தறி அவர்களின் கைகளின் தாளத்துடன் ரீங்காரமிடும்போது, பட்டுப் புடவை உயிர் பெறுகிறது. வெறும் ஆடையாக மட்டுமல்லாமல், பட்டுக் கலையால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவின் பன்முக மற்றும் துடிப்பான ஆன்மாவின் அடையாளமாக அது உருவெடுக்கிறது. இந்தியாவின் பட்டு வளர்ப்பு பயணம் பட்டுப்புழு வளர்ப்பு என்பது பட்டு தயாரிப்பதற்காக பட்டுப்புழுக்களை வளர்ப்பதாகும் மல்பெரி, ஓக், ஆமணக்கு மற்றும் அர்ஜுன் இலைகளில் பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் பட்டுக்கூடுகளை நூற்கிறார்கள். பட்டுக்கூடுகள் சேகரிக்கப்பட்டு மென்மையாக்குவதற்காக வேகவைக்கப்படுகின்றன. பட்டு நூல்கள் பின்னர் வெளியே இழுக்கப்பட்டு, நூலாகத் திரிக்கப்பட்டு, துணியாக நெய்யப்படுகின்றன. இந்தக் கவனமான செயல்முறை சிறிய பட்டுப்புழுக்களை பளபளப்பான பட்டாக மாற்றுகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பட்டின் பொருளாதாரப் பங்கு இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய பட்டு நுகர்வு நாடாகவும் உள்ளது. இந்தியாவில், மல்பரி பட்டு முக்கியமாக கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மல்பெரி அல்லாத பட்டு ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மல்பெரி பட்டு, மல்பெரி இலைகளை மட்டுமே உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து வருகிறது. இது மென்மையானது மற்றும் பிரகாசமான பளபளப்புடன் கூடியது. இது ஆடம்பர புடவைகள் மற்றும் உயர் ரக துணிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. நாட்டின் மொத்த மூல பட்டு உற்பத்தியில் 92% மல்பெரியிலிருந்து வருகிறது. மல்பெரி அல்லாத பட்டு (வான்யா பட்டு என்றும் அழைக்கப்படுகிறது) ஓக், ஆமணக்கு மற்றும் அர்ஜுன் போன்ற மரங்களின் இலைகளை உண்ணும் காட்டு பட்டுப்புழுக்களிலிருந்து வருகிறது. இந்த பட்டு இயற்கையான உணர்வைக் கொண்டுள்ளது. குறைந்த பளபளப்பைக் கொண்டுள்ளது, ஆனால் வலுவானது, நீடித்தது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பட்டு அதிக மதிப்புள்ளது, ஆனால் குறைந்த அளவில் உற்பத்தி ஆகும் பொருளாகும். இது உலகின் மொத்த ஜவுளி உற்பத்தியில் 0.2% மட்டுமே ஆகும். பட்டு உற்பத்தி பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகிறது. வளரும் நாடுகள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும் இதை நம்பியுள்ளன. இந்திய பட்டு சந்தை கண்ணோட்டம் இந்தியாவின் கச்சா பட்டு உற்பத்தி நிலையான வளர்ச்சியை அடைந்து, 2017-18 ஆம் ஆண்டில் 31,906 மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 38,913 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு 2017-18 ஆம் ஆண்டில் 223,926 ஹெக்டேராக இருந்த மல்பெரி தோட்டங்கள் 2023-24 ஆம் ஆண்டில் 263,352 ஹெக்டேராக விரிவடைந்துள்ளது, இது மல்பெரி பட்டு உற்பத்தியை 2017-18 ஆம் ஆண்டில் 22,066 மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 29,892 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. மொத்த கச்சா பட்டு உற்பத்தி 2017-18 ஆம் ஆண்டில் 31,906 மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 38,913 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. பட்டு மற்றும் பட்டு பொருட்களின் ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டில் ₹1,649.48 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ₹2,027.56 கோடியாக உயர்ந்துள்ளது. வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் (DGCIS) அறிக்கைகளின்படி, 2023-24 ஆம் ஆண்டில் நாடு 3348 மெட்ரிக் டன் பட்டு கழிவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. பட்டு கழிவுகள் உற்பத்தி செயல்முறையிலிருந்து எஞ்சிய அல்லது சரியற்ற பட்டு ஆகியவை உள்ளடைக்கியது அதாவது உடைந்த இழைகள் அல்லது கொக்கூன் துண்டுகள் போன்றவை. இது கழிவுகளாகக் கருதப்பட்டாலும், பட்டு நூல் அல்லது துணி போன்ற குறைந்த தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்க அல்லது புதிய பட்டுப் பொருட்களாக மறுசுழற்சி செய்ய அதை மீண்டும் பயன்படுத்தலாம். பட்டு வளர்ச்சியில் அரசு திட்டங்கள் இந்தியாவில் பட்டுத் தொழிலின் வளர்ச்சியில் அரசின் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த முயற்சிகள் பட்டு வளர்ப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி மற்றும் வளங்களை வழங்குகின்றன: பட்டு சமக்ரா திட்டம் இந்தியா முழுவதும் பட்டு வளர்ப்புத் துறையை மேம்படுத்த அரசு எடுத்துள்ள முக்கியமான முயற்சியே பட்டு ஒருங்கிணைப்புத் திட்டம். பட்டுப்புழு வளர்ப்பின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதும், நலிவடைந்த, ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அதிகாரம் அளிப்பதும் இதன் நோக்கமாகும். இத்திட்டம் நான்கு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப முயற்சிகள் விதை நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சந்தை மேம்பாடு மற்றும் தரச் சான்றிதழ் அமைப்புகள் (QCS) / ஏற்றுமதி பிராண்ட் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ரூ.4,679.85 கோடி பட்ஜெட்டில் இந்த முயற்சியின் விரிவாக்கமாக சில்க் சமக்ரா-2 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டுப்புழுக்களை வளர்த்தல் முதல் தரமான பட்டுத் துணிகளை உற்பத்தி செய்வது வரையிலான ஒட்டுமொத்த பட்டு உற்பத்தி செயல்முறையை மேம்படுத்த இத்திட்டங்கள் உதவுகின்றன. மூலப்பொருள் விநியோகத் திட்டம் (RMSS) பகுதி மாற்றங்களுடன் கூடிய நூல் விநியோகத் திட்டம் (YSS), மூலப்பொருள் விநியோகத் திட்டம் (RMSS) என மறுபெயரிடப்பட்டு 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தகுதியான கைத்தறி நெசவாளர்களுக்கு மானிய விலையில் தரமான நூல் மற்றும் அதன் கலவைகள் கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் (NHDP) 2021-22 முதல் 2025-26 வரை இயங்கும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் (NHDP), பட்டு துணி உற்பத்தியாளர்கள் உட்பட கைத்தறித் துறையில் உள்ள நெசவாளர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கைத்தறியின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வளர்ப்பதற்கும் கைத்தறி நெசவாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் தேவை அடிப்படையிலான அணுகுமுறையை எடுக்கிறது. இது மூலப்பொருட்கள், வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் சந்தைப்படுத்துதலுக்கு ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, இது நகர்ப்புற சந்தைகள் மற்றும் சந்தைப்படுத்தல் வளாகங்கள் போன்ற நிரந்தர உள்கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது, இது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களில் உள்ள நெசவாளர்களுக்கு பயனளிக்கிறது. ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டம் (SAMARTH) ஜவுளி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இது, தேவை சார்ந்த மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டமாகும். 3 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க ரூ. 495 கோடி பட்ஜெட்டில் 2 ஆண்டுகளுக்கு (நிதியாண்டு 2024-25 & 2025-26) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், ஆடை மற்றும் ஆடைத் தொழில், கைத்தறி, கைவினைப்பொருட்கள், பட்டு மற்றும் சணல் ஆகியவற்றில் தொடக்க நிலை பயிற்சி, அத்துடன் திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மூலம்: பிஐபி