இந்தியாவிற்கான நிலையான சுற்றுலா அளவுகோல்கள் சுற்றுலா அமைச்சகம், சுற்றுலாத் துறையின் மூன்று முக்கிய பிரிவுகளான சுற்றுலா ஆபரேட்டர்கள், தங்குமிடம் மற்றும் கடற்கரைகள், காயல் நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றுக்கு விரிவான நிலையான சுற்றுலா அளவுகோல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அளவுகோலை பங்குதாரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஆபரேட்டர்கள், "பாதுகாப்பான மற்றும் கௌரவமான சுற்றுலா மற்றும் நிலையான சுற்றுலா" ஆகியவற்றை நோக்கிய உறுதிப்பாட்டில் கையெழுத்திட வேண்டும். இது சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு தரங்களுடன் இணக்கமான நிலையான சுற்றுலா நடைமுறைகளை முழுமையாக செயல்படுத்துகிறது, இதனால் தற்போதைய சுற்றுலா வளத் தேவைகள், உள்ளூர் சமூக நன்மை மற்றும் எதிர்கால நிலையான பயன்பாடுகள் இரண்டையும் மேம்படுத்துகின்றன. இன்றுவரை, 2787 தங்குமிட அலகுகள் மற்றும் 1633 சுற்றுலா சேவை வழங்குநர்கள் சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்