உலக சிக்கன நாள் தனிநபர் மட்டுமல்லாமல் ஒரு ஒட்டுமொத்த தேசத்தின் சேமிப்பையும் பொருளாதார பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அக்டோபர் 31-ஆம் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. மெத்தைக்கு அடியிலும் வீட்டிலும் வைக்காமல் மக்கள் தங்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவிப்பதற்காக உலக சிக்கன நாள் உருவாக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு இதே நாள் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மரணம் அடைந்ததால், இந்தியாவில் இது அக்டோபர் 30-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1924-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் மிலனில் நடைபெற்ற முதல் உலக சிக்கன பேரவையில் அக்டோபர் 31-ஆம் நாள் உலக சிக்கன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சேமிப்பைப் பற்றிய நமது நடத்தைகளில் மாற்றம் ஏற்படுத்துவதும் வளத்தின் முக்கியம் பற்றி நமக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். சேமிப்பின் முக்கியத்துவம் சேமிக்கப்பட்ட சொத்து பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள உதவுகிறது. வியாபாரம் ஒன்றைத் தொடங்கவும், சிறந்த கல்வியைப் பெறவும், நல்ல சுகாதார பராமரிப்பைப் பெறவும் துணை செய்கிறது. சேமிப்பு பழக்கம் மக்களுக்கும் நாட்டுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. சிக்கனப் பழக்கம் இந்தியாவின் பழமையான ஒரு நற்பண்பாகும். சிறுவயதில் இருந்தே நமது பெற்றோர் சொத்து மற்றும் சேமிப்பைப் பற்றிய முக்கியத்துவத்தைப் போதித்து வருகின்றனர். "உங்கள் ஆடையை உங்களது உயரத்திற்குத் தகுந்தவாறு வெட்டவும்” என்பது ஒரு பழமொழி. “சுகமே சொத்து”, ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பொருள்வளம் தேவைப்படுகிறது. சிறுதுளி பெருவெள்ளம். சிறுசேமிப்பு நாட்டின் பொருளாதாரம் நகரும் சக்கரங்கள் ஆகும். பணத்தை நாம் எவ்வாறு சேமிக்கலாம்? செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடங்கவும் வரவுசெலவு திட்டத்தை உருவாக்கவும் ஞானமாக செலவழிக்கவும் முக்கியமாக தேவைப்படுபவற்றை மட்டுமே வாங்கவும் தேவைக்கும் பேராசைக்குமிடையில் உள்ள வேறுபாட்டை உணரவும் சுயநிறைவு உடையவர்களாக இருக்கவும் மின்சாரம், நீர் மற்றும் பிற செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் சேமிப்புக்கான இலக்கை வரையறுக்கவும் முதலீடு செய்யவும் நினைவில் வைக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் நோய், வேலையின்மை, மற்றும் பிற பொருளாதார சிக்கல்களுக்கு சேமிப்பு பாதுகாப்பாகும் உங்களது சிறு சேமிப்பு நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கிறது முறையான சேமிப்பும் முதலீடும் சிறந்த வருவாயை அளிக்கிறது சேமிப்பு வீணாவதைத் தடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுகிறது உங்கள் சேமிப்பு கணக்கை இந்தியா எங்குமுள்ள அஞ்சலகத்திலோ வங்கியிலோ துவங்கவும் 2025 கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள சேமிப்பு வங்கிகளால் நடத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகும் வகையில், WSBI ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அதைத் தொடர்ந்து சேமிப்பு அதிகரிப்பும் "நெகிழ்திறன்" கொண்ட தலைமுறைகளை உருவாக்குவதற்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். தனிப்பட்ட சேமிப்பு ஒரு கூட்டு இயக்கம் என்பதால், சமூகத்தை முன்னேற்றுகிறது. இளம் தலைமுறையினர் தங்கள் நிதியைத் திட்டமிட ஊக்குவிப்பது அவர்களுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து வலுவான சமூகத்தை உருவாக்கவும் உதவும். சேமிப்பின் மூலம் "உங்கள் நாளையை வெல்வோம்" என்பதே இந்த பிரச்சாரத்தின் மையக் கருத்து!