குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் “பொழுதுபோக்கு தொழில்துறை மற்றும் வணிக ரீதியான பொழுதுபோக்கு செயல்பாடு ஆகியவற்றில் குழந்தைகள் பங்கேற்பை ஒழுங்குபடுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை” வெளியிட்டுள்ளது. “ஊடக வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தத்திற்கான” ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையுடன் புதிய சட்டங்கள், கொள்கைகள் குழந்தைகளின் நல்லார்வம் ஆகியவற்றை இணைத்து இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் இணையதளத்தில் https://ncpcr.gov.in/ வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மீது பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. 31.07.2022 வரை கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்