தேசிய பாலர் தூய்மை திட்டம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் மாபெரும் தூய்மை திட்டமாக, மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2, 2014 அன்று தன் கையில் துடைப்பம் கொண்டு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் தொடக்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாலர் தூய்மை திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கு பள்ளிகளில் விளையாட்டுகள், பாடல்கள், கதை, உரையாடல்கள் மூலம் தூய்மையான பாலர் பள்ளிகள் தூய்மையான சுற்றுப்புறங்கள் தன்னைத்தானே தூய்மையாக வைத்துக் கொள்வது தூய்மையான உணவு சுத்தமான குடிநீர் தூய்மையான கழிப்பிடங்கள் போன்ற சுகாதார அறிவை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய பாலர் தூய்மை திட்டம் வகுக்கப்பட்டது. ஆதாரம்: இந்திய அரசு